PNB Loan Crisis : Privatize Banks or Nationalize Jewelries

  • One Intelligentsia : I am thinking aloud, If Nationalised Banks had been privatised, would these issues occur.
  • Me : Yes, It would still Occur. But If All Industries above 1 crore is Nationalised, this won’t occur
  • Intelligentsia : Blinks and Gulps and Moves Away

They say “Never Argue with Idiots. They bring you to their level and win through familiarity”
I would say that the first part of the logic always happen, but winning can be either way depending on how smart you are



Difference between Humble and Timid, Proud and Arrogant



  • The difference between Strong and Rude, Kind and Weak, Humble and Timid, Proud and Arrogant are all the same.
  • It is the same difference between Blood and Tomato Sauce. It depends on who exhibits them.
  • If it is by some one we like, call use former terms.
  • Else Latter terms


Anti Rabies Vaccine for Dog Bite. Availability in Primary Health Centre and Medical College

Some Times Truth is Stranger than Fiction
So
Let me share a real fact.

-oOo-

I joined Tamil Nadu Medical Services in 2004 and worked for three years in Primary Health Centres. In Primary Health Centres, Run by Department of Health, Government of Tamil Nadu, we used to give ARV (Anti Rabies Vaccine) any time the patient walks in.

And then
I came to Madras Medical College, a tertiary care institution and was shocked to find that Vaccines are given only from 8 AM to 11 AM and that too only on Working Days. . . I could not comprehend the rationale. I am sure that Dogs in areas round the medical college hospital do not follow Calendar and Watch when biting on unsuspecting individuals

-oOo-



So, you have two hospitals run by the Same Government, Same Ministry, Same Minister, Same Health Secretary

  1. A 24x7x365 Tertiary Care Hospital, with nearly 1000 doctors working and around 5000 beds, where Vaccines for dog bite are given only 3 hours for 6 days a week
  2. A Primary Health Centre, with just two doctors, where vaccines for dog bite are given any time the patient walks in

Logic says that you will expect better service in a Tertiary Care Hospital
But
In Reality, Primary Health Centres Provide Better Service

So, the administrative fact that is really fiction is that Tertiary Health Care gives better service 🙂

I did try to analyse why this happened and found the reason too

It was because

Anti Rabies Vaccine Multi Dose Vial
Anti Rabies Vaccine Multi Dose Vial

Earlier, Vaccines came in Multi Dose Vial. That is in a single bottle (or ampoule) there were many doses. So, they took the bottle out of the fridge and wanted to finish it off quickly. So they made people come within a narrow time window
But
Now, vaccines come in single dose vial. Only one dose in a bottle (or ampoule). So they can open the vial, give the injection and need not worry about keep it safe again

Anti Rabies Vaccines started in Medical Colleges a long time ago, So they followed the narrow time window. They did not think to change it when multi dose vials got replaced by single dose vials. They did not apply their mind. They did not take the new scientific advancement to their advantage. It is like a person who started using bicycle, continuing in bicycle even after two wheelers were invented

Anti Rabies Vaccine Single Dose Vial
Anti Rabies Vaccine Single Dose Vial

But
Primary Health Centres, where they recently started Anti Rabies Vaccines and at that time, they had single dose vials. So they did not have any time window

This also underlies lessons in Management :

  1. All Protocols need to be reviewed at regular intervals and see whether a new and better protocol be introduced taking into account a recent invention or scientific advancement
  2. Smaller institutions may have better protocols. So learning should be two way and the bigger institutions need not always push their ideas



பிடிக்காத துக்க செய்தியை மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏழு நிலைகள் – The Kübler-Ross Grief Cycle

சுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரான எலிஸ்பத் கூபர்-ராஸ் (எலிசபத்து கூபரு ராசு) துக்க நிகழ்வை ஒருவர் எதிர்கொள்ளும் முறையை விளக்கியுள்ளார். முதலில் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இந்த நிலைகள் மருத்துவர் எலிசபத் ராசினால் கூறப்பட்டாலும், எந்த வித துக்க நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும் என்று சில காலங்களிலேயே கண்டறியப்பட்டது.

எலிசபத் ராஸ் முதலில் கூறியது ஐந்து நிலைகள் தான். (மறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, ஏற்றுக்கொள்ளுதல்). சோதித்தல் என்பது பின்னர் சேர்க்கப்பட்டது. அதே போல் அதிர்ச்சி என்ற நிலையும் பின்னர் சேர்க்கப்பட்டது தான்

ஆக, ஒரு துக்க நிகழ்வை எதிர்க்கொள்ளும் மனித மனம் கீழ்க்கண்ட எழு நிலைகளை கடந்து வருகிறது

  1. அதிர்ச்சி
  2. மறுப்பு
  3. கோபம்
  4. பேரம்
  5. மனச்சோர்வு
  6. சோதித்து பார்த்தல்
  7. ஏற்றுக்கொள்ளுதல்




இதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்

உதாரணம் 1 : தேர்வில் தேர்ச்சியடையாத மாணவனின் மனநிலை

(பின்குறிப்பு : ஒரு 3 மணி நேரத்தில் 15 கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடையை வைத்து “தோல்வி” என்ற அடைமொழியை பயன்படுத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது)
தேர்வு முடிவு வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், தொலைகாட்சி, என்ற அவனது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்

The Kübler-Ross Grief Cycle in Tamil (படம் உதவி : குசும்பன் )
The Kübler-Ross Grief Cycle in Tamil (படம் உதவி : குசும்பன் )

இப்பொழுது தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

  1. அதிர்ச்சி : முடிவை பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் அவன் அதிர்ச்சி அடைகிறான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.
  2. மறுப்பு : “இல்லை. நான் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருப்பேன்”. “இதில் ஏதோ தவறு”. “இந்த நாளிதழ் தவறாக அச்சிட்டுள்ளது. அடுத்த நாளிதழை வாங்கி பார்ப்போம்”
  3. கோபம் : அனைவர் மேலும் கோபம். விடைத்தாளை திருத்தியவர் மேல் கோபம். அதிகம் 10 நிமிடம் தராத தேர்வரங்க ஆசிரியர் மேல் கோபம். கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
  4. பேரம் : எத்தனை தாள்களில் தேர்வாக வில்லை. ஒரே ஒரு தாள் தானா, பல தாள்களா
  5. மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”
  6. சோதித்தல் : மதிப்பெண் பட்டியலை சென்று பார்த்தல்
  7. ஏற்றுக்கொள்ளுதல் : அடுத்த தேர்விற்கு தயாராகுதல்



உதாரணம் 2 : தொழிற்சாலையில் விபத்து என்று கேள்விப்படும் தொழிலதிபர்

விபத்து என்று செய்தி வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். அலுவலகம் செல்வது, தொழிற்சாலை செல்வது, கூட்டங்கள், கேளிக்கை, கிளப்புக்கு சென்று சீட்டு விளையாடுவது என்ற அவரது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்

Kubler Ross Grief Cycle 7 Stages
Kubler Ross Grief Cycle 7 Stages

இப்பொழுது தொழிற்சாலையில் விபத்து என்றவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

  1. அதிர்ச்சி : செய்தியை கேட்டவுடன் முதலில் நடப்பது அதிர்ச்சி தான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு. நெஞ்சு வலி வரலாம். முச்சடைக்கலாம். ஏற்கனவே இதய நோயாளி என்றால் மாரடைப்பு கூட வரலாம்.
  2. மறுப்பு : “இல்லை, என் தொழிற்சாலையில் இருக்காது. அங்கு விபத்து நடப்பதற்கு வழியே இல்லையே. வேறு ஏதாவது இடத்தில் இருக்கலாம்”
  3. கோபம் : கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
  4. பேரம் : “எவ்வளவு சேதம்”, “அதில் எவ்வளவு விபத்து காப்பீடு உள்ளது”, “கொஞ்சமாவது தேறுமா”
  5. மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”
  6. சோதித்தல் : “விபத்து எப்படி நடந்தது” “யார் தவறு” “இனி இப்படி நடக்காமல் தடுப்பது எப்படி”
  7. ஏற்றுக்கொள்ளுதல் : “எப்படியும் அந்த டிவிசனை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று நினைத்தேன்” “இனி செய்துவிட வேண்டியது தான்”

மூன்றாவது உதாரணம் எழுதவில்லை. நீங்களே பொருத்தி பாருங்கள்.

  • பொருந்தி வருவது தெளிவாக தெரிந்தால் நீங்கள் மூன்றாவது நிலையை தாண்டி நான்காவது, ஐந்தாவது, ஆறாவது அல்லது ஏழாவது நிலையில் உள்ளீர்கள்
  • கோபப்பட்டால் மூன்றாவது நிலை
  • அந்த உதாரணம் பொருந்தாது என்று கூறினால் இரண்டாவது நிலை
  • முதல் நிலையில் இருப்பவர் இந்த இடுகையை வாசிக்கும் வாய்ப்பு குறைவு



வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ? : வலிப்பு நோயா ? : பாகம் 3

வலிப்பு நோயா ? : பாகம் 3 : வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ?
++++++++++++++++++++++++++++++++

வீட்டில்
********

1. மாத்திரைகளை தொடர்ந்து ஒழுங்காக சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை மாற்றுவதோ, அல்லது குறைப்பதோ கூடாது. போதுமான அளவு மாத்திரைகளை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். மாத்திரை தீரும் வரை காத்திருக்காமல், 4 நாட்களுக்கு முன்னரே வாங்கிவிட வேண்டும்.

2. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், அந்த நோய்களுக்கான சிகிச்சையை முறையாக எடுக்க வேண்டும். சிறிது கூட தாமதிக்கக்கூடாது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றிற்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தால், உணவுக்கட்டுப்பாடு தேவை. தங்களின் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், குடும்ப மருத்துவர் ஆகியோரின் ஆலோசனைகளை கடைபிடிக்கவும்

3. வேறு எந்த நோயும் இல்லாதவர்கள் கூட அதிக அளவு சர்க்கரை, மாவுச்சத்து ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்

4. ஒரு சிறு காகிதத்தில் தங்களின் பெயர், வலிப்பு நோயின் சரியான பெயர், எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண், குடும்ப மருத்துவரின் பெயர் மற்றும் எண் ஆகியவற்றை எழுதி (அல்லது தட்டச்சு செய்து) அதை ஒரு கண்ணாடிஉறைக்குள் (அல்லது லேமினேட் செய்து) சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்

வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ?
வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ?

5. தினமும் குளிக்கவும். தலைக்கு குளிக்கலாம்.
ஷவரில் குளிக்கலாம். அல்லது வாளியில் நீர் பிடித்து குளிக்கலாம்
குளியல் தொட்டியில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
குளியலறை/ கழிப்பறை கதவினை சாத்தவும், ஆனால் உள்ளிருந்து தாழ்ப்பாள் போடக்கூடாது.

6. குளியலறைக்குள் (அல்லது நீருக்கு அருகில்) மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். வலிப்பு ஏற்பட்டால் இவை நீருக்குள் விழுந்தால் மின் அதிர்ச்சி ஏற்பட (ஷாக் அடிக்க) வாய்ப்பு உள்ளது

7. அறைக்குள் தனியாக இருக்கும் போது உட்புறம் தாழ்ப்பாள் போடக்கூடாது. இரு பக்கமும் திறக்கும் பூட்டுகளையே வீட்டில் பயன்படுத்தவும்

8. கண் கண்ணாடி அணிபவராக இருந்தால் உங்கள் லென்ஸ்களை உடையாத லென்ஸ்களாக மாற்றுங்கள்

9. வீட்டினுள் முடிந்த அளவு கண்ணாடிகளை தவிர்த்து விட்டு, ப்ளாஸ்டிக் போன்ற உடையாத பொருட்களை பயன்படுத்த வேண்டும்
உதாரனமாக : கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தக்கூடாது. வலிப்பின் போது இவை உடைந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

10. சமையல் செய்யும் போது, பாத்திரங்களில் கைப்பிடி, சுவற்றை நோக்கி இருக்கும்படி வைத்துக்கொள்ளவும். ஒருவேலை வலிப்பு ஏற்பட்டால் கூட, உங்கள் கை அந்த கைப்பிடியில் பட்டு, கொதிக்கும் குழம்பு உங்கள் மேல் விழும் வாய்ப்பை அளிக்கக்கூடாது




அலுவலகத்தில்
*****************

11. உங்கள் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகள் ஆகியோருக்கு இதை தெரியப்படுத்துங்கள். 4ஆம் கருத்தில் கூறிய காகிதத்தின் ஒரு நகலை அவர்களுக்கு அளிப்பது சிறந்தது

12. கூர்மையான கருவிகள் பயன்படுத்தக்கூடாது

வெளியில் செல்லும் போது
*****************************

13. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது

14. ஏரி, குளம், கிணறு, அருவி ஆகியவற்றினுள் தனியாக செல்லக்கூடாது. நீச்சல் தெரிந்த நபர்கள் அருகில் இருந்தால் மட்டுமே நீர் நிலைகளுக்குள் செல்ல வேண்டும்



பொதுவாக
************

15. ஒரு நாட்குறிப்பேட்டில் (அல்லது கூகிள் காலெண்டரில்) வலிப்பு ஏற்படும் தேதி, நேரம் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்ளவும்

16. ஒழுங்கான தூக்கம் வேண்டும். முறையான நேரத்தில் தூங்க செல்வது நலம்.

17. வலிப்பு அறிகுறியை தோற்றுவிக்கும் காரணிகளை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். சிலருக்கு தூங்காவிட்டால் வலிப்பு வரும். அவர்கள் முறையாக தூங்க வேண்டும். சிலருக்கு விளக்கும் பளிச்சிட்டால் வலிப்பு வரும். அவர்கள் அது போல் பளிச்சிடும் விளக்குகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

18. வலிப்பு ஏற்பட்டாலோ அல்லது தலைவலி, பார்வை இரண்டாக தெரிவது, வாந்தி ஆகியவை ஏற்பட்டாலோ உடனடியாக 108 அழைத்து மருத்துவமனைக்கு வரவும்

-oOo-

இந்த கட்டுரை பலருக்கும் பயன்பட இதை உங்கள் பக்கத்தில் மற்றும் குழுக்களில் பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் சந்தேகங்களை மறுமொழியில் கேளுங்கள்

-oOo-

முதுகுவலி, எடை குறைப்பு, தலைவலி, கைகால்வலிப்பு (காக்காவலிப்பு) குறித்த தகவல்களை தொடர்ந்து வாசிக்க, இந்த பக்கத்தை விரும்பவும் (லைக் செய்யவும்)



ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ? : வலிப்பு நோயா ? : பாகம் 2

வலிப்பு நோயா ? : பாகம் 2
*****************************
ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ? கை கால் வலிப்பு (காக்காவலிப்பு) ஏற்பட்டால் மட்டும் தான் அது வலிப்பு நோயா ?

-oOo-

வலிப்பு நோய் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கு முன்னர்,
1. நோய் (Disease) அல்லது பிணி
2. நோய்குறி (Symptom / Sign)
3. நோய்குழு (Group of Diseases)
4. நோய்வீச்சு (Spectrum of Symptoms of a Disease)

ஆகிய பதங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்

-oOo-



நோய் என்றால் என்ன ? மனித உடல் தனது இயல்பான செயல்பாட்டினை இழப்பதே நோய் அல்லது பிணி ஆகும்

இப்படி இயல்பான செயல்பாட்டினை இழக்கும் போது உடலில் பல மாற்றங்கள் தோன்றுகின்றன. இவையே நோய்குறி

ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.
அதே போல் ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும்

நோய்வீச்சு (Spectrum of Symptoms of a Disease) என்றால் என்ன ? ஒரு நோயில் சில நோய்குறிகள் பிரதானமாக இருக்கும். ஆனால் அது தவிர பல நோய்குறிகளும் இருக்கும். இவை அனைத்து சேர்ந்தது ஒரு நோய்வீச்சு

அப்படி என்றால் நோய்குழு (Group of diseases) என்றால் என்ன ?
ஒரு நோய்குறி உள்ள பல நோய்கள் நோய்குழு என்று அழைக்கப்படுகின்றன

-oOo-

உதாரணமாக

ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ?
ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ?

மலேரியா (Malaria) என்பது நோய் (Disease)
இதன் முக்கிய நோய்குறி (Sign) காய்ச்சல் (Fever)
மலேரியா நோய் வீச்சு (Spectrum of Malaria) என்றா; காய்ச்சல் தவிர இரத்தத்தில் அணுக்கள் உடைவது, ஈரல், மண்ணீரல் பெரிதாவது என்று பலவும் இருக்கும்
காய்ச்சல் நோய்குழுவில் (Fever Group of Diseases) காய்ச்சல் பிரதானமாக உள்ள பிற நோய்களும் இருக்கும். உதாரணமாக – டைப்பாயிடு

-oOo-

கைகால் வலிப்பு (fits) என்பது ஒரு நோய் (disease) அல்ல.
அது ஒரு நோய்க்குறி (sign). மூளைக்குள் மின் இணைப்புகள் அல்லது வேதிபொருட்களில் ஏற்பட்ட பிரச்சனையினால் கைகால் தசைகள் முறையாக சுருங்கி விரியாமல் தாறுமாறாக சுருங்கி விரியும். இதுவே கை கால் வலிப்பு எனப்படுகிறது

இந்த கை கால் வலிப்பு ஏற்படக்காரணமான பிரச்சனை ஒன்று இருக்கும் அல்லவா. அது தான் நோய் (disease)

பல நோய்களில் கைகால் வலிப்பு அறிகுறி வரலாம் அல்லவா, அவை எல்லாம் சேர்ந்து தான் வலிப்பு நோய் (Epilepsy)

Epilepsy is a group of neurological diseases characterized by epileptic seizures. அதாவது வலிப்பு அறிகுறி ஏற்படும் அனைத்து நோய்களும் சேர்ந்த நோய்குழுதான் வலிப்பு நோய்கள்

-oOo-



இதில் முக்கியமான விஷயம்

வலிப்பு அறிகுறி என்பது வேறு (அது நோய்குறி) Fits or Seizures is a Sign
வலிப்பு நோய் என்பது வேறு (அது நோய்)
வலிப்பு நோய்கள் என்பது வேறு (அது நோய்க்குழு) Epilepsy is a disease group

வலிப்பு அறிகுறி என்பது பல காரணங்களினால் ஏற்படலாம்.
அந்த காரணங்களில் சில காரணங்கள் வலிப்பு நோய்கள்
Fits can occur due to various reasons. Epilepsy is one of them

வலிப்பு நோயில் பல நோய்குறிகள் அல்லது பாதிப்புகள் ஏற்படலாம்.
அந்த பல பாதிப்புகள் அல்லது நோய்குறிகளில் ஒன்று வலிப்பு அறிகுறி
Epilepsy can have various signs and Symptoms. Fits is one of them

அதே போல்

வலிப்பு அறிகுறி ஏற்படாத வலிப்பு நோய்களும் உள்ளன
Many diseases in epilepsy may not present with Fits

வலிப்பு நோய்கள் தவிர பல நோய்களிலும் வலிப்பு அறிகுறி ஏற்படலாம்
Fits can occur is conditions other than epilepsy

-oOo-



இதை திரும்ப திரும்ப கூறுவதன் நோக்கம் என்னவென்றால்

நமது மக்களில் பெரும்பாண்மையானவர்களுக்கு

நோய்க்கும்
நோய்குறிக்கும் வித்தியாசம் தெரியாது

எந்த காரணத்தினால் வலிப்பு அறிகுறி ஏற்பட்டாலும் அவை அனைத்தும் ஒரே மருந்தினால் சரியாகிவிடும் என்ற தவறான எண்ணம் பலருக்கும் உள்ளது

-oOo-

இப்பொழுது நாம் முதலில் பார்த்த மூன்றூ கேள்விகளுக்கும் விடை காணலாம்

1
ஒரு முறை வலிப்பு அறிகுறி வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ?

இல்லை !
அப்படி அவசியம் இல்லை

வலிப்பு அறிகுறி எந்த காரணத்தினால், எந்த நோயினால் வந்தது என்பதை கண்டு பிடித்து அது வலிப்பு நோயினால் வந்ததா, அல்லது பிற காரணங்களினால் வந்ததா என்று பார்க்க வேண்டும்

பிற காரணங்களினால் வந்தது என்றால்
அதாவது
வேறு நோய்களினால் வந்தது என்றால்
அந்த நோய்க்குரிய சிகிச்சை எடுத்தாலே போதும். வலிப்பு அறிகுறி அதன் பிறகு வராது

2
கை கால் வலிப்பு (காக்காவலிப்பு) ஏற்பட்டால் மட்டும் தான் அது வலிப்பு நோயா ?
இல்லை !
கை கால் வலிப்பு ஏற்படாமல் கூட வலிப்பு நோயின் பிற பாதிப்புகள் இருக்கலாம்

-oOo-

வலிப்பு நோயின் பிற நோய்குறிகள் யாவை ?

தொடர்ந்து பார்ப்போம்