Trust and faith….

Trust and faith….



333 BCE. Alexander’s army was passing through Cicilia (Modern day Turkey). Alexander the Great decided to take a bath in the icy water of the river Cidnus (Now called ‘Berdan’). The following day he developed fever, and gradually it led to febrile convulsions. The royal physicians accompanying the king were very scared and reluctant to treat him as they knew the consequence of any glitch in the treatment could cost their life. A physician named Philip from Acarnania was bold enough and came forward to treat Alexander. He prepared a medicinal draught for the seriously ill king. When Alexander was about to drink this potion, a letter arrived from Parmenio, one of his military generals. The letter accused that Persian king Darius III bribed Philip to poison Alexander. Alexander read the letter, and with the paper still in his hand, swallowed the cup of medicine. After finishing the medicine, he passed the letter to Philip. No, Alexander the Great did not die of poisoning; he recovered within a short time and led his army to conquer the world.





Many years later, in 1870, the Polish painter Henryk Siemiradzki described this incident in his painting. This story is so relevant for the present time. The story tells us about the importance of mutual trust between a doctor and a patient despite the harsh environment. If the trust is lost, no doctor will take the risk to treat a rare disease (how severe it is). And without a faith on his physician, no patient will progress towards recovery. Healing begins when both patients and physicians develop this trust.

கோவிட்19 தடுப்பு நடவடிக்கைக்கான பொது நடவடிக்கைகள் குறித்த கையேடு

கோவிட்19 தடுப்பு நடவடிக்கைக்கான பொது நடவடிக்கைகள் குறித்த கையேடு

  1. பொதுவான அறிவுரைகள்
  2. வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் / பிற நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  3. காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  4. பொது போக்குவரத்து உரிமையாளர்கள் / ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  5. மளிகைக்கடை / பழக்கடை / காய்கறி கடை / மீன் கடை / மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  6. அரசு அலுவலகங்கள் / தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  7. தங்கும் விடுதிகள் / உணவகங்களின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  8. கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  9. விடுகளில் வேலை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  10. குடியிருப்புகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  11.  வீட்டினுள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  12. குழந்தைகள் குறித்து கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்



  1. பொதுவான அறிவுரைகள்

  1. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரழிவு, அதிக உடற்பருமன், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருக்கவும்
  2. முறையான 2 அடுக்கு முகக்கவசம் பயன்படுத்தவும். கைகளை குறைந்தபட்சம் 40 முதல் 60 வினாடிகள் கழுவவும், உடல் நலன் இல்லை என்றால் வீட்டில் இருக்கவும்
  3. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த வித வேதியல் பொருட்களையும் பயன்படுத்தவேண்டாம்
  4. சந்தேகங்களை அலைபேசியில் / தொலைபேசியில் கேட்கவும். உடல் நலக்குறைவு என்றால் உடனே மருத்துவமனை செல்லவும்
  5. வீட்டில் தனிமைப்படுத்த வேண்டி இருந்தால் அடுத்தவர்களுடன் பழகவேண்டாம்
  6. ஏதாவது சந்தேகம் இருந்தால் 104 எண்ணிற்கு அழைக்கவும். அவசர சேவைக்கும் 108 எண்ணிற்கு அழைக்கவும்
  7. வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடவும்
  8. மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவவும்
  1. வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் / பிற நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்கும் படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கட்டிடத்தினுள் இடம் இல்லை என்றால் வெளியில் இடம் ஏற்படுத்த வேண்டும்
  2. கைகளை கழுவும் கிருமி நாசினி போதிய அளவில் இருக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும் போது கைகளை கழுவ வேண்டும்
  3. உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் கருவிகள் போதுமான அளவு இருக்கவேண்டும். 37 டிகிரி செல்சியல் அல்லது 98.6 டிகிரி பாரன்ஹைட் வெப்பத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளரை அனுமதிக்கவேண்டும்
  4. காசோலை செலுத்தும் பெட்டியை வங்கிக்கு வெளியில் வைக்கவேண்டும். இதன் மூலம் வங்கிக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்
  5. பணம் கையாளுபவர்கள் தங்களின் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்
  6. தானியங்கி பணம் வழங்கியில் இருக்கும் காவலர்கள் தங்களின் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் 1 மீட்டர் இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்
  7. அலுவலகம் மற்றும் தானியங்கி பணம் வழங்கி இரண்டும் அடிக்கடி கிருமி நாசினி கொன்று சுத்தப்படுத்தப்படவேண்டும்
  8. ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்
  9. கோவிட்19 குறித்த விபரங்களை அனைவரும் படிக்கும் படி வைக்கவும் வங்கியின் உள்ளேயும் வெளியேயும் வைக்கவும்



  1. காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. ரோந்து பணியில் இருக்கும் போது உங்களை நோய் தொற்றில் இருந்து காத்துக்கொள்ளவும்
  2. பிறரிடம் இருந்து 1-1.5 மீட்டர் அல்லது 6 அடி தூரம் கடைபிடிக்கவும்
  3. கைகளை கழுவவும்.. கைகளை கழுவாமல் முகத்தை தொட வேண்டாம்
  4. காய்ச்சல், இருமல், மூச்சு விட சிரமம் போன்றவை கோவிட்19 நோயின் அறிகுறிகள் என்று அறிந்து கொண்டு இவை இருந்தால் உடனே சிகிச்சை எடுக்கவும். நோய் தொற்று எற்பட்டதில் இருந்து 2 முதல் 14 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் ஏற்படலாம்
  5. பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகு துணிகளை துவைக்கவும்.
  6. மருத்துவமனைகள், தனிமை படுத்தல் நிலையங்கள் போன்ற இடங்களில் அல்லது அவற்றின் அருகில் பணிபுரியும் போது கையுரை, முகக்கவசம் அணியவும்
  7. அலுவலக கோப்புகள், தாள்கள் பயன்படுத்தும் போது கையுறை பயன்படுத்தவும்
  1. பொது போக்குவரத்து உரிமையாளர்கள் / ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் வாகனத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவும்
  2. ஓட்டுனரும் நடத்துனரும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணியவேண்டும். வாகனத்தினுள் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும்
  3. கைகளை சுத்தம் செய்ய போதிய அளவு கிருமி நாசினி வாகனத்தில் இருக்க வேண்டும்
  4. இருக்கை அமைப்புகள் குறித்த அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவேண்டும்
  5. பயணிகளின் வெப்பத்தை சோதிக்க வெப்பமானிகள் இருக்கவேண்டும்
  6. வாடகை சீருந்தில் முன் இருக்கையில் பயணிகளை அமர அனுமதிக்கக்கூடாது
  7. ஒட்டுனரோ, நடத்துனரோ கதவை திறந்தாலோ, அல்லது பயணிகளின் பொருட்களை கையாண்டாலோ, அவர்கள் தங்கள் கையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்
  8. காவல் துறையினரின் ஆணைகளை கடைபிடிக்க வேண்டும்
  9. சந்தை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்
  10. பயணம் முடிந்த பிறகு ஓட்டுனர்கள், நடத்துனர்கள், உதவியாளர்கள் கையை கழுவி, குளித்து, உடைகளை துவைக்க வேண்டும்
  11. வாகனத்தில் கோவிட்19 குறித்த விபரங்களை அனைவரும் படிக்கும் படி வைக்கவும்
  1. மளிகைக்கடை / பழக்கடை / காய்கறி கடை / மீன் கடை / மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கவும்
  2. கடையின் உள்ளேயும், வெளியேயும் சமூக இடைவேளையை கடைபிடிக்க போதிய வசதிகளை செய்து தரவும்
  3. தினமும் கிருமி நாசினி கொண்டு பொருட்கள் அலமாரிகள் போன்றவற்றை துடைக்கவும்
  4. பணிபுரிபவர்கள் முக கவசம் அணிய வேண்டும்
  5. பணிபுரிபவர்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
  6. வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிய வேண்டும்
  7. முடிந்தவரை வீட்டில் பொருட்களை கொண்டு கொடுக்கவும்
  8. கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி போதிய அளவில் இருக்கட்டும்
  1. அரசு அலுவலகங்கள் / தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. அனைத்து பணியாளர்களுக்கும் கோவிட்19 குறித்து கூறவேண்டும்
  1. தங்கும் விடுதிகள் / உணவகங்களின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 

  1. கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. சமூக இடைவேளையை பயன்படுத்தவும்
  2. கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைத்திருக்கவும்
  3. தொடாமல் வெப்பத்தை கண்டறியும் கருவி மூலம் உள்ளே வரும் அனைவரின் வெப்ப அளவை பார்த்து காய்ச்சல் உள்ளதா என்று சோதிக்கவும்
  4. கோவிட்19 குறித்த தகவல்களை அனைவரும் வாசிக்கும்படி வைக்கவும்
  5. கையால் தொடக்ககூடிய அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்யவும், துடைத்து வைக்கவும், கிருமி நாசினி பயன்படுத்தவும்
  6. முக கவசம் அணிவது கட்டாயம்
  7. ஆசிரியர்கள் தங்கள் உடல் நலன் மேல் அதிக கவனம் கொள்ள வேண்டும்
  8. அரசிடம் இருந்து வரும் உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்



  1. விடுகளில் வேலை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. வீட்டு வேலை செய்பவர்களுக்கு முக கவசம் அளிக்கவும். அவர்கள் வீட்டினுள் வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும்
  2. தேவைப்பட்டால் மட்டுமே வீட்டிற்கு வெளியில் செல்ல வேண்டும்
  3. வெளியில் சென்று வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும்
  4. போதுமான சமூக இடைவேளையை கடைபிடிக்கவும்
  5. உணவு பரிமாறும் போது கையுறை பயன்படுத்தவும்
  6. அவர்களுக்கு கோவிட்19 இருக்கும் என்று சந்தேகம் இருந்தால் அவர்களை சிகிச்சை எடுக்க சொல்லவும்
  1. குடியிருப்புகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. மின் தூக்கி பயன்பாட்டை முடிந்த அளவு தவிர்க்கவும். தவிர்க்கமுடியவில்லை என்றால் கிருமி நாசினி பயன்படுத்தவும்
  2. தூய்மை பணியாளர்களுக்கு போதிய உபகரணங்களை அளிக்கவும்
  3. போதுமான அளவு முக கவசம் மற்றும் கிருமி நாசினி வைத்துக்கொள்ளவும்
  4. மின் சாதனங்களை பழுது நீக்குவது, நீர் குழாய்களை பழுது நீக்குவது ஆகிய செயல்களை முடிந்த அளவு குறைவாக செய்யவும்
  5. விருந்தினர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
  6. விருந்தினர்களின் அடையாள அட்டை ஆகியவற்றை கையுறை அணிந்தே தொடும்படி காவல்காரர்களுக்கு அறிவுறுத்தவும்
  7. குடியிருப்பில் இருப்பவர்களுக்கு கோவிட்19 இருக்கும் என்று சந்தேகம் இருந்தால் அவர்களை சிகிச்சை எடுக்க சொல்லவும்
  1. வீட்டினுள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. வீட்டின் வெளியில் எதையும் தொடவேண்டாம்
  2. மின் தூக்கிகளை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்கவும். அப்படியே பயன்படுத்த வேண்டி வந்தாலும் முழங்கையால் பொத்தான்களை தொடவும்
  3. படிகள், கைப்பிடிகள் ஆகியவற்றை தொடவேண்டாம். தொடவேண்டிய நிர்பந்தம் இருந்தால் சானிடைசர் வைத்து கைகளை கழுவவும்
  4. வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது முககவசம் அணியவும்
  5. கடைத்தெரு செல்லும் போது அதற்குரிய காலணிகளை அணியவும்
  6. வீட்டிற்கு வெளியில் இருக்கும் போது முகம், கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடவேண்டாம்.
  7. கடைத்தெரு செல்வதை முடிந்த அளவு குறைக்கவும்
  8. வெளியில் இருந்து வரும் போது கதவுகளை தொடுவதை தவிர்க்கவும். வீட்டில் இருப்பவர்கள் கதவை திறந்து விடுவது நல்லது.
  9. விருந்துக்கு செல்ல வேண்டாம். விருந்தினர்களை அழைக்கவேண்டாம். விழாக்களை தள்ளி வைக்கவும்
  10. தானியங்கி பணம் வழங்கி சென்ற பிறகும், ரூபாய் நோட்டுக்களை கையாளும் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு போட்டு கழுவவும்
  11. முடிந்த அளவு இணைய வழியாக கட்டணங்களை செலுத்தவும்
  12. வீட்டிற்கு வரும் மின்சாதன பழுது நீக்குபவர், மின்நுட்ப தொழிலாளி, நீர் குழாய் சீர் செய்பவர் ஆகியோர் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறுங்கள், அணிவதை உறுதி செய்யுங்கள்
  13. வெளியில் இருந்து வாங்கி வந்த பழங்களை, காய்கறி பொருட்களை கழுவுங்கள். பிற பொருட்கள் மீது கிருமி நாசினி பயன்படுத்துங்கள்
  14. வெளியில் செல்லும் போது கொண்டு செல்லும் பைகளை சூரிய வெளிச்சத்தில் வைக்கவும்
  15. வெளியில் இருந்து வந்தவுடன் கை / கால்களை கழுவும் குளிப்பது சிறந்தது
  16. வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைக்கவும்
  17. தரை மற்றும் சுவர்களில் கிருமி நாசினி தெளிக்கவும். 1 சதம் சோடியம் ஹைப்போக்ளோரைட் கரைசல் பயன்படுத்தலாம்



  1. குழந்தைகள் குறித்து கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  1. பிற குழந்தைகளுடனும், பெரியவர்களுடனும் பழகும் போது  சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
  2. கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடக்கூடாது என்றும், அடுத்தவர்களுடன் கை குலுக்குவதோ, கட்டிப்பிடிப்பதோ கூடாது என்றும் சொல்லிக்கொடுங்கள்
  3. விளையாட்டுப்பொருட்கள், புத்தகங்கள், வீட்டினுள் விளையாடுவது, கணினியில் விளையாடுவது, இணையவழி வகுப்புகள் என்று அவர்களை எதாவது செயலில் ஈடுபடுத்திக்கொண்டிருங்கள்
  4. பள்ளியில் இருந்து இணையவழியில் பாடம் எடுக்கும்போது அதில் ஈடுபாடுடன் கவனிக்கச்சொல்லுங்கள்
  5. அடிக்கடி சோப்பு வைத்து கை கழுவ சொல்லுங்கள். அதே போல் அவர்கள் பயன்படுத்தும் துண்டு போன்றவற்றை தனியாக வைத்திருக்கச்சொல்லுங்கள்
  6. வெளியில் சென்று விளையாடுவது, அல்லது குழுவாக இருப்பது ஆகியவற்றை தற்சமயம் ஊக்குவிக்க வேண்டாம்
  7. சுவர்கள், கைப்பிடிகள் ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்

An Introduction to Revenue Department and Health Department

An Introduction to Revenue Department


English Persian Tamil English Tamil
32 District

 

ஜில்லா மாவட்டம் District Collector மாவட்ட ஆட்சித்தலைவர்
REVENUE DEPARTMENT
District ஜில்லா மாவட்டம் District Revenue Officer / DRO மாவட்ட வருவாய் அலுவலர்
76 Revenue Division கோட்டம் Revenue Divisional Officer / RDO கோட்டாச்சியர்
220 Taluk / Circle !! தாலுக் வட்டம் Tahsildhar வட்டாச்சியர்
1127 Firha பிர்கா குறுவட்டம் Revenue Inspector (RI) வருவாய் ஆய்வாளர்
16564 Revenue Village வருவாய் கிராமம் Village Administrative Officer (VAO) கிராம நிர்வாக அலுவலர்
Village கிராமம் Village Assistant (VA) கிராம உதவியாளர் தலையாரி

 

  • Once upon a time, before the era of service tax for mobiles and income tax for salaried persons, Tax on Lands were the main source of revenue for the governments
  • That is the reason why the department that was concerned with collection of land taxes was called Revenue Department
  • Different rates of taxes were laid as per the nature of the land
  • The British adapted the Mughal Revenue Setup and used the same terms. That is why most terms (like jamabandi) in Revenue Department are in Persian
  • The main work of the Revenue department was COLLECTION OF TAXES – Hence the person heading the department got the name Collector.
  • Have you heard the term Circle Inspector? and wondered what it means. It means that those days, there was only one inspector for the who circle ie One Inspector for the entire Tahsil. That is only around 300 inspectors for the whole of TN
  • Even today, the main arm of the government in civilian services is revenue department.

-oOo-



அசல் أصل மூலம்
மாஜிماضي முந்தைய
அத்து حد வரம்பு
முகாம்مقام தங்குமிடம்
அத்தர் عطر மணப்பொருள்
முலாம்ملام மேற்பூச்சு
அமுல் عمل நடைமுறை
ரத்துرد விலக்கு/நீக்கம்
அனாமத்أنعمت கேட்பாரற்ற
ரசீதுرصيد ஒப்புப் படிவம்
அல்வாحلوه இனிப்பு
ராஜிراضي உடன்பாடு
ஆஜர்حاظر வருகை
ருஜுرجوع உறுதிப்பாடு
ஆபத்துآفت துன்பம்
ருமால்رمال கைக்குட்டை
இனாம்انعام நன்கொடை
லாயக்لائق தகுதி
இலாகாعلاقة துறை
வக்கீல்وكيل வழக்குரைஞர்
கஜானாخزانة கருவூலம்
வக்காலத்துوكالة பரிந்துரை
காலிخالي வெற்றிடம்
வகையறாوغيره முதலான
காய்தாقاعدة
தலைமை/வரம்பு
வசூல்وصول திரட்டு
காஜிقاضي நீதிபதி
வாய்தாوعده தவணை
கைதிقيد சிறையாளி
வாரிசுوارث உரியவர்
சவால்سوال
அறைகூவல்/கேள்வி
சர்பத்شربة குளிர்பானம்
ஜாமீன்ضمان பிணை
சரத்துشرط நிபந்தனை
ஜில்லாضلعة மாவட்டம்
தகராறு تكرار வம்பு
தாவா دعوة வழக்கு
திவான் ديوان அமைச்சர்
பதில் بدل மறுமொழி
பாக்கி باقي நிலுவை
மஹால் محل மாளிகை
ஜமாபந்தி ஒன்றுகூடல்
ஃபிர்கா அலகு
மகசூல்محصول அறுவடை
மாமூல்معمول வழக்கம்

இது அரபு அல்லது, உருது, அல்லது பாரசீக மூலம்
இந்தியாவின் வருவாய் நிர்வாகம் செர் ஷா சூரியால் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அக்பர் அதை விரிவுபடுத்தினார். ஔரங்கசீப் ஒழுங்குபடுத்தினார்
ஆங்கிலேயர்கள் வந்த போது, அதை அப்படியே எடுத்துக்கொண்டார்கள். Don’t reinvent the wheel என்பதன் அடிப்படையில் அதை அவர்கல்
அதில் சில சிறப்பம்சங்கள் பின்னாட்களில் வந்தன. உதாரணமாக நம்மிடம் (இதுவரை) Title Deed கிடையாது. நீங்கள் ஒரு நிலம் வாங்கினால், அது தொடர்பாக மூன்று இடங்களில் பதிவுகள் இருக்கும்
பதிவு துறை – இது பத்திரம்
வருவாய் துறை – இது பட்டா
அளவை துறை – சர்வே எண்
காரணம்
ஷெர் ஷாவின் வருவாய் துறையும்
சார்லஸ் ப்ரிடேலின் பதிவுத்துறையும்
டாட்டன்ஹேனின் மாவட்ட அலுவலர் கையேடும்
இதனால் தான் எளிதாக நிலத்தை திருட முடியாது.
-oOo-
ஜில்லாضلعة மாவட்டம்
ஃபிர்கா அலகு
இரண்டிற்கும் இடையில் இரு சொல் உள்ளது
அது தாசில் – வட்டம்
மற்றொரு சொல்லும் உள்ளது, தலையாரி
ஜில்லா – மாவட்டம் – கலெக்டர் – மாவட்ட ஆட்சித்தலைவர்
தாசில் – வட்டம் – தாசில்தார் – வட்டாச்சியர்
பிர்கா – குறுவட்டம் – வருவாய் ஆய்வாளர் ரெவன்யூ இண்ஸ்பெக்டர்
வருவாய் கிராமம் – கிராம நிர்வாக அலுவலர்
கிராமம் – கிராம உதவியாளர் – தலையாரி
இதில் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், வருவாய் கிராமத்திற்கும் உருது சொல் இல்லை. காரணம் முதல் பதவி ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது, அடுத்த பதவி நம்மால் மாற்றப்பட்டது உருவாக்கப்பட்டது (கிராம மணியம் தான் – கிராம நிர்வாக அலுவலர் ஆனது. இது ஒரு சுவாரசியமான தனிக்கதை)
-oOo-
ஒரு காலத்தில் மாநிலத்திற்கே ஒரு ஐஜி தான் இருந்தார்
அப்பொழுது ஒரு வட்டத்திற்கு ஒரு காவல் நிலையம் தான் இருந்தது. அவர் தான் சர்க்கிள் இண்ஸ்பெக்டர்
வட்டம் – சர்க்கிள்
நம் மக்கள் சரியாகத்தான் பெயர் வைத்துள்ளார்கள்




An Introduction to Health Department

 

English Persian Tamil English Tamil
32 District ஜில்லா மாவட்டம் District Collector மாவட்ட ஆட்சித்தலைவர்
PUBLIC HEALTH DEPARTMENT
District ஜில்லா மாவட்டம்
40 Health Unit District (HUD) சுகாதார மாவட்டம் Deputy Director Health Services (DDHS) துனை இயக்குனர் சுகாதார பணிகள்
365 Block Primary Health Centre (Block PHC) முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம் Block Medical Officer (BMO)

Block Health Supervisor (BHS)

Community Health Nurse (CHN)

வட்டார மருத்துவ அலுவலர்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (வ.சு.மே)

சமுக  சுகாதார செவிலியர் (ச.சு.செ)

 

1619 (not sure of the present value) Additional Primary Health Centre (Additional PHC or PHC) ஆரம்ப சுகாதார நிலையம் Medical Offier (MO)

PHC Level Health Inspector

Sector Health Nurse (SHN)

மருத்துவ அலுவலர்

ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்

பகுதி சுகாதார செவிலியர் (ப.சு.செ)

8848 (not sure of the present value) Health Subcentre (HSC) துனை சுகாதார நிலையம் Health Inspector (HI )
Village Health Nurse (VHN)
சுகாதாய ஆய்வாளர் (சு.ஆ.)

கிராம சுகாதார செவிலியர் (கி.சு.செ)

-oOo-




.

Fallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா

கேள்வி

Fallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா…

பதில்

இந்த அடைப்பு எதனால் எற்பட்டது என்பதை பொறுத்து தீர்வு மாறுமடும்
உதாரணமாக
காச நோயினால் இந்த அடைப்பு ஏற்பட்டிருந்தால்
பேலியோவினால் தீர்வு கிடைக்காது

கேள்வி

எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியுமா ?

பதில்

இது நபருக்கு நபர் மாறுபடும் மேடம்

Fallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா
Fallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா

நிறைய விஷயங்கள் உள்ளன
இதை ஒரு வரியில் அல்லது ஒரு பதிவில் விளக்க முடியாது
எளிமையாக சொல்லவேண்டும் என்றால்
உங்கள் எடை அதிகமாக இருந்து
உங்களுக்கு PCOD இருந்தால் –> பேலியோ மூலம் மட்டுமே தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது
வேறு பிரச்சனைகள் என்றால் –> மருத்துவரை நம்புவது நல்லது. அனைத்து விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 9 வருடம் படிக்க வேண்டும்

நீங்கள் ஒரு மருத்துவரிடம் உதவி கேட்கலாம்
உதாரணமாக :
1. கர்ப்பம் தரிப்பதில் சில பிரச்சனைகள் உள்ளன. அவற்றை தீர்க்க ஆலோசனை கேட்பது என்பது உதவி கேட்பது
2. அறுவை சிகிச்சை தேவையென்றால் அதை செய்யச்சொல்வது உதவி கேட்பது
அல்லது
நீங்கள் ஒரு மருத்துவரிடம் சந்தேகம் கேட்கலாம்

சந்தேகத்தை உதவியாக
அல்லது
உதவியை சந்தேகமாக
கேட்டால்
குழப்பமே மிஞ்சும்

நீங்கள் தற்சமயம் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால்
அல்லது
சிகிச்சை எடுக்க நினைத்துக்கொண்டிருந்தால்
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு வரும் விடைகள் மூலம்
குழப்பத்தில் ஆழ்வீர்கள்
என்பது என் கருத்து

கேள்விகளை நேரடியாக கேளுங்கள்
ஒருவேளை இங்கு தயக்கம் என்றால்
மற்றொரு மருத்துவரிடம் கேளுங்கள்

அதை விடுத்து
கேள்வியை சிறிது மாற்றி கேட்டால்
பதிலில் சிறிது மாறி வரும்
உங்கள் குழப்பம் அதிகரிக்குமே தவிர குறையாது

-oOo-




//எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியுமா//

இதற்கு பதிலாக

குழந்தையில்லாமல் இருக்கும் பெண் ஒருவருக்கு மருத்துவர் லேப்பரஸ்கோப்பி பரிந்துரைத்துள்ளார்
அந்த பெண் பயப்படுகிறார்
என்ன செய்ய வேண்டும்

என்ற கேள்வி வந்திருந்தால்

அதற்கு நாங்கள் அளிக்கும் பதில் மூலம்
குழப்பத்திற்கு விடை கிடைத்திருக்கும்

அப்படி இல்லாமல்
//எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியுமா//
என்று கேட்கும் போது
இதற்கு பதில்
எதனால் அடைப்பு என்பதை Laproscopy செய்தால் தான் தெரிந்துகொள்ள முடியும் என்று இல்லை
சில நேரங்களில் Laproscopy இல்லாமல் தெரிந்து கொள்ளலாம்
சில நேரங்களில் Laproscopy அவசியம்
என்று தான் வரும்

இந்த பதிலானது
நீங்கள் கேட்ட கேள்விக்கு சரியானது தான்

உங்கள்
உங்கள் குழப்பம் அதிகரித்திருக்கும்
உங்கள் நோக்கம் நிறைவேறியிருக்காது

இது தான் – தவறான கேள்விகள் தான்
மருத்துவர் நோயாளி கருத்து பரிமாற்ற பிரச்சனைக்கு
அதாவது
மருத்துவர் ஒன்றுமே சொல்ல மாட்டேங்கிறார் என்ற நோயாளியின் புலம்பலுக்கும்
என்ன சொன்னாலும் திரும்ப திரும்ப கேட்கிறார்கள் என்ற மருத்துவரின் சலிப்பிற்கும்
வேர்க்காரணம்
இது போன்ற
பாதி மறைத்து பாதி வெளிப்படுத்தி கேட்கும் கேள்விகள் தான்

மருத்துவரை பொறுத்தவரை
கேட்ட கேள்விக்கு பதில் கூறியாகிவிட்டது

நோயாளியை பொறுத்தவரை
குழப்பம் தீரவில்லை

ஏன்
என்ன காரணம்

காரணம் என்னவென்றால்
நோயாளி தவறான கேள்வியை கேட்டார்

-oOo-



Professional Advice and Negotiation

https://www.facebook.com/groups/tamilhealth/permalink/1469899006533907

Professional Advice and Negotiation

Getting Professional Advice
and
Doing Business are two different entities

(though both co exist most of the times)

-oOo-

Suppose
I go to a Civil Engineer

Getting Professional Advice –> The Plan
Doing Business –> The Payment

Now
I need to ask the Payment Upfront
Assume He says Rs 10000.
I have the following Options

1.
I pay that
2.
I find it costly and hence come back
3.
I ask him whether he can reduce it to Rs 9000
and If he agree -> 1. I pay that
and if he does not agree –> 2. I come back

There ends the business part

The Negotiations end with the business part itself

I should not portray my negotiation skills over the next part of Professional Advice

That is
When he gives a plan, I just need to follow it
I should not ask why a pillar is here or whether the pillar can be moved

The sort of “It is my House. I have the full right to change the pillar location or I have the full right to not have a pillar” attitude makes sure that the house will collapse

-oOo-

Same way
When a Civil Engineer Comes to a doctor, there is both business and professional advice parts

The doctor charges Rs 1000 as consultation Fees. The Civil Engineer can either Pay or Go Back or Ask for Concession.
The negotiation has to end at that time

When doctor says Take 4 tablets
He has to take four tablets
He cannot alter the tablets or reduce or stop thinking that “it is my body. I have the right to question. I have the right to change” Such attitude will ensure increased morbidity and mortality

You need to learn to know where to negotiate and where to follow when you are interacting with professionals

The First Advice Which the doctor says to you is what is best for you

IF you are going to given an alternative and ask whether it can be followed,

The doctor may say yes –> If that is right
The doctor may say no –> if that is wrong

But
What is the most important point

Is that
Even if your option is inferior to the one which doctor said in first instance (which would be the case most of the time) The doctor can only say YES if that is not wrong

In the end
Because of your “Cashewnut” attitude, You end of with an inferior option

So Decide what you want when you are seeking professional advice

Do you want “the Best Advice”
or
Do you want “EgoMassage”

Both cannot co exist in most, if not all, of the scenario.

Professional Advice and Negotiation
Professional Advice and Negotiation

Are you just shocked on reading this. Then you are in Shock Phase

Do you think this is wrong. That is Denial

Do you get angry that I am denying your right over your body. That is Anger

Professional Advice and Negotiation
Professional Advice and Negotiation

Do you say that “We need to look at an middle path.” “It is not that patient has to be mum” blah blah. That is bargaining phase

Have you realized what was your earliest mistake and now decided to change

Well that is acceptance phase of Kübler-Ross model

-oOo-

Fallopian tubal block இதற்கு பேலியோவில் தீர்வு கிடைக்குமா

Update : 2023 09 09

//But the patient couldn’t walk so we asked for alternative medications not that we are preferring inferior drugs.//

Dear Dr
I have not seen the patient.
I cannot say why that doctor chose Amlodipine.
But
He must have weighed in many factors before chosing that

//There are lot more anti hypertensives that Amlodipine//

There are many anti hypertensives
No doubt
For a patient on a day, one will be superior and other will be inferior
This applies not only to Anti HT, but to any class of drugs (Anti epileptics, Pain Killers, Anti depressants etc)
So
Though all drugs may be equal theoretically
There is always a grade when you want to chose for a patient for that day

//not that we are preferring inferior drugs.//

This does not mean Propanolol or Ramipril or Losartan is inferior to Amlodipine
This means that Amlodipine is more suited for that patient as per that doctor.

Again
I don’t know the patient
I am just explaining the line of thought here
If you feel that the doctor is wrong
You can always consult another doctor
But
Don’t try to negotiate the professional advice

Professional Advice is not like Buying a Mobile or Shirt or booking Movie tickets
This is what I wanted to say in this context

//I asked him to change the medication//

With due respects, this is wrong
When you consult a professional, be it lawyer, or auditor or architect, you cannot dictate what they have to do
If you feel you can dictate what they want to do
Then you have to do it yourself

// as the patient (my relative) was unable to walk properly due to the edema, but to my shock the doctor said I cannot treat this patient. He vehemently asked us to leave and to submit his fees//

I think he is within his rights to say this
When you are dictating the treatment
This is the case of interfering with professional advice
I give my bike to a mechanic and if i chose a sub standard brand of clutch wire and ask him to use that, he has every right to say “I won’t repair your bike. Go elsewhere”
If I go to an auditor and ask him to change the Filing Category, he has every right to say “I can’t file your returns, Go Elsewhere

//What this behavior from doctors nowadays and that too a general physician?//

This is a correct behaviour
That physician is focusing on care and not on ego massage

BCG (Bacille Calmette-Guerin) Vaccine Trial. FAQ (Frequently Asked Questions)

BCG (Bacille Calmette-Guerin) Vaccine Trial. FAQ (Frequently Asked Questions)

BCG (Bacille Calmette-Guerin) Vaccine Trial. FAQ (Frequently Asked Questions)
BCG (Bacille Calmette-Guerin) Vaccine Trial. FAQ (Frequently Asked Questions)

Question : Will BCG vaccine really benefit to control COVID in elderly ?
My Answer : Yet, It will. But, “control”, (like Prevent or Save) is a wrong word to be used. The Right word is “Reduce”

BCG Vaccine won’t benefit to control COVID in elderly
BCG Vaccine won’t benefit to prevent COVID in elderly
BCG Vaccine won’t save elderly from COVID
But
BCG Vaccine will reduce Mortality and Morbidity in Elderly

To Substantiate this, they are planning to start a trial

பிசிஜி தடுப்பூசி போட்டால் கொரோனாவை தடுக்க முடியாது
பிசிஜி தடுப்பூசி போட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது
பிசிஜி தடுப்பூசி போட்டால் கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியாது

ஆனால்
பிசிஜி தடுப்பூசி போட்டால் கொரோனாவினால் ஏற்படும் நோய் பாதிப்புகள் குறையும்
பிசிஜி தடுப்பூசி போட்டால் கொரோனாவினால் ஏற்படும் நோய் தீவிரங்கள் குறையும்
பிசிஜி தடுப்பூசி போட்டால் கொரோனாவினால் ஏற்படும் மரணங்கள் குறையும்

இதை உறுதிப்படுத்தத்தான் ஆய்வு தொடங்கவுள்ளது

-oOo-




Question 2 : That too not proven right.? And many countries didn’t accept that experiment …
Answer 2 : Proven with Observational Studies
Example : Low Mortality and Morbidity in Portugal as compared with Spain

Question 3 : If it prevents mortality it’s fine. Otherwise experimenting on elderly those are already more riskier will not be accepted.
Answer 3 : Actually

We need to define the word experiment here

For Example

Experiment 1
If you give BCG to 10000 people in August 2020
and Take 10000 people as control
Do nothing else
And see the difference in Outcome in Feb 2021

Experiment 2
If you give BCG to 10000 people in August 2020
and Take 10000 people as control
Expose them to Corona Virus Filled Air in Jan
And see the difference in Outcome in Feb 2021

  • 1 is OK
  • 2 is wrong

This is the difference we need to understand

-oOo-



How 108 Emergency Care Functions in Tamil Nadu Government Hospitals

If you want to know as to How 108 Emergency Care Functions in Tamil Nadu Government Hospitals, you can read an earlier report and also this thread from Twitter @kachibhatla, Founder & CEO of AIMPLOY, Previously Founder and CEO of Bijlipay.



Short thread on how kickass our TN Government health services is! I am super impressed and wanted to share this with everyone. @NHM_TN @Vijayabaskarofl 1/n

At 9 pm approx (13 July), my security guard rings my doorbell sweating profusely, complaining of chest pain. We were in the midst of dinner and were totally unprepared for this. 2/n

Managed to get through to 108 in three tries and the ambulance reached us in less than ten minutes. The call centre girl was efficient and patched us to the ambulance driver quickly.

Both of them ask me mandatory Covid related questions and then a few more questions on exact location and asked us to have someone stand on the street, outside my building. 4/n

The Male nurse from the get-go, was extremely good. Handled the patient well… polite, respectful and empathetic. Once in the ambulance (in which I travelled along), he had a tough time with the patient who was unwilling to lie down, wouldn’t keep the oxygen mask on etc. 5/n

Kept his cool through out, while he tried to check his vitals and then put a line in, which was a struggle, as the man was totally uncooperative. Pretty soon, we were at Royapettah Hospital. 6/n

Now, this was perhaps my first time inside a proper government hospital…. I was impressed. The young doctors and nurses in the Triage section were great. The male nurse from the ambulance worked smoothly with them, like he was a member of staff. 7/n

All of them seemed to work hurriedly, as they handled about 15 patients and related attenders in the Emergency room. All with a great sense of purpose and no chaos at all. 8/n

Our patient needed to be pinned down, as he refused O2, pulled out the line which was inserted earlier etc. Big ups to all the nurses, who were super patient while taking his ECG, putting a new line & then calming him down (with some sedative I guess). 9/n

I step out of the emergency room to the car park to meet my driver who has now arrived. The male nurse from earlier has finished all his work and is walking back to the ambulance. 10/n

Now, the MAIN part… I holler and walk up to him… tell him I want to give him something… he says NO… I try again, this time actually bringing out a small wad of notes and he could see it was 500s… but again he said NO and said ’We are not supposed to take, brother!’ 11/n

There was nobody near us. This guy was real!! I couldn’t believe this. I’ve been in similar situations with the upmarket ambulance service (extremely professional), which came at a certain price & ending up in a private hospital, only to be hassled for tips by the lift boy! 12/n

I was so happy that this is the current scene in Chennai and I must say, I am loving it! Respect to these doctors and healthcare workers who are working selflessly, during these trying times. 13/n

Please do not speak disparagingly of TN Health services, if you have never experienced it. Love Chennai! Jai Hind!@Vijayabaskarofl @NHM_TN 14/n

Lastly, for those who asked, the patient is stable now. 15/15



மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone

“ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு சித்த மருத்துவம், நோய் முற்றினால் நவீன மருத்துவம்” என்பதன் மிகப்பெரிய ஆபத்து என்னவென்றால் நோய் முற்றிய பிறகு அதை சரி செய்யும் வாய்ப்பு குறைவு.

மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone
மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone

எனவே, எந்த நோய் என்றாலும், டெங்கு என்றாலும், கொரோனா என்றாலும், மஞ்சள்காமாலை என்றாலும் ஆரம்ப நிலையிலேயே நவீன விஞ்ஞான மருத்துவம் பார்த்தால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகம்.

மஞ்சள் காமாலையும் மஞ்சள் பத்திரிகைகளும் தவிர்க்க வேண்டிய மரணங்களும்
**********************************************************************************

உங்கள் கணினி திரையில் ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம். (நோய்க்குறி)
இது பல காரணங்களினால் (நோய்கள்) வரலாம்.

  1. திரையில் தவறு / கோளாறு / பிரச்சனை
  2. திரைக்கும் கணினிக்கும் இடையில் இணைக்கும் கம்பியில் (கேபிள்) தவறு / கோளாறு / பிரச்சனை
  3. கணினியில் தவறு / கோளாறு / பிரச்சனை

இது போல் பல காரணங்களினாலும் திரையில் ஒன்றும் தெரியாது.  திரையில் ஒன்றும் தெரியவில்லை என்றால் அதற்கு ஒரே தீர்வுதான் என்றால் நம்புவீர்களா

ஆனால்

கழுதை விட்டையை ஆட்டின் சிறுநீரில் கரைத்து ஒவ்வொரு நாழிகையும் ஏழு சொட்டு சாப்பிட்டால் அனைத்து வித காரணங்களினால் வரும் மஞ்சள் காமாலையும் தீர்ந்து விடும் என்று யாராவது மஞ்சள் பத்திரிகைகளிலோ, ஊடகங்களிலோ, சமூக ஊடகங்களிலோ எழுதினால் அதை அப்படியே நம்பி “மிக்க நன்றி” என்று பதில் கூறும், அந்த தகவல்களை பகிரும், மேலனுப்பும் புத்திசாலிகள் நிறைய பேர் உள்ளனர்

-oOo-

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு நோய்க்குறி. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை.

ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.
ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும். (பலவித காரணங்களினால் திரையில் படம் தெரியாமல் இருக்கலாம்)

இதனால் தான் மூடநம்பிக்கை மருத்துவ முறைகள் மற்றும் ஏ“மாற்று” நோய்குறிகளையே நோயாக கருதி தவறான சிகிச்சை அளித்து மக்களை கொன்றுவிடுகின்றன

-oOo-




இப்பொழுது மஞ்சள் காமாலைக்கு வருவோம்

அதற்கு முன் கொஞ்சம் அடிப்படை மருத்துவம் பயிலலாம்.

இரத்ததில் சிவப்பணுக்களும் வெள்ளை அணுக்களும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

இதில் சிவப்பணுவினுள் (Red Blood Cells – RBC) உள்ள ஹீமோகுலோபின் (Hemoglobin) என்ற பொருள் தான் பிராண வாயுவை (Oxygen) நுரையீரலிலிருந்து உடலின் பிற இடங்களுக்கு கொண்டு செல்கிறது. சிவப்பணுக்கள் சாகா வரம் பெற்றவை அல்ல. அவை ஒரு குறிப்பிட்ட காலம் பணி செய்த பின் இறந்து விடுகின்றன. அப்படி மரணித்த சிவப்பனுவினுள் உள்ள ஹீமோகுலோபின் சில வேதியியல் மாற்றங்களால் பிலிரூபின் (Bilirubin) என்ற பொருளாகிறது. இதை எதனுடனும் இணைக்கப்படாத பிலிரூபின் (Unconjugated Bilirubin) என்று அழைக்கிறார்கள்

இந்த பிலிரூபின் என்பது உடலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய பொருள். ஆனால் இணைக்கப்படாத பிலிரூபின் என்பது நீரில் கரையாத பொருள் (Water Insoluble) எனவே சிறுநீரகங்களால் இந்த இணைக்கப்படாத பிலிரூபினை அதிக அளவில் வெளியேற்ற முடியாது. கொஞ்சம்தான் வெளியேரும்.  இதற்கு நமது உடலில் ஒரு அருமையான ஏற்பாடு உள்ளது. ஈரலில் (கல்லீரல் / Liver) இந்த பிலிரூபினானது குலுக்குரோனிக் அமிலத்துடன் சேர்ந்து (Glucuronic Acid) இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது  (Conjugated Bilirubin) இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினனை சிறு நீரகங்கள் முழுமையாக வெளியேற்றி விடும்.

ஆகவே இரத்த அணுக்களில் உள்ள ஹீமோகுலோபினிலிருந்து பிலிரூபின் வருகிறது. இந்த இணைக்கப்படாத பிலிரூபின் இரத்தத்தில் இருக்கிறது. இது மஞ்சள் நிறப்பொருள். இது ஈரலில் இணைக்கப்பட்ட பிலிரூபின் ஆகிறது. இந்த இணைக்கப்பட்ட பிலிரூபினானது ஈரலிலிருந்து பித்தநீருடன் (பைல்) சேர்ந்து பித்த நாளங்கள் வழியாக (பைல் டக்ட்) இரைப்பை (டியோடினம்) வருகிறது. இதில் ஒரு பங்கு சிறுகுடலில் இருந்து இரத்ததிற்கு சென்று சிறுநீரகத்தினால் வெளியேற்றப்படுகிறது. ஒரு பங்கு மலத்துடன் வெளியேற்றப்படுகிறது. இதனால் தான் மலம் மஞ்சள் நிறமாக உள்ளது

இது தான் நமது உடலில் தினமும், ஏன் ஒவ்வொரு வினாடியும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்

-oOo-

வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஹீமோகுலோபின் உடைந்தால்

  1. அதிக அளவு பிலிரூபின் உருவாகிறது.
  2. இதில் ஒரு பகுதி இணைக்கப்பட்ட பிலிரூபினாகிறது
  3. மீதி இணைக்கப்படாத பிலிரூபினாக இரத்தத்தில் உள்ளது.
  4. இணைக்கப்படாத பிலிரூபின் அதிக அளவில் சிறுநீரில் வெளியேறுகிறது. எனவே சிறுநீர் வழக்கமான நிறத்திலேயே இருக்கும். அதாவது நிறமல்லாமல். இதனால் இந்த வியாதியை நிறமல்லா சிறுநீர் மஞ்சள் காமாலை என்றும் அழைக்கலாம் (acholuric jaundice)

இந்த வியாதியை ப்ரீ ஹெபாடிக் ஜாண்டிஸ் (Pre hepatic Jaundice – அதாவது பிலிருபீன் வழக்கமாக செல்லும் பாதையில் ஈரலுக்கு முன்னர் கோளாறு உள்ளது) என்று அழைப்பார்கள். பொதுவாக இரத்த அணுக்கள் அதிகம் உடைபடும் வியாதிகளில் (ஹீமோலைடிக் டிஸாடர் – hemolytic disorders) இந்த வகை மஞ்சள் காமாலை வரும். இந்த வகை மஞ்சள் காமாலைக்கு வைத்தியம் பார்க்க முதலில் இரத்த சிவப்பணுக்கள் உடைபடுவதை தடுக்க வேண்டும். கீழா நெல்லி உதவாது.

கீழா நெல்லி மட்டும் சாப்பிட்டாலோ, சூடு போட்டாலோ, இயற்கை வைத்தியம் என்றால் பெயரில் ஊரை ஏமாற்றும் மோசடி நபர்கள் கூறும் சிகிச்சைகளை எடுத்தாலோ மரணம் தான்

-oOo-




ஈரல் வேலை செய்யாவிட்டாலோ அல்லது வழக்கத்திற்கு குறைவாக வேலை செய்தாலோ

  1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் இரத்ததில் தேங்குகிறது
  2. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்படாத பிலிரூபின் வெளியேறுகிறது.

இந்த வகை வியாதிகளை ஹெபாட்டிக் ஜாண்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது பிரச்சனை ஈரலில் உள்ளது.

ஈரலில் என்ன பிரச்சனை என்றால்

  1. வேதியல் பொருட்களால் இருக்கலாம்.
  2. சில வகை மருந்து பொருட்களால் இருக்கலாம்.. முக்கியமாக – பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லி (அல்லது அறியாமல் சொல்லி) விற்கப்படும் / அளிக்கப்படும் சித்தா, ஆயுர்வேதா, யூனானி, ஹோமியோமதி மருந்துக்களில் பல ஈரலையும் சிறுநீரகத்தையும் நாசம் செய்ய வல்லவை. பக்க விளைவு இல்லாத மருந்து எதுவும் கிடையாது
  3. ஆட்டோ இம்யூன் டிஸார்டர் – உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது உடலுக்கு எதிராக செயல்படும் விநோத, வேதனை நிகழ்வு இது. அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி நோய்கிருமிகளை மட்டும் அழிக்காமல் உடலையும் அழித்து விடும். சில நேரங்களில் நோய்கிருமிகளுக்கு பதில் உடல் திசுக்களை மட்டும் அழித்துவிடும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்துமாவுக்கும் இது தான் காரணம்.
  4. கிருமிகளினால் இருக்கலாம்

கிருமிகள் என்றால்

  1. பேக்டிரியா
  2. வைரஸ்
  3. பங்கஸ்
  4. பூச்சிகள், புழுக்கள்

இதில் முக்கியமாக வைரஸ் என்று பார்த்தோம் என்றால் அதில்

  1. பிற நோய்களை உருவாக்கும் (அதே நேரத்தில் ஈரலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்) வைரஸ்கள்
  2. முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்கள்

இந்த இரண்டாவது முக்கியமாக ஈரலை மட்டும் தாக்கும் வைரஸ்களளில் 7 வகைகள் உள்ளன

  1. ஹெபடைட்டிஸ் A
  2. ஹெபடைட்டிஸ் B
  3. ஹெபடைட்டிஸ் C
  4. ஹெபடைட்டிஸ் D
  5. ஹெபடைட்டிஸ் E
  6. ஹெபடைட்டிஸ் F
  7. ஹெபடைட்டிஸ் G

இது போன்ற ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன. எனவே இது தானாகவே சரியாகிவிடும். கொஞ்ச நாட்களுக்கு எண்ணை மற்றும் கொழுப்பு சத்து அதிகம் இல்லாத உணவை சாப்பிட்டால் போதும்.

அது போல் சூடு போடுவதால் இது சரியாவதில்லை

கீழா நெல்லி என்பது இந்த நோய்க்கு (வைரஸ்) மருந்து அல்ல. அது ஈரலை விரைவில் குணமடைய வைப்பதாக நம்பப்படுகிறது

கீழா நெல்லி குறித்து பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு அவை உடலுக்கு (அதிக அளவில்) தீங்கு விளைவிப்பதில்லை என்று கண்டுபிடித்து உள்ளார்கள். (மற்ற சித்த, ஆயூர்வேத மருந்துகள் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படாமலேயே பக்க விளைவுகள் இல்லை என்று பொய் சொல்லப்படுகிறது)

இதில் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமிகளினால் வரும் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை தேவையில்லை
தானாக சரியாகிவிடும்
இந்த தானாக சரியாகும் மஞ்சள்காமாலைக்குத்தான் சிகிச்சை அளிப்பதாக கூறி ஊரை ஏமாற்றும் கும்பல் பணம் சம்பாதிக்கிறார்கள்

பிற வைரஸ்,
பேக்டிரியா
வைரஸ்
காளான் – பங்கஸ்
பூச்சிகள், புழுக்கள்

மூலம் வரும் மஞ்சள் காமாலைக்கு நவீன மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்றால் மரணம் தான்

-oOo-




ஈரலிருந்து இரைப்பைக்கு பித்தம் வரும் வழியில் எதேனும் அடைப்பு இருக்கிறது என்றால் என்ன நடக்கும்

  1. வழக்கமான அளவில் உருவாகும் பிலிரூபின் வழக்கமாக செயல்படும் ஈரலினால் இணைக்கப்பட்ட பிலிரூபினாக மாற்றப்படுகிறது
  2. பித்த நீர் வழியாக வெளியேற முடியாத இணைக்கப்பட்ட பிலிரூபின் மீண்டும் இரத்ததில் சேறுகிறது
  3. இரத்ததில் அளவிற்கு அதிகமான இணைக்கப்பட்ட பிலிரூபின் உள்ளது
  4. சிறுநீரில் அதிக அளவு இணைக்கப்பட்ட பிலிரூபின் வெளியேறுகிறது. சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுகிறது.
  5. இரைப்பைக்கு பித்த நீர் வராததால், கொழுப்பு சத்து ஜீரனிக்கப்படுவதில்லை.
  6. எனவே மலத்தில் கொழுப்பு சத்து வெளியெறுகிறது
  7. மலம் வெள்ளை நிறமாக உள்ளது.

இது போன்ற நிலைமைகளை போஸ்ட் ஹெபாடிக் ஜான்டிஸ் என்று அழைக்கிறார்கள். அதாவது ஈரலிலிருந்து பிலிரூபின் வெளியேறியபின் பிரச்சனை. அதுவும் பெறும்பாலும் எதேனும் அடைப்பு.
இந்த அடைப்பு

  1. ஈரலுக்கு உள்ளும் இருக்கலாம் – இண்ட்ரா ஹெபாடிக் Intrahepatic
  2. ஈரலுக்கு வெளியிலும் இருக்கலாம் – எக்ஸ்ட்ரா ஹெபாடிக் Extrahepatic

அதே போல் இது (இந்த அடைப்பு )

  1. பிறக்கும் போதே இருக்கலாம் – கன்ஜெனிடல் Congenital
  2. பிறகு வந்திருக்கலாம் – அக்கொயர்ட் Acquired

இதில் 20 வயதிற்கு மேல் திடீரென்று ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்து மலம் வெள்ளை நிறமாக அதிக கொழுப்புடன் வருகிறது என்றால் அதற்கு காரணம் எதோ அடைப்பு.

  • அது பித்த கற்களாகவும் (பைல் ஸ்டோன் Bile Stone) இருக்கலாம்
  • அல்லது புற்று நோயாகவும் (கான்ஸர் Cancer) இருக்கலாம்

முக்கியமான விஷயம், இது போன்ற நோய்களினால் வரும் மஞ்சள் காமாலை கீழா நெல்லி சாப்பிட்டாலோ அல்லது என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகாது. இதற்கு கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அதுவும் புற்று நோய் என்றால் ஆரம்ப கட்டத்திலேயே அறுவை சிகிச்சை செய்தால் தான் பிழைக்க முடியும்.

கல் அடைப்பு என்றால் அறுவை சிகிச்சை செய்த பிறகு பூரண குணமடையலாம்

மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone
மஞ்சள்காமாலை, ஈரல், பித்தப்பை கல் : Jaundice, Liver, Gall Bladder Stone

-oOo-

சாராம்சம் 1 :

மஞ்சள் காமாலை ஒரு நோய் அல்ல. அது நோய் குறி
நோய் முதல் நாடி, எதனால் மஞ்சள் காமாலை வருகிறது என்று கண்டறிய வேண்டியது அவசியம்

அப்படி பட்ட மூல காரணங்ளில் சில காரணங்களுக்கு சிகிச்சை தேவையில்லை, தானாக சரியாகிவிடும்
அப்படி பட்ட மூல காரணங்ளில் சில காரணங்களுக்கு சிகிச்சை அவசியம்

சாராம்சம் 2 :

மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது என்று நவீன விஞ்ஞான மருத்துவ முறைகள் மூலமே கண்டுபிடிக்க முடியும்

மூட நம்பிக்கை மருத்துவர்கள், ஹீலர்கள் என்று ஊரை ஏமாற்றும் மோசடி பேர்வழிகள், இயற்கை மருத்துவம் முகமூடி அணிந்து கொள்ளும் சமூக விரோதிகள் ஆகியோர்களால் மஞ்சள் காமாலை ஏற்படும் காரணங்களை கண்டுபிடிக்க முடியாது. ஹெபடைட்டிஸ் A, leptospirosis, gall stones, prehepatic jaundice என்று அனைத்து நோய்களுக்கும் இந்த சமூக விரோத மோசடி பேர்வழிகள் ஒரே (பலனளிக்காத) வைத்தியம் மட்டுமே கூறுவார்கள்.

சாராம்சம் 3 :

சிகிச்சை தேவையில்லை, தானாக சரியாகிவிடும் காரணங்களினால் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது என்றால் பிரச்சனையில்லை

சாராம்சம் 4 :

சிகிச்சை அவசியம் தேவைப்படும் காரணங்களினால் மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது என்றால் கண்டிப்பாக நவீன விஞ்ஞான மருத்துவத்தின் மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்
இல்லை என்றால் நோய் முற்றி மரணம் ஏற்படலாம்

மஞ்சள் காமாலயில் மூன்றுவகை

1. நவீன அறிவியல் மருத்துவ சிகிச்சை எடுக்காவிட்டாலும் குணமாகிவிடும்
2. நவீன அறிவியல் மருத்துவசிகிச்சை எடுக்காவிட்டால் மரணம்
3. நவீன அறிவியல் மருத்துவசிகிச்சை எடுத்தாலும் மரணம்

இந்த முதல் வகை மட்டுமே சித்த மருத்துவத்தில் குணமாகும்

-oOo-

நவீன விஞ்ஞான மருத்துவத்தின் மூலம் எளிதில் சரிபடுத்தக்கூடிய காரணங்களினால் ஏற்பட்ட மஞ்சள் காமாலை நோய்க்கு
முறையாக சிகிச்சை எடுக்காமல்
தவறான வழிகாட்டுதலின் பேரில் மோசடி நபர்களிடம் சிகிச்சை எடுத்து
சாதிக்க வேண்டிய வயதில் மரணமடையும் நபர்களை காப்பாற்ற

இது குறித்த சரியான தகவல்களை பரப்புவோம் . . .

மஞ்சள்காமாலை குறித்து தவறான தகவல்களை அளிக்கும் மஞ்சள் ஊடகங்களை புறக்கணிப்போம்

Nature vs Human Fight : How Nature will defeat Humans

Nature Cannot Sustain More Population
When Population expands, nature gets destroyed

So Nature Fights Back
And Man fight back

Nature wants to Reduce Population
Man wants to increase Population

It is an perennial Fight

Nature used weapons like Neonatal Tetanus through Dung applied in Umbilical Stump as its weapons
Man Conquered those with a counter weapon Asepsis

Nature then used Diphtheria and Pertussis as Weapons to reduce human population
Man Used Vaccines of Modern Scientific Medicine as his weapon and defeated nature and increased his population

Nature then used ADD and LRI as Weapons to reduce human population
Man Used Primary Care of Modern Scientific Medicine as his weapon and defeated nature and increased his population

Nature then used TB and Leprosy as Weapons to reduce human population
Man Used DOTs and Regimes of Modern Scientific Medicine as his weapon and defeated nature and increased his population

Nature then used Cholera and Snakebite as Weapons to reduce human population
Man Used of Prompt Treatment of Modern Scientific Medicine as his weapon and defeated nature and increased his population

Nature then used Myocardial Infarction and Stroke as Weapons to reduce human population
Man Used Early Management of DM and HT and Master Health Checkups as his weapon and defeated nature and increased his population

Nature then used Cancers as Weapons to reduce human population
Man Used Screening and Surgery of Modern Scientific Medicine as his weapon and defeated nature and increased his population

Nature then used Dementia as Weapon to reduce his productivity
Man Used Drugs and Surgeries against Dementia as his weapon and defeated nature and increased his population

After Finding out that it cannot defeat Brainy Men, Nature then chose to target only the fools.

It targets those brainless chaps who will assume that all the above treatments are not needed and Being Organic and Nature is good, and through these people who oppose Modern Scientific Medicine, Nature will attain its target of Reduction in Population, To Know more about this, read this book – Artificial Intelligence and Natural Stupidity: Organic Eugenics

Alternative Medicines Save Nature Modern Medicine Destroys Nature
Alternative Medicines Save Nature
Modern Medicine Destroys Nature

Ingredients in Vaccines

Often, We come across people opposing vaccines based on wrong notion. For example, in the Facebook Post by Dr.Prakash, an excellent and eminent surgeon, the following comment was posted

Anti vaxxers are Fools, Anti Socials, Serial Killers and Unfit to live
Anti vaxxers are Fools, Anti Socials, Serial Killers and Unfit to live

Here is the response

//The list is bit shocking and I need your explanation for those items in that list..//

What is there to be shock ? The explanation is right there ? Some excipients are added to a vaccine for a specific purpose. These include:

  • Preservatives, to prevent contamination. For example, thimerosal.
  • Adjuvants, to help stimulate a stronger immune response. For example, aluminum salts.
  • Stabilizers, to keep the vaccine potent during transportation and storage. For example, sugars or gelatin.

Others are residual trace amounts of materials that were used during the manufacturing process and removed.

  • These can include:Cell culture materials, used to grow the vaccine antigens. For example, egg protein, various culture media.
  • Inactivating ingredients, used to kill viruses or inactivate toxins. For example, formaldehyde.
  • Antibiotics, used to prevent contamination by bacteria. For example, neomycin.

What is there to be shocking here ? And what is the explanation ?



And here is the full details from that Vaccine Excipient Summary table http://www.insulingate.com/wp-content/uploads/2020/07/excipient-table-2.pdf

//These people are not against vaccine but want a safe medicine for their loved ones…//

Even Oxygen has toxicity. If some one says that he wants a safe oxygen
What will be your respone ?  You will consider him a fool. Isn’t it ? Same way
We consider those who oppose vaccines citing meagre side effects as FOOLS and STUPIDS

And

What if some one comes and closes your mouth asking you not to breathe oxygen since it is toxic ? you will call him Anti Social, Killer and Unfit to live

That is why we brand Anti Vaxxers in these names. Any doubts sir ?



//you are branding people those who question the efficacy of vaccine as Anti vaxxers.. ..//

Not just anti vaxxers . . We also brand them as Fools, Anti Socials, Serial Killers and those who are Unfit to live