Advice for Doctors : What, When, Why, Where, How to Read and Learn

Some one asked me this question Anonymously in 2017 August. I had replied to it in Facebook. Since the Second Part of the Reply is applicable for All Courses, I have decided to Post it here.

Doctors Medicos Learn Read
Doctors Medicos Learn Read

//Sr how do u relentlessly spread medical awareness instead of so many negative comments and setbacks.//

If there are no negative comments and setbacks, it means that the attack has not reached the target. Negative Comments and Setbacks less from 0 to 5 % prove that the attack is very successful

இவ்வே, பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்டிர ணோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ வென்றும்
உண்டாயிற் பதங்கொடுத்
தில்லாயி னுடனுண்ணும்
இல்லோ ரொக்கற் றலைவன்
அண்ணலெங் கோமான் வைந்நுதி வேலே.(95)

இவ்வே – இவைதாம்;
பீலியணிந்து – பீலி யணியப்பட்டு;
மாலை சூட்டி – மாலை சூட்டப்பட்டு;
கண் திரள் நோன் காழ்
திருத்தி – உடலிடம் திரண்ட வலிய காம்பை அழகுபடச் செய்யப்பட்டு;
நெய் அணிந்து – நெய்யிடப்பட்டு;
கடி யுடைவியன் நகர – காவலையுடைய அகன்ற கோயிலிடத்தன;
அவ்வே – அவைதாம்;
பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து – பகைவரைக் குத்துதலாற் கங்கும் நுனியும் முரிந்து;
கொல் துறைக்குற்றில என்றும் – கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டி லிடத்தனவாயின எந்நாளும்;
உண்டாயின் பதம் கொடுத்து – செல்வ முண்டாயின் உணவு கொடுத்து; இல்லாயின் உடன் உண்ணும் – இல்லையாயின் உள்ளதனைப் பலரோடுகூட உண்ணும்;
இல்லோர் ஒக்கல்தலைவன்
வறியோருடய சுற்றத்திற்குத் தலைவனாகிய;
அண்ணல் எம்கோமான் வ நுதி வேல் –
தலைமயையுடய எம் வேந்தனுடய கூரிய நுனியையுடைய வேல் எ-று.

That is
Your weapons are all decorated, Oiled and proper
His weapons are all broken due to use in warfare

-oOo-

Why Am I saying this is different ways ?
It is because, you being a doctor, will come across setbacks and negative comments.
Medicine is a natural science and hence 100 percent perfection is never possible.
There will be always a better way to do
So
Never Give Up, Never Get Dejected for Setbacks
They are bound to happen.

But
Make sure you document them, analyse them, find out YOUR fault, if any for the setback, correct it and make sure that you don’t repeat it
And
If you find that the setback is NOT DUE TO YOUR FAULT, please firmly inform those at fault

They may call you rude or arrogant for this, but nevertheless, call a spade a spade and point the finger where the actual blame lies

That is the only way you will improve and that is the only way society will improve

And Make sure that Setbacks are within acceptable numbers (5 % Alpha Error is usually safe limit. . . . You can aim for six sigma, but make sure that it is never less than alpha error)



-oOo-

//And ur 1 valuable advice to young budding doctors??//

There are lots of valuable advices for doctors
But Since You have asked me Only one, let me limit it to one
The One Advice is Learn.

Learn , Learn, Learn, Learn, Learn., Learn Learn., Learn

Learn for your theory Exams
Learn for your MCQ Exams / Entrance
Learn for your Clinical Exams / Orals
Learn for your Career
Learn for your Knowledge
Learn Government Rules and Regulations
Learn Economics
Learn Inter Personal Communications

-oOo-

Time has to be allotted for the first four Jobs DAILY
The other Four can be learnt in spare time

-oOo-

1 : Learn for your Theory Exam

This is the first and foremost work you need to do
And This is the most simple of the lot
1
Go to University Website, Locate the section where they have old question papers, download them,
2
Buy an A4 or Foolscap (Yes, this is the right spelling) 4 Quire Paper Note
and Start writing the answers
Write One Long Answer or 4 Short Answers each day
Do this *daily*
After you complete this, start revising them . . . .
Believe Me, this worked for me !

-oOo-

2 : Learn for your MCQs – Multiple Choice Questions / Objective Exams

Preparation for MCQs is different from Preparation for Theory
You need to allot one hour for this *daily*
Again
Start from Past Questions . . .
There are lots of Books out there

Learn at least 100 MCQs each day
Have a diary, (or Google Calendar) and note down what you learn. Revise it after one week and then again after one week
So
Each day, you will be learning 100 MCQs and revising 200

© www.chennaipaleodoctor.com
-oOo-

3 : Learn for your Clinical Exams – Long Case / Short Case / Spotter / Viva / Instruments / Specimens / Radiology

Preparation for Clinical Exams is different from
the above two
For this, you need to be sincere in attending the OP and Ward Classes
And
Prepare Case wise Note

For the Most Common Cases, Practice saying the History and Clinical Examination again and again so that it comes naturally and fluently

For Example consider the following two presentation
Scenario 1:
Candidate 1 : Examination of Right Fundus with Ophthalmoscope reveals and Papery White, Pale Disc with Clear Cut, Well defined Margin and the Physiological Cup is Seen Well. The Lamina Cribrosa is Prominent and the vessels around the disc are minimal and attenuated with Kestenbaum’s Sign. The Peripheral FUndus and Vessels else where are normal. These Findings are suggestive of Primary Optic Atrophy
Examiner : Proceed

Candidate  2 : Disc . . . . . Papery White, Pale

Margin . . . . . Clear Cut, Well defined
Lamina Cribrosa Prominent

Examiner : What about the Cup
Candidate 2 : It is seen well sir

Examiner : OK
Candidate 2 : The vessels are less

Examiner : What about Pulsation
Candidate 2 : . . . . . .

Examiner : What do you think it is
Candidate 2 : Primary Optic Atrophy Sir

Examiner : Did you examine the rest of Retina
Candidate 2 : Yes Sir, Peripheral Fundus is Normal

Which of these presentation, do you think will be less interrupted ?
Even though both candidates have told the same findings, the latter is likely to face more questions about Fundus
And
Remember, if you don’t know answers to those, you will be in trouble

So
To avoid this
Prepare, Practice, Prepare, Practice, Keep on Saying Repeatedly till it becomes natural . . . As natural as ordering நாலு புரோட்டா, ஒரு காடை, ஒரு கலக்கி

-oOo-
© www.doctorbruno.net



4 : Learn for Your Actual Clinical Practice / Your Career / Your Future

The above three are for Passing the Exam or Getting the seat.
Unfortunately, they will not be enough for your Practice, once you step out of the comforts of Medical College
The Medical Skill needed will be vastly different and it is imperative that you prepare yourself for that too in addition to the above three

Since this fourth learning is different for different specialties,
I am not going to deal this in detail, but let me give few simple examples

1
If some one is coming with Complaints of Dry Cough, Before Auscultating all over his lungs and heart and doing Sputum for AFB and CECT Chest, ask whether he is taking ACE Inhibitors . . . This knowledge needs to be nurtured based on sound theory and repeated interactions. Another Small Trick is to know the use of Lasix (Frusemide) in this case

2
Treatment for a disease varies as per the setup. You need to know the different treatment in each setup
Treatment for fever in a Medical College is Different from treating the same in a PHC. So Learn all the variations. Not just the one which is being followed in your college in your department.

For Each and Every Case you see during your Student Period,

  1. Learn what has to be done in that Unit,
  2. What has to be told in your exam and
  3. what you have to do when you are alone in a PHC or in your Own Clinic

Remember that
What you do in the Unit may not be the same what you are supposed to say in Exams
And
You may have to do a third plan (different from these two) when you are in a PHC all alone

So
For each and every disease, you need to learn at least three treatment plans
And
This is the fourth learning you have to do

© www.brainsurgeon.in
-oOo-

The above four are Mandatory and have to be done in each and every day of your student Life

After your student life is over, you can forget the first three learnings and concentrate on four to eight

-oOo-

5: Learn for Your Development

The Fifth Learning you need to do is to learn for your development . . . Both professional and personal development

There are lots of ways to do
But I prefer Books and Travel and Social Media (Some like movies, That too is an option) Update : These days I watch Many Serials in Netflix / Amazon Prime. Recent Favourite is Money Heist !

As far as Medical Books are Concerned
Irrespective of your Speciality, You need to have a firm grasp of Anatomy (My Favourite are Books by AS Moni Sir). Physiology (Ganong, Guyton, Chaudhuri), Biochemistry (Harper, Chaterjee and Lippincott ), Pharmacology (Chaudhuri, KD Tripathi) Pathology (Robbins, Harsh Mohan) , Medicine (Harrison லட்சியம் Davidson நிச்சயம்) and Surgery (Bailey and Love, Das)

If you are going to practice in India, Parasitology Protozoology & Helminthology | Book by K.D. Chatterjee is a must

Non Fiction Includes Atul Gawande’s CheckList Manifesto, and Siddhartha Mukherjee’s Emperor of Maladies
In Fiction, Read all the books of Michael Crichton – “A case of Need” in mandatory.

If you want to know why people behave like how they behave ( in other words, if you want to understand family and hospital politics) Try Harry Potter Series . . .

If you want to know why Politicians and Bureaucrats behave like how they behave, please read All the Books of Frederick Forysth. Mario Puzos Godfather gives more management lessons than most management books

And these books have to be read few times for you to understand the real grasp the world around you . . . believe me . . . once you read these and get the crux, you will be able to see everything with a different perspective and that will help in understanding things easily

These are more important than “that book” by Erich Segal

-oOo-
© www.doctorsandlaw.com

6. Learn Law

Learn Government Rules and Regulations
Learn what is Clinical Establishment Act
Learn about Consumer Protection Act
Go to the Consumer Forum Web site, read the last 100 judgement (at least) and see the world for yourselve
Learn what are the various regulations you have to be aware of based on your specialty (eg Transplant, USG etc)

-oOo-

7. Learn Economics

Money Saved is Money Earned

Learn Basics of Tax Rules
State Budge, Union Budget,
Know which way the wind is blowing



-oOo-

8. Learn Inter Personal Communications

The Most Important Skill which decides how successful you are in Practice

-oOo-

And then

9. Learn Every day, Learn from Every One

Not just books, Not just patients, Not Just teachers, Not just PGs, Not just students. In a Hospital, every one has something to teach. The Staff Nurse, The OT Assistant, The LGS, the X Ray Technician, the CT Scan Technician

I have learnt from every one

Many of the OT Staff would have assisted the same surgery with your professor as well as his professor. And their knowledge would be invaluable

Once I had completed the evacuation of Hematoma and waiting for the hemostasis. The OT Assistant, a senior man about to retire was standing behind me. The anaesthesiologist asked me when i will close and I replied. The OT Assistant told me “மூடுங்க சார், ஒன்னும் ஆகாது” (Close it Sir, Nothing will happen) in a casual manner
. I jokingly said “சரி, க்ளோசர் தான்” (OK Let us Close) He pointed to the base, Sylvian Fissure, Sinus and said “இங்கல்லாம் ப்ளட் வந்தாத்தான் சார் வெயிட் பண்ணனும் மீதி இடத்துலலாம் ஒன்னும் பண்ணாது” (Wait only if there is blood in these areas. You can close if there is ooze in other areas) and then told me a list of surgeons starting from Prof BRM to my Immediate Senior and said that these surgeons wont mind Surface ooze and that those patients had all been fine

It was 40 years of Experience in One Line
This is just one example

Same way, every one, has something to offer.
You should be like a sponge absorbing the *Correct*
knowledge

(I waited for fifteen minutes, and then closed. Later I got the point clarified from my teachers and it was right. Now I follow this)

//And sr u remember me of bruce wayne of dark knight!! Inspired sr !! Thank u 🙏🏻//

🙂 🙂

Interview : 2020 Jun : on First Prize in Kindle Competition

திராவிட வாசிப்பு மின்னிதழின் பத்தாவது இதழில் என் பேட்டி வெளிவந்துள்ளது. இதழ் குறித்த அறிமுகம்

திராவிட வாசிப்பு மின்னிதழின் பத்தாவது இதழ் இது.

அமேசான் நடத்திய கிண்டில் போட்டியில் திராவிட எழுத்தாளர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த இதழை கிண்டில் வெற்றி சிறப்பிதழாக கொண்டு வந்து இருக்கிறோம். போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர் கோவி. லெனின், மருத்துவர். புருனோ , டான் அசோக், ரவிசங்கர் அய்யாக்கண்ணு, பாலாசிங் ஆகியோரின் பேட்டிகள் இந்த இதழில் வந்து இருக்கிறது. ஆங்கிலத்தில் கதைகள் எழுதிய மருத்துவர். பூவண்ணன் கணபதி மற்றும் கதிர் ஆர்.எஸ் ஆகியோரின் பேட்டிகளும் இருக்கிறது.

கிண்டில் போட்டிகளில் தங்கள் பங்களிப்புகளை அளித்த கார்ட்டூனிஸ்ட் கௌதம் அம்பேத்கர், கவர் டிசைனர் யூசுப் பாசித், திராவிட வாசகர் வட்டம் மூலமாக அண்ணா சிறுகதை போட்டியை ஒருங்கிணைத்த கபிலன் காமராஜ், சமூக நீதியை தன் கதைகள் மூலமாக வெளிக்கொணர்ந்த வியன் பிரதீப் ஆகியோர் தங்களது கிண்டில் அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

இம்மாத இதழில், பெரியாரிய வாழ்வியலை குறித்து தோழர் கனிமொழி எழுதும் தொடரும், குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியனின் ‘குழந்தைகளும் நானும்’ தொடரும் வெளியாகிறது. தொடர்ச்சியான உரையாடல்களை தங்களது கட்டுரைகள் மூலம் இவர்கள் நடத்தி வருகிறார்கள்.

நாகூர் அனிபா குறித்து யாசிர் எழுதிய கட்டுரையும், முரசொலி குறித்து பிரேம் முருகன் எழுதிய கட்டுரையும் இந்த இதழில் வெளியாகி இருக்கிறது.

பல்சுவையும், பல்வேறு தகவல்களையும் தரும் ஒரு இதழாக இது இருக்கும்.

திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். கீழ்காணும் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்: dravidavaasippu@gmail.com

கட்டுரைகளை திராவிட வாசிப்பு ஆன்லைன் பக்கத்திலும் வாசிக்கலாம்: https://blog.dravidiansearch.com/

இப்படிக்கு,
திராவிட வாசிப்பு Editorial Team:
(அருண் ஆஷ்லி, அசோக் குமார் ஜெ, அஷ்வினி செல்வராஜ், தினேஷ் குமார், ஜெகன் தங்கதுரை, கதிர் ஆர்.எஸ்., மனிதி தெரசா, இராஜராஜன் ஆர். ஜெ, யூசுப் பாசித், விக்னேஷ் ஆனந்த், விஜய் கோபால்சாமி)

பேட்டி

1) கிண்டில் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? அனைவரும் புனைவு, கதைகள் என எழுதிய போது, நீங்கள் அறிவியல் குறித்த ஒரு புத்தகம் எழுதிய காரணம் என்ன?

இலக்கியம் என்பது கவிதை, நாடகம், புனைவு, அபுனைவு என்று வகைப்படும். ஆனால் தமிழில், அதிலும் கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக இலக்கியம் என்பது புனைவு என்பது மட்டும் என்பது போலும், இலக்கியவாதி என்றால் அவர் நாவல் / சிறுகதை எழுதவேண்டும் என்பது போலும் ஒரு செயற்கை கட்டமைப்பு உருவாகியுள்ளது.

இதனால் பொருளாதாரம், விஞ்ஞானம், சமூக வரலாறு என்று வாழ்க்கைக்கு தேவையான  விஷயங்களை கூட நம் மக்கள் புனைவில் இருந்து பிழையாக கற்று, அதை நம்பி, இந்த தவறான பொருளாதாரம் கோட்பாடுகள், தவறான அறிவியல் செய்திகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை தொடர்பான முடிவுகளை கூட தவறாக எடுத்து அவஸ்தைபட்டு வருவதை உறவினர்கள், உடன்பயின்றோர், நண்பர்கள் வட்டத்தில் பார்த்து வருகிறேன்

இதை மாற்ற வேண்டுமென்றால் அபுனைவு நூல்கள் வரவேண்டும், முக்கியமாக பொருளாதாரம், அறிவியல், வரலாறு தொடர்பான நிறைய நூல்கள் வரவேண்டும், அவை துறை சார்ந்த நிபுணர்களால் எழுதப்படவேண்டும்

பாறைகளில் எழுதியது, களிமண்மாத்திரைகளில் எழுதியது, தோலில் எழுதியது, ஓலைகளில் எழுதியது, காகிதங்களில் எழுதியது என்ற வரலாற்றில் எப்படி அச்சு இயந்திரம் ஒரு முக்கிய மாற்றமோ, அதே போல் மின்னூல் என்பதும் ஒரு வரலாற்று திருப்புமுனை. எனவே இந்த வாய்ப்பில் தமிழில் அபுனைவு நூல்கள், சரியான தகவல்களை அளிக்கும் நூல்கள், வர இந்த போட்டில் ஒரு சிறந்த வாய்ப்பு என்று நினைத்தேன். அதனால் பங்கு பெற்றேன்

2) தமிழில் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புத்தகத்திற்கு முதல்  பரிசு கிடைத்திருக்கிறது. இதையெப்படி பார்க்கிறீர்கள்?

மருத்துவம் மட்டுமல்லாது, அனைத்து துறைகளிலும் அறிவியல் நூல்கள் எழுதப்பட இது தூண்டுகோலாக இருக்கும் என்று நினைக்கிறேன்

3) பேலியோ குறித்து  ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

நான் நூலில் குறிப்பிட்டிருந்தபடி தமிழகத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தமிழகம் வளர்ந்ததைப் போல் அதே அளவு வளர்ந்த பல நாடுகளில், மாநிலங்களில் அதிகரித்த சர்க்கரை நோயளிகளின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பாஸ்ட் புட் மட்டுமே, இதற்கு காரணம் உடற்பயிற்சியின்மை மட்டுமே போன்ற தவறான கருத்துக்களும் பரவியுள்ளன. மேலும் இதை உடற்பயிற்சி மூலம் மட்டுமே சரி செய்து விடலாம் என்றும் சிலர் அறியாமல் கூறுகிறார்கள்

இது மிகவும் கவலைக்குரிய விஷயம். மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எதனால் இந்த மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை புரிந்து கொள்ளாமல் இதை மாற்ற நடவடிக்கை எடுக்க முடியாது. இது குறித்த சரியான புரிதல் பலருக்கும் இல்லை. மேலுல் சிலர் இந்த பிரச்சனையை ஒற்றை பரிமாணத்தில் மட்டுமே அணுகுவதால் தவறான முடிவிற்கு வருகிறார்கள்

தமிழகத்தில் உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோய்களின் மிக அதிகமான எண்ணிக்கை மற்றும் சதவீதத்தை அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு, ஏற்றுக்கொண்டு, இதன் பின் உள்ள காரணங்களை அறிவியல் ரீதியாக அணுகினால் மட்டுமே இதற்கான தீர்வை அடைய முடியும். நமக்குப் பிடித்த தீர்வை மட்டுமே வற்புறுத்துவதாலோ, நமக்கு எளிதாக தோன்றும் தீர்வை முன்னிறுத்துவதாலோ, அல்லது பிரச்சனையை அறிவியல் ரீதியாக அணுகாமல் குத்துமதிப்பாக தீர்வை சொல்வதாலோ பிரச்சனை தீராது. மேலும் மோசமடையவே செய்யும்

இந்த மாற்றங்களுக்கான காரணம் என்ன ?  எப்படி சென்னை இந்தியாவின் சர்க்கரை நோய் தலைநகரம் என்ற பெயரைப்பெற்றது ?  இந்த நிலையை மாற்றுவது எப்படி ?  இந்த கேள்விகளுக்கு முற்றிலும் அறிவியல் பூர்வமாக, நவீன மருத்துவ அடிப்படை கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே விடை கூற வேண்டிய அவசியம் இருந்தது. அதனால் தான் இந்த நூல்



4) நீங்கள் வெகுநாட்களாக சமூக ஊடகங்களிலும்அச்சு பதிப்புத்துறை, ஆன்லைன் பதிப்புத்துறையில்  ஈடுபட்டு வருகிறீர்கள்.  இன்றைய   தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப்பார்க்கிறீர்கள்? புத்தக வாசிப்பை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்க்குமா? தடுக்குமா?

மாற்றம் ஒன்றுதான் மாறாதது, மாறுவதெல்லாம் உயிரோடு, மாறாததெல்லாம் மண்ணோடு

தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது புத்தக வாசிப்பை கண்டிப்பாக அதிகரிக்கும். மேலும் கிண்டில் அன்லிமிடட் போன்ற வசதிகள் மூலம் குறிப்பிட்ட கட்டணத்தில் எத்தனை நூல்களை வேண்டுமானால் படித்துக்கொள்ளலாம் என்ற வசதிகள் இருப்பதால் ஒருவர் வாசிக்கும் நூல்களின் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரிக்கும்

5) தமிழ்நாட்டின் மருத்துவ கட்டுமானம் குறித்து நீங்கள் தொடர்ந்து எழுதிவருபவர். இன்றைய நவீன மருத்துவம் குறித்தும், தமிழ்நாட்டு மருத்துவர்கள், மருத்துவ கட்டுமானம் குறித்தும் பல தவறான தகவல்கள் இணையங்களில் வலம் வருகிறது. இவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

எந்த துறை குறித்தும் தவறான தகவல்கள் வலம் வர இரு வகையான காரணங்கள் உள்ளன

  1. அறியாமை
  2. பொறாமை / காழ்ப்புணர்ச்சி / வன்மம் / வக்கிரம்

இதில் அறியாமையால் வலம் வரும் தவறான தகவல்களை சரியான தகவல்களை கூறுவதன் மூலம் சரி செய்து விடலாம். எனவே நிறைய பேர் எழுதவேண்டும். நிறைய எழுதவேண்டும். தொடர்ந்து எழுத வேண்டும்

சரியான தகவல்கள் நிறையபேரை சென்று அடைந்தால், அவர்கள் உண்மையை புரிந்து கொண்டால், அவர்கள் தவறான தகவல்களை பகிர மாட்டார்கள். எனவே இரண்டாம் வகை பரவுவதும் நின்று விடும். மந்தை நோய் தடுப்பாற்றல் போல் தான் இதுவும்

6) உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்? புத்தகங்கள் எது?

அம்புலிமாமா, பால மித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், பூந்தளிர் அமர்சித்ர கதைகள், சிறுவர் மலர், Chandamama என்று தான் ஆரம்பித்தது வாழ்க்கை. சிறுவயதில் பரிசு பெற்ற Land of Sunbeam Bunnies கதை நினைவில் இருக்கிறது. பிடித்த எழுத்தாளர்கள் நிறைய பேர் உள்ளார்கள். ஆனால் ஒருவரை மட்டும் தான் கூறவேண்டும் என்று கேட்டால் தயங்காமல் வாண்டுமாமா பெயரைத்தான் சொல்வேன். வரலாறு, அறிவியல் என்று பூந்தளிரில் அவர் எழுதிய ஒவ்வொறு கட்டுரையும் பொக்கிஷம். எனக்கு புனைவை விட அபுனைவு அதிகம் பிடித்ததற்கு காரணம் அவர் தான் என்று நினைக்கிறேன்

பிறகு குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், கல்கண்டு, தேவி, ரானி, இதயம் பேசுகிறது, சாவி, ரானி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், Indian Express, Hindu, Sportstar, Competition Success, Competition Success GK, என்று பொழுது போனது. விகடனில் பூக்குட்டி, ஆ தொடர்கள் படித்த ஞாபகம் உள்ளது. குமுதத்தில் சிட்னி ஷெல்டனின் தாரகையும் லாராவும் படித்தது ஞாபகம் உள்ளது

இது தவிர பள்ளி நூலகத்தில் இருந்த நூல்கள், இது தவிர அம்மா நூலகத்தில் இருந்து எடுத்து வந்து தரும் நூல்களும் வாசித்தேன். அதில் பிடித்தது ஷெர்லாக் ஹோம்ஸ். பள்ளியில் வருடந்தோறும் நடக்கும் ரஷ்ய நூலக கண்காட்சியில் வாங்கிய நூல்களை எல்லாம் திரும்ப திரும்ப வாசித்துள்ளேன். முக்கியமாக Dunno கதைகள். 107 Short Stories above Chemistry பல முறை படித்து வியந்த நூல். அறிவியல் குறித்து இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியுமா என்ற ஆச்சரியம் தரும் நூல் அது.

இது தவிர ஷெர்லாக் ஹோம்சின் 4 நாவல்கள் மற்றும் 56 சிறுகதைகளையும் பல முறை படித்ததால் பிரச்சனைகளை அனைத்து  ஆராயும் மனது வந்தது என்று நினைக்கிறேன்.

Michael Crichton : A Case Of Need
Michael Crichton : A Case Of Need

ராகி ரங்கராஜனின் தாரகையால் கவரப்பட்டு Sydney Sheldonஆங்கில நூலை வாசிக்க ஆரம்பித்து. தூத்துக்குடி Harini Lending Libraryல் சேர்ந்து Jeffrey Archer, Michael Crichton, Frederick Forysth, Alistair Maclean, Colin Forbes என்று போனது. அத்துடன் ராஜேஷ்குமர், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் இந்திரா சௌந்திரராஜனின் பாக்கெட் நாவல்கள். ரூத்ரவீணை எல்லாம் வெளிவந்த போதே வாசித்தேன்.



மருத்துவத்துறையை பொருத்தவரை, எனக்கு பிடித்தது சௌத்ரியின் உடலியக்கவியல், அவரின் மருந்தியல், ஹார்பரின் உயிர்வேதியல் கேனாங்கின் உடலியக்கவியல், கைடனின் உடலியக்கவியல், பெய்லி அண்ட் லவ், ஆடம்ஸ் நரம்பியல், லிப்பின்காட் உயிர்வேதியல், சாட்டர்ஜி உயிர்வேதியல், சாட்டர்ஜி ஒட்டுண்ணியியல் ஆகிய நூல்கள்.

இது தவிர அதுல் கவாண்டே, சித்தார்த முகர்ஜி ஆகியோரின் நூல்களும் எனக்கு பிடிக்கும். அறிவியலை புனைவுடன் மட்டுமல்லாது பொருளாதார பின்புலத்துடன் வழங்குவதில் மைக்கேல் கிரைட்டனின் பாணி மிகவும் சுவாரசியமானது. அவரது கேஸ் ஆப் நீட், ஜூராசிக் பார்க், ஸ்டேட் ஆப் பியர் என்று எந்த நூலை எடுத்தாலும் அதில் விஞ்ஞானமும் பொருளாதாரமும் எப்படி பினைந்துள்ளன என்றும் அவற்றை எப்படி சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்றும் தெளிவாக கூறப்பட்டிருக்கும். பலரும் அவரது நூல்களில் உள்ள அறிவியலை மட்டும் புரிந்து கொண்டு பொருளாதாரத்தை சாய்சில் விட்டு விடுகிறார்கள். அரசு மருத்துவத்துறை, தனியார் மருத்துவத்துறையில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கான காரணங்களை அவர் நூல்களில் இருந்து எளிதில் புரிந்து கொள்ளலாம்.

அரசு ஏன் இப்படி செயல்படுகிறது. அரசு அதிகாரிகள் ஏன் அப்படி செயல்படுகிறார்கள், அரசியல்வாதிகள் எதை நோக்கி செல்கிறார்கள் என்பதை தொடர்ந்து ஆராயும் நூல்கள் பிரடெரிக் பார்சித்தின் புனைவுகள். அவர் ஐரோப்பியா குறித்து எழுதினாலும், அவற்றை நம் நாட்டுடன் பொருத்தி பார்ப்பது கடினமல்ல. அவரது நூல்களை வாசித்த பிறகு நான் அரசியல்வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் அவர்கள் செய்யாத தவறுகளுக்கு எல்லாம் குறை கூறுவது நிறுத்திக்கொண்டேன். பிரச்சனை எங்கு உள்ளது என்று எளிதில் புரிந்தது. இதே வரிசையில் உள்ள மற்றொரு நூல் மரிய புசோவின் காட்பாதர். படம் நல்ல படம் தான். ஆனால் நூலில் உள்ள விஷயங்களில் 10 சதம் தான் படத்தில் உள்ளது.

தனிப்பட்ட வாழ்வில் நாம் சந்திக்கும் நபர்களில் யாருமே கெட்டவர்கள் அல்ல. அவர்கள் நல்லவர்கள் தான். ஆனால் சில நேரங்களில் தெரிந்தோ, தெரியாமலேயோ அவர்கள் சில பல தவறுகளை செய்துவிடுகிறார்கள் என்ற புரிதலை ஏற்படுத்தியது ஜே.கே. ரவுலிங்கின் ஹாரி பாட்டர் நூல்கள்.

இப்பொழுதும் எனது கிண்டிலில் பயணங்களின் போதும், சாப்பிடும் போதும் (சாப்பிடும் போது வாசிப்பது நல்ல பழக்கமா என்று தெரியாது J  )  நான் திரும்ப திரும்ப வாசிப்பது ஷெர்லாக் ஹோம்ஸ், ஹாரி பாட்டர், பிரடெரிக் பார்சித்தான். ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதிதாக ஏதாவது தகவல் கிடைக்கும். அல்லது சமீபத்தில் நடந்த விஷயம், அல்லது கேள்விப்பட்ட விஷயத்துடன் பொருத்தி பார்த்து தெளிவு கிடைக்கும்.

சில நூல்கள் நன்றாக இருக்கும், திரையில் எடுக்கும் போது சொதப்பி விடுவார்கள். வாசித்தால் போது. பார்க்க வேண்டாம். சில நூல்கள் திரையில் நன்றாக இருக்கும். பார்த்தால் போதும். வாசிக்க வேண்டாம். ஆனால் ஜூராசிக் பார்க், ஹாரிபாட்டார் நூல்கள், காட்பாதர் போன்ற வெகு சில நூல்களை வாசிப்பது அறிவையும், திரையில் பார்ப்பது அனுபவத்தையும் தரும்

il etait beaucoup nous de fois un livre vaut mieux que le film
il etait beaucoup nous de fois un film vaut mieux que le livre
Mais Il y en a peu, très peu, peut-être une poignée,
quand les deux sont également bons

There are few books which are better than movies
There are few movies which are better than books
But
There are few, very few when both are equally good

7) புதிதாக எழுத வருபவர்களுக்கு நீங்கள் சொல்லவிரும்புவது என்ன?

என்ன எழுதுவது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்

  1. புனைவா, அல்லது அபுனைவா ?
  2. புனைவு என்றால் முற்றிலும் கற்பனையா அல்லது ஏதாவது சம்பவத்தின் அடிப்படையிலா ?
  3. அபுனைவு என்றால் யாருக்கு எழுதுகிறீர்கள்
    1. பள்ளி மாணவர்களுக்கா ?
    2. துறையில் இருப்பவர்களுக்கா ?
    3. பொது மக்களுக்கா ?

இந்த புரிதல் மற்றும் தெளிவு அவசியம்

8) உங்களது மற்ற புத்தகங்களை குறித்து சொல்லுங்கள்..

எனது நூல்கள் குறித்த அனைத்து விபரங்களும் இந்த பக்கத்தில் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது . மருத்துவமாணவர்களுக்காக எழுதியது.

இது தவிர பல நூல்களில் அத்தியாயங்கள் எழுதியுள்ளேன். ரிசெப்டார் என்ற மருத்துவ மாணவர்களுக்கான இதழின் ஆசிரியர் குழுவில் இருந்துள்ளேன்.

9) அடுத்து எதைக் குறித்து எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்? எதிர்கால திட்டம் என்ன?

1990களில் இந்திய பொருளாதாரம் நோயுற்று இருந்த சமயம் அந்த நோய்க்கு மருந்தாக தனியார்மயம், உலகமயம், தாராளமயம், நவீனமயம் ஆகிய நான்கு கோட்பாடுகள் முன்னிறுத்தப்பட்டன.

எவ்வளவு சிறப்பான மருந்து என்றாலும் அதை சரியான அளவில் கொடுக்கவேண்டும். அளவு குறைந்தால் மருந்து வேலை செய்யாது. அளவு கூடிவிட்டால் மருந்தே விஷமாகி விடும். விஷம் என்பது “அளவிற்கு அதிகாமான அளவில் இருக்கும் மருந்து” என்பதும் மருந்து என்பது “சரியான அளவிலான விஷம்” என்பதும் மருத்துவத்தில் பால பாடம். காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும், அனைத்து கடைகளிலும் கிடைக்கும் பாராசிட்டமால் மாத்திரைகளை கூட ஒரே நேரத்தில் 40 மாத்திரைகளை மொத்தமாக விழுங்கினால் மரணம் தான். உலகின் கொடிய விஷமான பொட்டுலின் விஷம் கூட குறைவான அளவில் சரியான அளவில் மருந்தாக பயன்படுகிறது. அதே போல் மருந்து என்பதை தகுந்த கால அளவில் அளிக்க வேண்டும். ஐந்து நாட்கள் மூன்று வேலை கொடுக்கவேண்டிய மருந்தை ஒரே நாள் ஒரு மணிநேர இடைவேளையில் கொடுத்தால் விளைவுகளை விட பின்விளைவுகளே அதிகமாக இருக்கும்.

எனவே தனியார்மயம், உலகமயம், தாராளமயம் ஆகியவை கூட அளவிற்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டாலோ, அல்லது சமூக வளர்ச்சிக்கு போதிய கால அவகாசம் அளிக்காமல் வெகு விரைவாக கடைபிடிக்கப்பட்டாலோ அதனால் பிரச்சனைகள் வரலாம்

தற்சமயம் கொரொனாவைரசினால் உலகம் முழுவதுவும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதிலிருந்து மீண்டு வர நாம் என்ன செய்யவேண்டும் ? கடந்த 30 ஆண்டுகளாக நாம் செய்த சாதனைகள் என்ன ? நாம் செய்ய தவறுகள் யாவை ? கடந்த காலத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளவேண்டும். அடுத்த 20 ஆண்டுகள் நாம் பொருளாதாரத்தில் முன்னேற என்னசெய்யவேண்டும் ? என்ன செய்யக்கூடாது ? என்று பல கேள்விகள் நம்முன் உள்ளன.

இவற்றிற்கு விடை தேடும் நோக்கில் ஒரு நூலை எழுதலாம் என்று நினைக்கிறேன்

10) உங்களது வெற்றியின் ரகசியமாக/ பலமாக நீங்கள் எதைக்கருதுகிறீர்கள்?

எந்த போட்டி என்றாலும்

விதிமுறைகளை நன்றாக வாசிக்க வேண்டும்

நம்மால் அந்த விதிமுறைகளின் படி விளையாட முடியுமா என்று பார்க்க வேண்டும்

முடியாது என்றால் ஒன்று ஒதுங்கி நின்று விசிலடிக்கலாம்

அல்லது

வெல்ல மாட்டோம் என்று தெரிந்து கொண்டே, பங்கு பெறும் உற்சாகத்திற்காக மட்டுமே பங்கு பெற வேண்டும்

எனது வெற்றியின் ரகசியமாக / பலமாக நான் கருதுவது என்னவென்றால்

  1. எந்த மைதானம் எனக்கு வசதியாக உள்ளதோ, எந்த விதிமுறைகள் எனக்கு சாதகமாக உள்ளதோ, அந்த போட்டியில் தான் சென்று விளையாடுவேன் 🙂
  2. சற்றே பெரிய நட்பு வட்டம்
  3. உழைப்பு

தகவலா ? கருத்தா? ஆசையா? விருப்பமா? நம்பிக்கையா?

சமூக ஊடகங்களில் நீங்கள் எழுதப்போவது தகவலா, கருத்தா, ஆசையா, விருப்பமா, நம்பிக்கையா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்
• தகவல் (Fact) வேறு
• கருத்து (Opinion) வேறு
• ஆசை / விருப்பம் (Wish / Desire) வேறு
• நம்பிக்கை (Belief) வேறு

தகவல் என்பது உண்மை.

யார் சொன்னாலும் அது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். உங்கள் தகவலும் என் தகவலும் வேறு வேறாக இருந்தால் இருவரில் ஒருவர் தவறு.
• உதாரணமாக இந்தியா 2011 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது என்று தான் நானும் சொல்ல முடியும் நீங்களும் சொல்ல முடியும். உங்களுக்கு இந்திய அணி பிடிக்கவில்லை என்பதால் நீங்கள் இந்தியா வெல்லவில்லை என்று மாற்றி சொல்ல முடியாது. அப்படி சொன்னால் நீங்கள் சொல்வது பொய். அது உண்மைத் தகவல் அல்ல

தகவல் என்பது
• அறிவு (Knowledge) சார்ந்து இருக்கலாம்
• விஷயம் (Information) சார்ந்து இருக்கலாம்
• தரவு (Data) சார்ந்து இருக்கலாம்

உதாரணமாக ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் வென்றார் என்பது தகவல். அதை நீங்கள் மறுக்கவே முடியாது. அதே போல் 05.06.2020 அன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் என்பது சரியான தகவல். 05.06.2020 அன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் என்பது பொய்.

கருத்து என்றால் என்ன ?

கருத்து என்பது, ஒரு துறையில் நிபுணராக இருக்கும் நபர் கூறும் கூற்று அல்லது அறிக்கை.

ஒரே விஷயத்தில் இரு நபர்களுக்கு வெவ்வேறு கருத்து இருக்கலாமா ? கண்டிப்பாக இருக்கலாம். அப்படி இருக்கும் இரண்டு கருத்துக்களும் (அந்த நபர்களின் படிப்பின், அனுபவத்தின், திறமையின் அடிப்படையில்) சரியாகவும் இருக்கலாம்

உதாரணமாக முதலாம் வருடம் மருத்துவம் படிக்கும் மாணவர் ஒருவர் ஒரு கண்ணை பார்த்து விட்டு அந்த கண்ணில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறலாம். அதே கண்ணை கண் மருத்துவத்துறை பேராசிரியர் பார்த்து விட்டு அதில் கண்புரை ஆரம்ப நிலையில் உள்ளது என்று கூறலாம். இரண்டுமே சரி தான்.

அது எப்படி ஒரே கண்ணை பார்த்து விட்டு ஒருவர் அதில் பிரச்சனை இல்லை என்றும் மற்றொருவர் அதில் பிரச்சனை உள்ளது என்றும் கருத்து கூறலாம் ? அது எப்படி இரண்டுமே சரியான கருத்தாக இருக்கலாம் என்றும் நீங்கள் கேட்டால், அதற்கு பதில் கருத்து என்பது, படிப்பு, அறிவு, ஞானம், அனுபவம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைவது. எனவே அதில் மாறுபாடு இருக்கும்

ஆனால் முழுவதும் புரை உள்ள ஒரு கண்ணை பார்த்து விட்டு முதல்வருட மாணவர் அந்த கண்ணில் பிரச்சனை இல்லை என்று கூறினால் அது பிழை.

ஆரம்ப கட்ட பார்க்கின்சன் நோயுடன் வருபவரை பயிற்சி மருத்துவர் ஒருவர் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அங்கு இருக்கும் நரம்பியல் நிபுணர் கண்டு பிடித்து விடுவார். இதில் யாருமே பிழை செய்யவில்லை. ஆனால் இப்படி வருபவரிடம் நோயில்லை என்று சொன்னால் அது தான் பிழை

மற்றொரு உதாரணம் கூறுகிறேன்

கடுமையான புயல் அடிக்கிறது, மழை பெய்கிறது, விமான ஓடுதளத்தில் விளக்குகள் சரியாக செயல்படவில்லை. 20 வருட அனுபவம் உள்ள ஒரு விமானி, விமானத்தை ஓடு தளத்தில்சரியாக இறக்கி விடுகிறார். ஆனால் 1 வருட அனுபவம் உள்ள விமானி இறக்கும் போது விமானம் ஓடுதளத்தை தாண்டி சென்றுவிடுகிறது. இந்நிலையில் நீங்கள் 1 வருட விமானி தவறு செய்து விட்டார் என்றோ, கவனக்குறைவாக இருந்து விட்டார் என்றோ கூட முடியுமா ? கண்டிப்பாக முடியாது

அதே நேரம்
நல்ல வானிலை இருக்கும் போது, விளக்குகள் ஒழுங்காக செயல்படும் போது ஓடுதளத்தை விட்டு வேறு இடத்தில் இறக்கினால் அது பிழை

இது மருத்துவத்துறையில் மிகவும் சாதாரணம்
இதனால்தான் வசதி குறைவாக உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தேவைப்படும் பிரசவத்தை வசதி அதிகமுள்ள மருத்துவமனையில் சுகப்பிரசவமாக பார்க்கலாம்

அதே போல் ஒரே நோய்க்கு இரு மருத்துவர்கள் வெவ்வேறு சிகிச்சை சொல்வார்கள். இரண்டுமே சரியாக இருக்கலாம்

அது சரி
யார் வேண்டுமானாலும் எந்த விஷயத்திலும் கருத்து சொல்லலாமா ?
உங்கள் ஈகோவை ஓட்டை போடுவதற்கு மன்னிக்கவும்
இதற்கான பதில் “இல்லை” என்பதே ஆகும்

ஒரு விஷயம் குறித்து கருத்து கூற கீழ்க்கண்டவை அவசியம்
1. அந்த துறை குறித்த பொதுவான அடிப்படை அறிவு
2. கருத்து கூறும் குறிப்பிட்ட விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு
3. அது போன்ற விஷயங்களில் அனுபவம்
4. அந்த விஷயத்தில் நிபுணத்துவம்
5. திறமை
6. தரவு

இந்த ஆறு விஷயங்களும் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் கருத்தின் துல்லியமும், பிழையின்மையும் அதிகரிக்கும். இதில் 6 மட்டுமே இணையத்தில் ஒரே நாளில் கிடைக்கும். 3,4,5 எல்லாம் பெற பல வருடங்கள் ஆகும்.

உதாரணமாக ஒரு விமானம் ஓடுதளத்தை விட்டு தள்ளி இறங்கியது என்றால்
அந்த விமானி தவறு செய்தாரா இல்லை என்று கருத்து கூற அதே விமானத்தை ஓட்டிய அனுபவம் உள்ள மற்றொரு விமானிக்குத்தான் தகுதி உள்ளதே தவிர மற்றவர்களுக்கு தகுதி இல்லை

அரசியல் சாசனம் கருத்துரிமை வழங்கியுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? அரசியல் சாசனம் வழங்கியிருப்பது பேச்சுரிமை மற்றும் நீங்கள் நினைப்பதை வெளிப்படுத்தும் உரிமைதானே (Freedom of Speech and Expression) தவிர உங்களுக்கு சம்மந்தம் இல்லாத விஷயங்களில் எல்லாம் அடிப்படையை தெரிந்து கொள்ளாமல் அபத்தமாக கருத்து கூறும் உரிமை அல்ல

அப்படி என்றால் எந்த விஷயம் குறித்தும் பேசவே கூடாதா என்றால், பேசலாம். ஆனால் அந்த பேச்சு என்பது விருப்பம் அல்லது ஆசை என்பதில் கீழ் தான் வரவேண்டுமே தவிர கருத்து என்று கூறக்கூடாது

புயலின் போது விமானம் ஓடுதளத்தை விட்டு தள்ளி இறங்கினால் விமானி ஓடுதளத்தில் இறக்கியிருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை கூறலாமே தவிர, விமானி தவறு செய்த்து விட்டார் என்ற கருத்தாக அதை கூறக்கூடாது

இது தான் கருத்திற்கும், ஆசைக்கும் வித்தியாசம்

இது என் ஆசை என்று நீங்கள் பொதுவெளியில் கூறினால் அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதை உங்கள் கருத்தாக கூறினார், அந்த துறையில் நிபுணர் அதை மறுக்கலாம். அப்படி இருக்கும் போது, “இது என் கருத்து, இது அரசியல் சாசன உரிமை” என்று சண்டை போடுவது வீண்

நம்பிக்கை என்றால் என்ன ?

இது உங்களுக்குள் நீங்களே நம்பிக்கொள்வது. நம்பிக்கை நம்பிக்கையாக இருக்கும் வரை எந்த விவாதத்திற்கும் உட்பட்டது அல்ல
அதே நேரம் நம்பிக்கையை பொதுவெளியில் கருத்தாக கூறினால் விவாதம் வரும்

மேலும் சில உதாராங்களை பார்க்கலாம்

• தகவல் : தலைக்கவசம் அணிந்தால் உயிர்கள் பாதுகாக்கப்படும்
• கருத்து : தலைக்கவசம் என்பது அவசியம்
• விருப்பம் : எனக்கு தலைகவசம் அணிய விருப்பம்
• விருப்பம் : எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை
• நம்பிக்கை : தலைகவசம் அணியாவிட்டாலும் கூட எனக்கு ஒன்றும் ஆகாது

இதில் “தலைகவசம் அணியாவிட்டாலும் கூட எனக்கு ஒன்றும் ஆகாது” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் “எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை” என்று நீங்கள் கூறினால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் “எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை” என்ற உங்கள் விருப்பத்தை “தலைகவசம் அணியவது தேவையில்லை” என்ற அபத்த கருத்தாக கூறிவது தான் பிரச்சனை

அடுத்த உதாரணம்
• தகவல் : சச்சின் 463 ஆட்டங்களில் 18426 ஓட்டங்களும் விராட் கோலி 238 ஆட்டங்களில் 11867 ஓட்டங்களும் பெற்றுள்ளார்
• கருத்து : ஆட்டங்களின் அடிப்படையில் சச்சினை விட கோலி சிறந்த ஆட்டக்காரர்
• கருத்து : தொடர்ந்து விளையாடினால் கோலியால் சச்சினின் ஓட்டங்களை விட அதிகம் பெற முடியும்

• விருப்பம் : எனக்கு சச்சின் பிடிக்கும்
• விருப்பம் : எனக்கு சச்சின் பிடிக்காது

இதில் உங்களுக்கு சச்சினை பிடிக்கலாம், அல்லது பிடிக்காமல் போகலாம். ஆனால் அதனால் சச்சின் எடுத்த ஓட்டங்கள் கூடவோ குறையவோ செய்யாது. அதே போல் சச்சின் மேட்ச் வின்னர் இல்லை என்ற பொய்யை சொல்லக்கூடாது

ஆக நம்பிக்கை என்பது உங்களூக்குள் இருக்கவேண்டியது, ஆசை என்பதை வெளியில் சொல்லலாம். இவை இரண்டும் தான் அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகள்

கருத்து கூற உங்களுக்கு உரிமை உள்ளது. அதே நேரம் அந்த கருத்து கூற உங்களுக்கு தகுதியுள்ளதா என்பதை பரிசீலனை செய்து விட்டு கருத்து கூறினால் பிரச்சனை இல்லை. அல்லது உங்கள் விருப்பத்தை கருத்தாகவோ தகவலாகவோ திணிக்க முயன்றால் இணையத்தில் பஞ்சாயத்து வரும்

உதாரணமாக பில் கேட்ஸ் கொரோனா குறித்து கருத்து கூறுகிறார். காரணம் அவர்
• இது குறித்து படித்துள்ளார்
• பல ஆண்டுகளாக தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துகிறார்
• அந்த தரவுகளை வைத்துள்ளார்
• அதை வைத்து அவர் கருத்து கூறுகிறார்
இதுவும், வாட்சப்பில் வருவதை நம்பி பொது வெளியில் உளறி மாட்டிக்கொள்வதும் ஒன்றல்ல

ஆசை / விருப்பம் கருத்து என்பதில் சரியான ஆசை / விருப்பம், தவறான ஆசை / விருப்பம் என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் ஆசை / விருப்பம் அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்
• ஒரு ஆசை / விருப்பம் – தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்
• வேறு ஒரு ஆசை / விருப்பம் – பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

நீங்கள் என்ன ஆசை / விருப்பம் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் நீங்கள் கூறும் ஆசையுடன் எக்காரணம் கொண்டும் தவறான தகவல்களை தர முடியாது உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து.

ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (பொய் சொன்னால்), அது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.