தொழிற்நுட்பமும் தொழிற்சங்களும்- 1990களின் நிகழ்ந்த மாற்றங்கள்

1990களில் இந்தியாவில் Hire and Fire நடைமுறை வந்தது. அதன் பிறகு Outsourcing / Contract (ஒப்பந்தப்பணி) ஆகியவை வந்தன

இதன் பின்னால் இருக்கும் முக்கிய காரணி – Technology அல்லது தொழிற்நுட்பம்

-oOo-

முன் காலங்களில் ஒரு வேலையை செய்ய நிறைய திறமை, நிறைய அனுபவம் தேவைப்பட்டது.

அல்லது / மற்றும்

நீண்ட கால அனுபவம் உள்ளவர் செய்வதற்கும், குறுகிய காலம் அனுபவம் உள்ளவர் செய்வதற்கும் வித்தியாசம் நிறைய இருந்தது

எனவே நீண்ட கால அனுபவம் உள்ளவர்கள் தேவைப்பட்டார்கள்.

ஆனால் தொழிற்நுட்பம் வளர வளர,
தேவைப்படும் அனுபவம் குறைந்தது
அல்லது / மற்றும்
நீண்ட கால அனுபவம் உள்ளவர் செய்வதற்கும், குறுகிய காலம் அனுபவம் உள்ளவர் செய்வதற்கும் வித்தியாசம் குறைந்தது

-oOo-

உதாரணமாக மருத்துவமனை மருந்தகத்தில்அந்த காலத்தில் Compounder என்று ஒருவர் இருந்தார். அப்பொழுது மருந்தகத்தில் (Pharmacy) மருந்துகள் செய்யப்பட்டன.

Mixtures, Lininment, Ointment, Cream எல்லாம் அங்கு செய்யப்பட்டன. எனவே அதற்கு அனுபவம் தேவை.

புதிதாக வருபவர் செய்யும் Ointment mixture போல் வரும் ரிஸ்க் இருப்பதால் நிறுவனங்கள் அனுபவம் மிக்க மருந்தாளுனர்களை இழக்க விரும்ப மாட்டார்கள். எனவே நிரந்திர பணி அளித்தார்கள்.

ஆனால் இன்று அனைத்தும் Blister pack, tubeகளில் வருகின்றன. எனவே மருந்தாளுனரின் வேலை என்பது செஷ்பில் இருந்து எடுத்து கொடுப்பது தான். எனவே பணி நிரந்தரம் இல்லை

அதே போல்
முன் காலங்களில் ஆய்வகங்கள் ஒவ்வொரு பரிசோதனையையும் தனியா செய்ய வேண்டும்

இப்பொழுது Semi Auto Analyser வந்து விட்டது. பல பரிசோதனைகள் Card Test / Rapid Kit ஆக வந்து விட்டன.

எனவே அனுபவத்தின் மதிப்பு குறைந்துள்ளது

-oOo-

மலேரியாவை கண்டு பிடிக்கும் ஆய்வக நுட்பனர் பணி என்பது நிரந்தர பணியாக உள்ளது. காரணம் இது அனுபவம் தேவைப்படும் வேலை

எய்ட்ஸ் சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆய்வக உதவியாளர் ஒப்பந்த பணியில் உள்ளார். இது சில நாட்கள் பயிற்சி பெற்றால் போதும்

-oOo-

ஒப்பந்த பணியால் வேறு பல பிரச்சனைகள் உள்ளன. அதை நான் முழுவதும் ஆதரிக்கவில்லை. அது வேறு விஷயம் – அது குறித்து தனியாக பேசலாம்

இங்கு கூறவரும் விஷயம் என்னவென்றால்
When technology has replaced your skill, you have lost your bargaining power

-oOo-

1990கள் வரை நிறுவனங்களின் இன்றியமையாத பங்காக தட்டச்சர்கள் இருந்தார்கள். ஏன் ? நிறைய கடிதங்களை விரைவாக அடிக்கவேண்டும். தவறில்லாமல் அடிக்கவேண்டும்

ஆனால் கணினி வந்த பிறகு தவறுகளை திருத்தும் வாய்ப்பு வந்த பிறகு “தவறில்லாமல் அடிப்பது” என்ற திறமைக்கு மதிப்பில்லை

-oOo-

சுவரில் படம் வரைபவர்களின் வேலையை போட்டோஷாப் + கோரல்டிரா + ப்ளெக்ஸ் பிரிண்டிங் பறித்தது

செயற்கை நுண்ணறிவு வந்து பழைய படத்தை சீரமைக்கும் திறமை சாலிகளின் வேலையை பறிக்கும். இந்த படத்தை பாருங்கள்.


(மூலம் : https://www.facebook.com/chithranraghu/posts/10227921004110055
மென்பொருள் : https://github.com/TencentARC/GFPGAN & https://replicate.com/xinntao/gfpgan)

2000களின் ஆரம்பம் முதல் இன்று வரை மிக அதிகமாக தேவைப்படும் ஒரு திறமை (பழைய படங்களை புதுப்பிற்பது) இனி பின்னால் சென்று விடும்

-oOo-

எனவே
நிரந்தர பணி x ஒப்பந்தப்பணி
குறித்த உரையாடல்களில்
உலகவங்கி, காட் என்று மட்டும் ஜல்லியடித்துவிட்டு
தொழிற்நுட்பத்தின் பங்கு குறித்து பேசவில்லை என்றால்
அது முழுமையாகாது

-oOo-

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் இருக்கும் தொழிற்சாலைகள் உருப்படுவதில்லை
காங்கிரஸ், திமுக தொழிற்சங்கங்கள் பலமாக இருக்கும் தொழிற்சாலைகள் தப்பிக்கின்றன
காரணம் என்ன தெரியுமா ?

-oOo-

இதற்கு செல்லவதற்கு முன்னர் இந்த கோப்பை வாசியுங்கள்

சிகிச்சையில் முக்கியம்
1. அந்த சிகிச்சை இருக்கவேண்டும்
2. அந்த சிகிச்சை நம் அருகில் இருக்கவேண்டும்
3. அந்த சிகிச்சை நம் அருகில், நம்மால் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும்
4. அந்த சிகிச்சை நம் அருகில், நம்மால் வாங்கக்கூடிய விலையில், தரத்துடன் இருக்கவேண்டும்

இதில் முதலில் தேவை – இருப்பது
அடுத்த முக்கியம் – அருகில் இருப்பது
அடுத்த முக்கியம் – வாங்கும் விலையில் இருப்பது
அடுத்த முக்கியம் – தரமாக இருப்பது

மிக அதிகமான தரமாக உள்ளது, ஆனால் வாங்கும் விலையில் இல்லை என்றால் பலனில்லை
மிக அதிகமான தரமாக உள்ளது, ஆனால் அருகில் இல்லை என்றால் பலனில்லை
எனவே எப்பொழுதும் Order of Priority முக்கியம்

-oOo-

ஊதியம் அவசியம்
அதை விட தொழிலாளர் நலன் அவசியம்

இவர் இரண்டும் எப்பொழுது அவசியம் ?
அந்த தொழிலாளி வேலையில் இருந்தால் தானே இவை இரண்டிற்கும் அர்த்தம் உண்டு
வேலையில் இல்லை என்றால் அதிக ஊதியம் என்ற கோரிக்கையால் ஏதாவது பலன் உண்டா ?

தொழிலாளி வேலையில் இருக்கவேண்டும் என்றால் எது அவசியம் ?
தொழிலாளி வேலையில் இருக்கவேண்டும் என்றால் அந்த தொழிற்சாலை, நிறுவனம் இயங்கவேண்டும்

எனவே
முதல் தேவை – தொழிற்சாலை இயங்கவேண்டும்
அடுத்த தேவை – நமக்கு (தொழிலாளிக்கு) வேலை வேண்டும்
அடுத்த தேவை – நமது அடிப்படை உரிமை + பாதுகாப்பு வேண்டும்
அடுத்த தேவை – ஊதிய உயர்வு வேண்டும்

-oOo-

காங்கிரஸ், திமுக தொழிற்சங்கங்கள் இந்த கருத்தில் தெளிவாக இருப்பார்கள்
ஊழியரின் உடல் நலத்திற்கோ, உயிருக்கு ஆபத்து என்ற நிலை எற்பட்டால் தவிர அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு படமாட்டார்கள்
மீதி பிரச்சனைகளை ”பேசியே தீர்த்துக்கொள்வார்கள்”
லாக் அவுட் போன்ற விஷயங்களினால் தொழிற்சாலைக்கு நஷ்டம் என்றால் அது ஊழியர்களை பாதிக்கும் என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்

-oOo-

கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை பொருத்தவரை
அவர்களுக்கு போராட்டம் தேவை
அதனால் ஊழியருக்கு வேலை போனாலும் பரவாயில்லை (விடுங்க பாஸ், கோர்ட்டில் போய் வாங்கிக்கலாம்)
அதனால் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டாலும் பரவாயில்லை (விடுங்க பாஸ், லேபர் டிபார்ட்மெண்டில் பேசி செட்டில்மெண்ட் வாங்கலாம்)
என்று தான் இவர்களின் செயல்பாடு இருக்குமே தவிர
அவர்கள் சங்கம் வளர்ப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கும் தவிர
ஊழியர் நலன் துளியும் இருக்காது
இது தான் என் அனுபவம்

-oOo-

ஆமை புகுந்த வீடும்
கம்யூனிஸ்ட் புகுந்த தொழிற்சாலையும்
உருப்பட்டதாக சரித்திரமே இல்லை

கடன், லாபம், நஷ்டம் : Loan, Debt, Profit, Loss

இது ஒரு பிரபல வாட்சப் கட்டுரை

கதை கேளு ? கதை கேளு

ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான். அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான். கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சான் இடம் கொடுத்து மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார். கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாய்யை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்

மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர்.

ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடிடாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார். டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.

டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளும். வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்கும் வரச்சொன்னார்கள் என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர்.

காஜாப் பையனிடம் கடையைப் பார்த்துக்கொள் என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர்.

கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள் என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.

ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார்.

சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.தான் கொடுத்த 500 ரூபாய் ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை.

வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார். இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி வந்ததில் நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.

முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் பாக்கி கணக்கு நேராகிவிட்டது. அதுபோலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. அதுபோலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது.

இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது.

ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா? அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா?




இதில் எந்த மாயாஜாலமும் இல்லை, மனஜாலம் மட்டுமே

யாரும் லாபம் அடையவில்லை, யாரும் நஷ்டம் அடையவில்லை

ஏற்கனவே அனைவருக்கும்
500 ரூபாய் பணம் வரவேண்டி இருந்தது
500 ரூபாய் பணம் கொடுக்கவேண்டி இருந்தது
ஆக நிகர பணம் = 0 தான்
இப்பொழுதும் 0 தான்
மாயாஜாலம் எதுவும் நடக்கவில்லை

இதில் யாரும் கடன் காரர் மட்டும் அல்ல
அனைவரும் கடன் காரர் + கடன் கொடுத்தவர் ஆகவும் இருந்தார்

ஏற்கனவே
அவர்களின் பேலண்ஸ் 0 தான்
இப்பொழுதும் 0 தான்

இப்பவும் அனைவரின்
1. கொடுக்க வேண்டிய பாக்கியும் தீர்ந்து போச்சு
2. வரவேண்டிய பாக்கியும் வந்து விட்டது
இரண்டையும் சேர்த்து பார்த்தால் குழப்பம் இல்லை

இதில் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. ஆனால் வரவேண்டிய பாக்கி 500, கொடுக்க வேண்டிய பாக்கி 500 என்று எடுத்துக்கொள்ளவேண்டும்



முதன் முறை படிக்கும் போது இது புரியவில்லை என்றால்
இரண்டு காரணங்கள் இருக்கலாம்

மனதளவில்
நாம் அடுத்தவர்களிடம் இருந்து வாங்கிய கடனுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறோம். அதுவே நமது மனதை அழுத்துகிறது. நமக்கு வரவேண்டிய பணம் அந்த அளவு அழுத்தவில்லை

அல்லது

மனதளவில்
நாம் அடுத்தவர்களுக்கு கொடுத்த் பணத்திற்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறோம். அதுவே நமது மனதை அழுத்துகிறது. நாம் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டிய பணம் அந்த அளவு அழுத்தவில்லை

இதில்
எதாவது ஒரு மனநிலையில் இருப்பவர்கள்

இந்த கதையில் டிரான்சாக்‌ஷன் ஒரு வழியாக நடப்பதாக நினைத்துக்கொள்வார்கள்

வாங்கிய கடன், கொடுத்த கடன் இரண்டையும் சமமாக மனதளவில் நடத்தினால்
இந்த கதையில் எந்த மாயாஜாலமும் இல்லை

தாராளமயம் Liberalization உலகமயம் Globalization தனியார்மயம் Privatization நவீனமயம் Modernization

தாராளமயம், உலகமயம், தனியார்மயம், நவீனமயம் ஆகிய சொற்கள் அடிக்கடி குழப்பப்படுகின்றன. இவை ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை என்றாலும் கூட ஒரே பொருள் தருபவை அல்ல

தாராளமயம் (Liberalisation Liberalizastion) என்றால் அரசின் சட்ட திட்டங்களை தளர்த்துவது.  தாராளமயமாக்கத்தின் ஆதரவாளர்கள் என்ன சொல்வார்கள் என்றால் சில பல பழங்கால சட்டங்கள் இன்றைக்கு பொருந்தாது. எனவே அவற்றை நீக்கினால் அனைவருக்கும் நலம். அதானால் நீக்க சொல்கிறோம் என்பார்கள். அதே நேரம் இதை எதிர்ப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்றால் இந்த சட்டங்கள் நம்மை – அதாவது இந்திய நிறுவனங்களை / சிறு தொழில்களை – காக்க உருவாக்கப்பட்டவை. எனவே இவற்றை நீக்கினால் சிறு தொழில்கள் அழிந்து விடும் என்பார்கள். இரண்டுமே பொய் அல்ல. ஆனால் உண்மை இரண்டிற்கும் நடுவில் உள்ளது. தாராளமயத்திற்கு எதிரான நிலைக்கு பேர் வன்விதிநடைமுறை அல்லது லைசன்ஸ் ராஜ் ! (License Raj)

liberalization privatization globalization

உலகமயம் (Globalisation Globalization) என்றால் ஒரு நாட்டு நிறுவனம் அடுத்த நாட்டில் வியாபாரம் செய்ய அனுமதி. உதாரணமாக இன்பொசிஸ் அமெரிக்காவின் மென்பொருள் விற்கலாம். ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் விற்கலாம். இதற்கு எதிரான நிலை – அதாவது இந்தியாவில் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே விற்கப்பட வேண்டும், நாமும் இறக்குமதியும் செய்யக்கூடாது ஏற்றுமதியும் செய்யக்கூடாது என்ற நிலைக்கு பெயர் தற்சார்பு பொருளாதாரம் (Tribalisation Tribalization).

தனியார்மயம் (Privatisation Privatization) என்றால் அரசு செய்த ஒரு வியாபாரம் அல்லது சேவை தனியார் வசம் வருவது (மிக மிக சுருக்கமான விளக்கம் இது. முற்றிலும் சரியான விளக்கமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) : உதாரணம் அரசு மட்டுமே அளித்து வந்த விமான சேவை தனியாரும் அளிக்க ஆரம்பித்தது . . . இதற்கு நேர் எதிர் அரசுடமை (Nationalisation Nationalization). தனியாரிடம் இருந்த வங்கி, பேரூந்து ஆகியவற்றை அரசு வாங்கியது அரசுடைமை (தற்போதைய உதாரணம் – டாஸ்மாக் !!)



நவீனமயம் (Modernisation Modernization) என்பது ஒரு செயலை செய்யும் நுட்பங்களை நவீனப்படுத்துவது. அதாவது ஓலைச்சுவடியில் எழுத்தாணி வைத்து எழுதுவதற்கு பதில் காகிதத்தில் பேனா வைத்து எழுதுவது நவீனமயம். அதை விட தட்டச்சு செய்வது நவீனமயம். அதை விட கணினியில் உள்ளீடுவது நவீனமயம். இன்று அலைபேசியில் உள்ளீடுவது நவீனமயத்தின் அடுத்தக்கட்டம். எழுத்தை தொடாமல் பேசுவதை கூகிள் எழுத்தாக மாற்றுவது சமீபத்திய முன்னேற்றம். கடிதம் – தந்தி – பேஜர் – அலைபேசி என்றும் நீங்கள் நவீனமயத்தை புரிந்து கொள்ளலாம். நவீனமயத்திற்கு எதிர்நிலையில் இருப்பது மரபு வழி (Traditional / Natural / Organic). மாருதி சீருந்தில் செல்பவர் டெஸ்லா மின்சீருந்தில் செல்வது நவீனமயம் என்றால், மாருதி சீருந்தை விட்டு விட்டு மீண்டும் மாட்டு வண்டியில் செல்வது மரபுவழி.

நான்கும் ஒன்றல்ல. ஆனால் சில நேரங்களில் ஒரு நிறுவனம் துவங்க இவை நான்கும் தேவை. சில நேரங்களில் மூன்று மட்டும் போதும். சில இடங்களில் இரண்டு மட்டும் போதும். சில நேரங்களில் ஒன்று மட்டும் போதும். இதில் முதல் மூன்றையும் சேர்த்து LPG – Liberalisation, Privatisation, Globalisation என்று மொத்தமாக கூறுவார்கள்.



இந்த நான்கு விஷயங்களையும் குறித்து நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டியது முக்கியம். காரணம் 1990 முதல் 2020 வரையிலான மூன்று தசாப்தங்களில் ஒவ்வொரு துறையிலும் இந்த நான்கு விஷயங்களுமே நடந்துள்ளன. உதாரணமாக நவீன மயத்தால் நடந்த நல்ல விஷயங்களை வைத்து (உதாரணமாக தொலைபேசி இணைப்பு ஒரே நாளில் கிடைப்பது) ஒரு கும்பல் உங்களை தனியார்மயத்தால் தான் இவை நடந்தது என்று ஏமாற்றப்பார்ப்பார்கள். அதே போல் தனியார்மயத்தால் நடந்த கெட்ட விஷயங்களை காட்டி (உதாரணமாக மருத்துவமனை கட்டனங்கள் உயர்ந்தது) நவீனமயத்தால் தான் இவை நடந்தது என்று சில உங்களை ஏமாற்றி உங்களை மரபு வழி நல்லினவிருத்தியியலுக்கு கொண்டு செல்ல முயல்வார்கள். மரபு வழி நல்லினவிருத்தியியல் குறித்து அறிய இந்த கதையை http://www.pgmed.org/oe படிக்கவும்

தகவலா ? கருத்தா? ஆசையா? விருப்பமா? நம்பிக்கையா?

சமூக ஊடகங்களில் நீங்கள் எழுதப்போவது தகவலா, கருத்தா, ஆசையா, விருப்பமா, நம்பிக்கையா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்
• தகவல் (Fact) வேறு
• கருத்து (Opinion) வேறு
• ஆசை / விருப்பம் (Wish / Desire) வேறு
• நம்பிக்கை (Belief) வேறு

தகவல் என்பது உண்மை.

யார் சொன்னாலும் அது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். உங்கள் தகவலும் என் தகவலும் வேறு வேறாக இருந்தால் இருவரில் ஒருவர் தவறு.
• உதாரணமாக இந்தியா 2011 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது என்று தான் நானும் சொல்ல முடியும் நீங்களும் சொல்ல முடியும். உங்களுக்கு இந்திய அணி பிடிக்கவில்லை என்பதால் நீங்கள் இந்தியா வெல்லவில்லை என்று மாற்றி சொல்ல முடியாது. அப்படி சொன்னால் நீங்கள் சொல்வது பொய். அது உண்மைத் தகவல் அல்ல

தகவல் என்பது
• அறிவு (Knowledge) சார்ந்து இருக்கலாம்
• விஷயம் (Information) சார்ந்து இருக்கலாம்
• தரவு (Data) சார்ந்து இருக்கலாம்

உதாரணமாக ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் வென்றார் என்பது தகவல். அதை நீங்கள் மறுக்கவே முடியாது. அதே போல் 05.06.2020 அன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 ரூபாய் என்பது சரியான தகவல். 05.06.2020 அன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 ரூபாய் என்பது பொய்.

கருத்து என்றால் என்ன ?

கருத்து என்பது, ஒரு துறையில் நிபுணராக இருக்கும் நபர் கூறும் கூற்று அல்லது அறிக்கை.

ஒரே விஷயத்தில் இரு நபர்களுக்கு வெவ்வேறு கருத்து இருக்கலாமா ? கண்டிப்பாக இருக்கலாம். அப்படி இருக்கும் இரண்டு கருத்துக்களும் (அந்த நபர்களின் படிப்பின், அனுபவத்தின், திறமையின் அடிப்படையில்) சரியாகவும் இருக்கலாம்

உதாரணமாக முதலாம் வருடம் மருத்துவம் படிக்கும் மாணவர் ஒருவர் ஒரு கண்ணை பார்த்து விட்டு அந்த கண்ணில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறலாம். அதே கண்ணை கண் மருத்துவத்துறை பேராசிரியர் பார்த்து விட்டு அதில் கண்புரை ஆரம்ப நிலையில் உள்ளது என்று கூறலாம். இரண்டுமே சரி தான்.

அது எப்படி ஒரே கண்ணை பார்த்து விட்டு ஒருவர் அதில் பிரச்சனை இல்லை என்றும் மற்றொருவர் அதில் பிரச்சனை உள்ளது என்றும் கருத்து கூறலாம் ? அது எப்படி இரண்டுமே சரியான கருத்தாக இருக்கலாம் என்றும் நீங்கள் கேட்டால், அதற்கு பதில் கருத்து என்பது, படிப்பு, அறிவு, ஞானம், அனுபவம், திறமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைவது. எனவே அதில் மாறுபாடு இருக்கும்

ஆனால் முழுவதும் புரை உள்ள ஒரு கண்ணை பார்த்து விட்டு முதல்வருட மாணவர் அந்த கண்ணில் பிரச்சனை இல்லை என்று கூறினால் அது பிழை.

ஆரம்ப கட்ட பார்க்கின்சன் நோயுடன் வருபவரை பயிற்சி மருத்துவர் ஒருவர் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அங்கு இருக்கும் நரம்பியல் நிபுணர் கண்டு பிடித்து விடுவார். இதில் யாருமே பிழை செய்யவில்லை. ஆனால் இப்படி வருபவரிடம் நோயில்லை என்று சொன்னால் அது தான் பிழை

மற்றொரு உதாரணம் கூறுகிறேன்

கடுமையான புயல் அடிக்கிறது, மழை பெய்கிறது, விமான ஓடுதளத்தில் விளக்குகள் சரியாக செயல்படவில்லை. 20 வருட அனுபவம் உள்ள ஒரு விமானி, விமானத்தை ஓடு தளத்தில்சரியாக இறக்கி விடுகிறார். ஆனால் 1 வருட அனுபவம் உள்ள விமானி இறக்கும் போது விமானம் ஓடுதளத்தை தாண்டி சென்றுவிடுகிறது. இந்நிலையில் நீங்கள் 1 வருட விமானி தவறு செய்து விட்டார் என்றோ, கவனக்குறைவாக இருந்து விட்டார் என்றோ கூட முடியுமா ? கண்டிப்பாக முடியாது

அதே நேரம்
நல்ல வானிலை இருக்கும் போது, விளக்குகள் ஒழுங்காக செயல்படும் போது ஓடுதளத்தை விட்டு வேறு இடத்தில் இறக்கினால் அது பிழை

இது மருத்துவத்துறையில் மிகவும் சாதாரணம்
இதனால்தான் வசதி குறைவாக உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை தேவைப்படும் பிரசவத்தை வசதி அதிகமுள்ள மருத்துவமனையில் சுகப்பிரசவமாக பார்க்கலாம்

அதே போல் ஒரே நோய்க்கு இரு மருத்துவர்கள் வெவ்வேறு சிகிச்சை சொல்வார்கள். இரண்டுமே சரியாக இருக்கலாம்

அது சரி
யார் வேண்டுமானாலும் எந்த விஷயத்திலும் கருத்து சொல்லலாமா ?
உங்கள் ஈகோவை ஓட்டை போடுவதற்கு மன்னிக்கவும்
இதற்கான பதில் “இல்லை” என்பதே ஆகும்

ஒரு விஷயம் குறித்து கருத்து கூற கீழ்க்கண்டவை அவசியம்
1. அந்த துறை குறித்த பொதுவான அடிப்படை அறிவு
2. கருத்து கூறும் குறிப்பிட்ட விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு
3. அது போன்ற விஷயங்களில் அனுபவம்
4. அந்த விஷயத்தில் நிபுணத்துவம்
5. திறமை
6. தரவு

இந்த ஆறு விஷயங்களும் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் கருத்தின் துல்லியமும், பிழையின்மையும் அதிகரிக்கும். இதில் 6 மட்டுமே இணையத்தில் ஒரே நாளில் கிடைக்கும். 3,4,5 எல்லாம் பெற பல வருடங்கள் ஆகும்.

உதாரணமாக ஒரு விமானம் ஓடுதளத்தை விட்டு தள்ளி இறங்கியது என்றால்
அந்த விமானி தவறு செய்தாரா இல்லை என்று கருத்து கூற அதே விமானத்தை ஓட்டிய அனுபவம் உள்ள மற்றொரு விமானிக்குத்தான் தகுதி உள்ளதே தவிர மற்றவர்களுக்கு தகுதி இல்லை

அரசியல் சாசனம் கருத்துரிமை வழங்கியுள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா ? அரசியல் சாசனம் வழங்கியிருப்பது பேச்சுரிமை மற்றும் நீங்கள் நினைப்பதை வெளிப்படுத்தும் உரிமைதானே (Freedom of Speech and Expression) தவிர உங்களுக்கு சம்மந்தம் இல்லாத விஷயங்களில் எல்லாம் அடிப்படையை தெரிந்து கொள்ளாமல் அபத்தமாக கருத்து கூறும் உரிமை அல்ல

அப்படி என்றால் எந்த விஷயம் குறித்தும் பேசவே கூடாதா என்றால், பேசலாம். ஆனால் அந்த பேச்சு என்பது விருப்பம் அல்லது ஆசை என்பதில் கீழ் தான் வரவேண்டுமே தவிர கருத்து என்று கூறக்கூடாது

புயலின் போது விமானம் ஓடுதளத்தை விட்டு தள்ளி இறங்கினால் விமானி ஓடுதளத்தில் இறக்கியிருக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை கூறலாமே தவிர, விமானி தவறு செய்த்து விட்டார் என்ற கருத்தாக அதை கூறக்கூடாது

இது தான் கருத்திற்கும், ஆசைக்கும் வித்தியாசம்

இது என் ஆசை என்று நீங்கள் பொதுவெளியில் கூறினால் அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதை உங்கள் கருத்தாக கூறினார், அந்த துறையில் நிபுணர் அதை மறுக்கலாம். அப்படி இருக்கும் போது, “இது என் கருத்து, இது அரசியல் சாசன உரிமை” என்று சண்டை போடுவது வீண்

நம்பிக்கை என்றால் என்ன ?

இது உங்களுக்குள் நீங்களே நம்பிக்கொள்வது. நம்பிக்கை நம்பிக்கையாக இருக்கும் வரை எந்த விவாதத்திற்கும் உட்பட்டது அல்ல
அதே நேரம் நம்பிக்கையை பொதுவெளியில் கருத்தாக கூறினால் விவாதம் வரும்

மேலும் சில உதாராங்களை பார்க்கலாம்

• தகவல் : தலைக்கவசம் அணிந்தால் உயிர்கள் பாதுகாக்கப்படும்
• கருத்து : தலைக்கவசம் என்பது அவசியம்
• விருப்பம் : எனக்கு தலைகவசம் அணிய விருப்பம்
• விருப்பம் : எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை
• நம்பிக்கை : தலைகவசம் அணியாவிட்டாலும் கூட எனக்கு ஒன்றும் ஆகாது

இதில் “தலைகவசம் அணியாவிட்டாலும் கூட எனக்கு ஒன்றும் ஆகாது” என்ற நம்பிக்கையின் அடிப்படையில் “எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை” என்று நீங்கள் கூறினால் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் “எனக்கு தலைகவசம் அணிய விருப்பம் இல்லை” என்ற உங்கள் விருப்பத்தை “தலைகவசம் அணியவது தேவையில்லை” என்ற அபத்த கருத்தாக கூறிவது தான் பிரச்சனை

அடுத்த உதாரணம்
• தகவல் : சச்சின் 463 ஆட்டங்களில் 18426 ஓட்டங்களும் விராட் கோலி 238 ஆட்டங்களில் 11867 ஓட்டங்களும் பெற்றுள்ளார்
• கருத்து : ஆட்டங்களின் அடிப்படையில் சச்சினை விட கோலி சிறந்த ஆட்டக்காரர்
• கருத்து : தொடர்ந்து விளையாடினால் கோலியால் சச்சினின் ஓட்டங்களை விட அதிகம் பெற முடியும்

• விருப்பம் : எனக்கு சச்சின் பிடிக்கும்
• விருப்பம் : எனக்கு சச்சின் பிடிக்காது

இதில் உங்களுக்கு சச்சினை பிடிக்கலாம், அல்லது பிடிக்காமல் போகலாம். ஆனால் அதனால் சச்சின் எடுத்த ஓட்டங்கள் கூடவோ குறையவோ செய்யாது. அதே போல் சச்சின் மேட்ச் வின்னர் இல்லை என்ற பொய்யை சொல்லக்கூடாது

ஆக நம்பிக்கை என்பது உங்களூக்குள் இருக்கவேண்டியது, ஆசை என்பதை வெளியில் சொல்லலாம். இவை இரண்டும் தான் அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகள்

கருத்து கூற உங்களுக்கு உரிமை உள்ளது. அதே நேரம் அந்த கருத்து கூற உங்களுக்கு தகுதியுள்ளதா என்பதை பரிசீலனை செய்து விட்டு கருத்து கூறினால் பிரச்சனை இல்லை. அல்லது உங்கள் விருப்பத்தை கருத்தாகவோ தகவலாகவோ திணிக்க முயன்றால் இணையத்தில் பஞ்சாயத்து வரும்

உதாரணமாக பில் கேட்ஸ் கொரோனா குறித்து கருத்து கூறுகிறார். காரணம் அவர்
• இது குறித்து படித்துள்ளார்
• பல ஆண்டுகளாக தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்துகிறார்
• அந்த தரவுகளை வைத்துள்ளார்
• அதை வைத்து அவர் கருத்து கூறுகிறார்
இதுவும், வாட்சப்பில் வருவதை நம்பி பொது வெளியில் உளறி மாட்டிக்கொள்வதும் ஒன்றல்ல

ஆசை / விருப்பம் கருத்து என்பதில் சரியான ஆசை / விருப்பம், தவறான ஆசை / விருப்பம் என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் ஆசை / விருப்பம் அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம்
• ஒரு ஆசை / விருப்பம் – தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்
• வேறு ஒரு ஆசை / விருப்பம் – பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

நீங்கள் என்ன ஆசை / விருப்பம் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் நீங்கள் கூறும் ஆசையுடன் எக்காரணம் கொண்டும் தவறான தகவல்களை தர முடியாது உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து.

ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (பொய் சொன்னால்), அது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

Why Accreditation of Labs will lead to more sickness / disability / morbidity and more deaths / mortality

Why Accreditation of Labs will lead to more sickness / disability / morbidity and more deaths / mortality
Why Accreditation of Labs will lead to more sickness / disability / morbidity and more deaths / mortality

Q1 : What are the benefits of #accredidation of a lab
A1 :
(a) Increased #Precision of Lab Reports
(b) Increased #Accuracy of Lab Reports

Q2 : What are the cost of accredidation of a lab
(a) One Time Cost to Setup the lab increased
(b) Recurrent Cost for each test increased

Difference between
#Precision and #Accuracy
is explained here



Q3 : What happens when the One Time Cost to Setup the lab increased
A3 : There will be fewer labs

Q4 : What will fewer labs lead to
A4 : It leads to
Reduced #availability of a test. You can’t do a test
Reduced #accessibility of a test. You need to travel far to do the test

Q5 : What happens #Recurrent Cost for each test increased
A5 : Test will cost more

Q6 : What does High Cost of a test lead to
A6 : It leads to
You spending more for a test
and as a result
Doing Less Tests than needed

When you #accredidate a lab, you get a More #Precise and More #Accurate Results

But

At the same time
Tests are not #available to many
Tests are not #accessible to many
Tests are not #affordable to many

The number of people doing tests drastically reduces

And
Number of times, a person does a test also drastically comes down

So
Accreditation has #Benefits (Precision and Accuracy)
Accrediation also has #ADVERSE EFFECTS (tests are not done even when it is needed)

Q7 : Which is greater
A7 : The Adverse Effects are greater

Q8 : Can you please show me a study, Cochrane review, Data to prove that Accreditation of Lab is harmful
A8 : There is no study to prove tha parachutes are useful

Q9 : Is this the answer to Q8
A9 : Yes. It is
It means that If you ask data for something which is obvious, you are idiot

Q10 : Are you saying that there should be no quality control for lab test
A10 : No. I support Quality Control. No Doubt. But I need tests first

There is no use in having quality control, improved accuracy, improved precision

If 90 % of population are going to be with no test at all

There are three options here
1. Tests with Accreditation
2. Tests without Accrediation
3. No Test

Between 1 and 2, I will chose 1
But
Between 2 and 3, I will chose 2

Please realise that your attempt at moving from 2 to 1 actually leads to less than 10 percent getting that benefit while 90 percent moves from 2 to 3



PNB Loan Crisis : Privatize Banks or Nationalize Jewelries

  • One Intelligentsia : I am thinking aloud, If Nationalised Banks had been privatised, would these issues occur.
  • Me : Yes, It would still Occur. But If All Industries above 1 crore is Nationalised, this won’t occur
  • Intelligentsia : Blinks and Gulps and Moves Away

They say “Never Argue with Idiots. They bring you to their level and win through familiarity”
I would say that the first part of the logic always happen, but winning can be either way depending on how smart you are