Comment :
Anti thrombosis therapy for COVID-19 has always been a part of treatment guidelines.
https://www.covid19treatmentguidelines.nih.gov/therapies/antithrombotic-therapy/ It’s high time TN docs follow such validated ones rather than following their own cocktails.
My Response :
They are doing this only during hospital stay and stop it without checking coagulation profile But, I am asking this to be done based on coagulation profile
Use of steroids Was done by us Months before it was added to NIH
By the time they validate, We will lose another lakh
What is wrong in doing coagulation profile and treating that ??
Other than cost, Can you give any reason
Comment :
Use of steroids started because someone saw it being considered in certain trials (Solidarity trial). We ended up using it indiscriminately leading to mucor surge.
My Response :
For decades, We have been using steroids for treating pneumonia
You are answering the question : How to ignore Bruno’s recommendations
I am answering the question : How to save lives
Both are talking entirely different topics
Between The recommendation you have quoted and my recommendations, which can save more lives
Comment :
Evidence based medicine vs Eminence based medicine. What do u prefer ?
If you want to prove something then conduct a study – even a small one – look at the results and communicate widely.
My Response :
I prefer evidence based medicine
I prefer to give anticoagulants based on PT, aPTT, INR and other tests
I don’t prefer eminence based medicine – of quoting NIH guidelines – ignoring basic common sense
That is exactly what I say – Do coagulation profile, Treat as per results
What is wrong in the statement – Do coagulation profile and treat as per results
This is the evidence based medicine
Is it clear boss
Prove what ?
You want proof for the statement “Treat abnormal coagulation profile”
Come on saaar. . . It is 2nd year mbbs stuff
Comment :
Treat abnormal coagulation profile – is part of inpatient management boss – done routinely everywhere
My Response :
Perfect
That is what I am also saying
So
What did you really want me to prove
Comment (quoting my journal article) :
this – the prophylactic part
My Response :
The first statement is Do Coagulation profile for those at risk
The second Statement is Treat abnormal coagulation profile
Which statement are you asking proof
Which statement is not evidence based medicine
Read again
I never ask to give drugs
I ask to first do tests and give drugs only when results indicate it
What is the problem there
கிணற்றில் இருந்து நீரை எடுக்கவேண்டுமென்றால் கயிற்றில் வாளியை கட்டி எடுக்கலாம்.
அல்லது ஓடி (மோட்டார்) மூலம் எடுக்கலாம். அப்படி ஓடி (மோட்டார்) மூலம் எடுக்கும் போது நீர் வர ஒரு குழாய் தேவை. அத்துடன் ஓடிக்கு மின்சாரம் கொண்டு வர கம்பி (வயர்) தேவை
-oOo-
Bruno’s Tweet on Nerve Vein Artery
இதே போல் நமது உடம்பில் சில உறுப்புகள் உள்ளன. எலும்புகளை எலும்புடன் சேர்க்கும் எலும்புநாண் / எலும்புநார் (Ligament)
எலும்புகளை தசையுடன் சேர்க்கும் தசைநார் (Tendon)
இரத்தத்தை கொண்டு சேர்க்கும் இரத்தக்குழாய்கள் (Blood Vessels)
உறுப்புகளில் இருந்து மூளைக்கு செய்திகளை அனுப்பும், மூளையில் இருந்து உறுப்புகளுக்கு செய்திகளை அனுப்பு நரம்புகள் (Nerves)
-oOo-
இதில் இரத்த குழாய்கள் என்பது இருவகைப்படும்
இதயத்தில் இருந்து பிற உறுப்புகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமணிகள் (Arteries)
பிற உறுப்புகளில் இருந்து இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் சிரைகள் (Veins)
-oOo-
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் நாம் திரவங்களை ஏற்றுகிறோம் அல்லவா. அதற்கு நாம் பயன்படுத்துவது சிரைகளை (Veins). இரத்தம் ஏற்ற வேண்டும் என்றாலும் சிரைகள் மூலம் தான் ஏற்றவேண்டும். அதே போல் ஊசியில் மருந்து செலுத்தும் போதும் சிரைகளில் செலுத்தலாம். இதை சிரை வழி திரவம், (Intravenous Infusion) சிரை வழி ஊசி / சிரையுள் ஊசி, சிரைவழியாக ஊசி, சிரையக ஊசி (Intravenous Injection or IV Injection) என்று அழைப்பார்கள்.
தசைகளில் (தோளில், பிட்டத்தில்) போடப்படும் ஊசி தசையுள் ஊசி (Intra muscular Injection or IM Injection).
தோலுக்கு அடியில் போடப்படும் தோலடி ஊசி (Subcutaneous Injection or SC Injection)
தோலுக்குள் போடப்படும் ஊசியும் உண்டு (Intradermal)
-oOo-
இன்று நாம்
எலும்புநாண் / எலும்புநார்
தசைநாண் / தசைநார்
தமணி
சிரை
நரம்பு
என்று பிரித்து சொன்னாலும்
ஒரு காலத்தில்
இவை அனைத்தையும் நரம்பு என்றே அழைத்தார்கள்.
இந்த பிரச்சனை தமிழில் மட்டுமல்ல, கிரேக்க மொழியிலும், இலத்தீன் மொழியிலும் இதே போல் தான் இருந்துள்ளது
The Greek word neuron was used to designate a tendon, but also a nerve, ligament and vein.
Latin expression nervus designated a muscle, a tendon, a nerve or something formed from tendons (Oxford Latin Dictionary, 1968)
Latin Nervus; Greek Neuron; Tamil Narambu நரம்பு all three used to denote Nerves, Veins, Tendon, Ligament
-oOo-
எனவே சிரைவழி ஊசிகளை நம் மக்கள் நரம்பூசி என்றே அழைத்தனர்.
முன்னோர் தான் முட்டாள் இல்லையே, பிறகு நாம் ஏன் அதை மாற்றவேண்டும், அப்படியே தொடர்ந்து அழைக்கக்கூடாது என்று கேள்வி எழுகிறதா ?
இதற்கு பதில் உள்ளது
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிரை வழி ஊசிகள் மட்டுமே போடப்பட்டு வந்தன. எனவே நரம்பூசி என்று அழைத்தாலும் கூட அது சிரைக்குள் செலுத்துவதை மட்டுமே குறித்தது.
ஆனால்
அறிவியல் வளர வளர
தமணிக்குள்ளும் ஊசிகளை செலுத்தும் பழக்கம் வந்தது. முக்கியமாக புற்று நோய் சிகிச்சையில் இது 1950களில் இருந்தே பயன்பாட்டில் உள்ளது (Klopp CT, Alford TC, Bateman J, Berry GN, Winship T. Fractionated intra-arterial cancer; chemotherapy with methyl bis amine hydrochloride; a preliminary report. Ann Surg. 1950;132:811–32 & Bonner CD, Thurman A, Homburger F. A critical study of regional intra-arterial nitrogen mustard therapy in cancer. Ann Surg. 1952;136:912–8)
அதே போல்
நரம்புகளை சுற்றி மருந்து செலுத்தும் பழக்கமும் உள்ளது. அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருக்க போடுகிறார்கள் அல்லவா. அந்த ஊசியை நரம்புகளை சுற்றி செலுத்துவார்கள். இதை மரத்து போகும் ஊசி என்றும் அழைப்பார்கள். ஸ்பைனல் அனஸ்தீசியா என்பதும் இந்த வகைதான்
எனவே இன்றைய தேதியில்
நரம்பூசி என்பது வேறு
தமணியுள் ஊசி என்பது வேறு
சிரையுள் ஊசி என்பது வேறு
எனவே
இனியும் சிரைவழி திரவங்களையும், சிரையுள் ஊசியையும் “நரம்பூசி” என்று பொதுவாக அழைப்பதை தவிர்க்கலாமே
-oOo-
நரம்பு துண்டாகி இரத்தப்போக்கு ஏற்பட்டு வாலிபர் பலி என்று இந்த செய்தியில் தவறாக உள்ளது
நரம்பு துண்டாகி இரத்தப்போக்கு ஏற்பட்டு வாலிபர் பலி என்று இந்த செய்தியில் தவறாக உள்ளது
தமணி துண்டாகி அல்லது சிரை துண்டாகி என்று எழுதியிருக்கவேண்டும். தமணியா, சிரையா, எது பிரச்சனை என்று தெரியாவிட்டால் ”இரத்தக்குழாய் துண்டாகி என்று எழுதியிருக்கலாம்” இப்படி எழுதுவது பிழை
1990களில் இந்தியாவில் Hire and Fire நடைமுறை வந்தது. அதன் பிறகு Outsourcing / Contract (ஒப்பந்தப்பணி) ஆகியவை வந்தன
இதன் பின்னால் இருக்கும் முக்கிய காரணி – Technology அல்லது தொழிற்நுட்பம்
-oOo-
முன் காலங்களில் ஒரு வேலையை செய்ய நிறைய திறமை, நிறைய அனுபவம் தேவைப்பட்டது.
அல்லது / மற்றும்
நீண்ட கால அனுபவம் உள்ளவர் செய்வதற்கும், குறுகிய காலம் அனுபவம் உள்ளவர் செய்வதற்கும் வித்தியாசம் நிறைய இருந்தது
எனவே நீண்ட கால அனுபவம் உள்ளவர்கள் தேவைப்பட்டார்கள்.
ஆனால் தொழிற்நுட்பம் வளர வளர,
தேவைப்படும் அனுபவம் குறைந்தது
அல்லது / மற்றும்
நீண்ட கால அனுபவம் உள்ளவர் செய்வதற்கும், குறுகிய காலம் அனுபவம் உள்ளவர் செய்வதற்கும் வித்தியாசம் குறைந்தது
-oOo-
உதாரணமாக மருத்துவமனை மருந்தகத்தில்அந்த காலத்தில் Compounder என்று ஒருவர் இருந்தார். அப்பொழுது மருந்தகத்தில் (Pharmacy) மருந்துகள் செய்யப்பட்டன.
Mixtures, Lininment, Ointment, Cream எல்லாம் அங்கு செய்யப்பட்டன. எனவே அதற்கு அனுபவம் தேவை.
புதிதாக வருபவர் செய்யும் Ointment mixture போல் வரும் ரிஸ்க் இருப்பதால் நிறுவனங்கள் அனுபவம் மிக்க மருந்தாளுனர்களை இழக்க விரும்ப மாட்டார்கள். எனவே நிரந்திர பணி அளித்தார்கள்.
ஆனால் இன்று அனைத்தும் Blister pack, tubeகளில் வருகின்றன. எனவே மருந்தாளுனரின் வேலை என்பது செஷ்பில் இருந்து எடுத்து கொடுப்பது தான். எனவே பணி நிரந்தரம் இல்லை
அதே போல்
முன் காலங்களில் ஆய்வகங்கள் ஒவ்வொரு பரிசோதனையையும் தனியா செய்ய வேண்டும்
இப்பொழுது Semi Auto Analyser வந்து விட்டது. பல பரிசோதனைகள் Card Test / Rapid Kit ஆக வந்து விட்டன.
எனவே அனுபவத்தின் மதிப்பு குறைந்துள்ளது
-oOo-
மலேரியாவை கண்டு பிடிக்கும் ஆய்வக நுட்பனர் பணி என்பது நிரந்தர பணியாக உள்ளது. காரணம் இது அனுபவம் தேவைப்படும் வேலை
எய்ட்ஸ் சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆய்வக உதவியாளர் ஒப்பந்த பணியில் உள்ளார். இது சில நாட்கள் பயிற்சி பெற்றால் போதும்
-oOo-
ஒப்பந்த பணியால் வேறு பல பிரச்சனைகள் உள்ளன. அதை நான் முழுவதும் ஆதரிக்கவில்லை. அது வேறு விஷயம் – அது குறித்து தனியாக பேசலாம்
இங்கு கூறவரும் விஷயம் என்னவென்றால்
When technology has replaced your skill, you have lost your bargaining power
-oOo-
1990கள் வரை நிறுவனங்களின் இன்றியமையாத பங்காக தட்டச்சர்கள் இருந்தார்கள். ஏன் ? நிறைய கடிதங்களை விரைவாக அடிக்கவேண்டும். தவறில்லாமல் அடிக்கவேண்டும்
ஆனால் கணினி வந்த பிறகு தவறுகளை திருத்தும் வாய்ப்பு வந்த பிறகு “தவறில்லாமல் அடிப்பது” என்ற திறமைக்கு மதிப்பில்லை
-oOo-
சுவரில் படம் வரைபவர்களின் வேலையை போட்டோஷாப் + கோரல்டிரா + ப்ளெக்ஸ் பிரிண்டிங் பறித்தது
செயற்கை நுண்ணறிவு வந்து பழைய படத்தை சீரமைக்கும் திறமை சாலிகளின் வேலையை பறிக்கும். இந்த படத்தை பாருங்கள்.
(மூலம் : https://www.facebook.com/chithranraghu/posts/10227921004110055
மென்பொருள் : https://github.com/TencentARC/GFPGAN & https://replicate.com/xinntao/gfpgan)
2000களின் ஆரம்பம் முதல் இன்று வரை மிக அதிகமாக தேவைப்படும் ஒரு திறமை (பழைய படங்களை புதுப்பிற்பது) இனி பின்னால் சென்று விடும்
-oOo-
எனவே
நிரந்தர பணி x ஒப்பந்தப்பணி
குறித்த உரையாடல்களில்
உலகவங்கி, காட் என்று மட்டும் ஜல்லியடித்துவிட்டு
தொழிற்நுட்பத்தின் பங்கு குறித்து பேசவில்லை என்றால்
அது முழுமையாகாது
-oOo-
இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் இருக்கும் தொழிற்சாலைகள் உருப்படுவதில்லை
காங்கிரஸ், திமுக தொழிற்சங்கங்கள் பலமாக இருக்கும் தொழிற்சாலைகள் தப்பிக்கின்றன
காரணம் என்ன தெரியுமா ?
-oOo-
இதற்கு செல்லவதற்கு முன்னர் இந்த கோப்பை வாசியுங்கள்
சிகிச்சையில் முக்கியம்
1. அந்த சிகிச்சை இருக்கவேண்டும்
2. அந்த சிகிச்சை நம் அருகில் இருக்கவேண்டும்
3. அந்த சிகிச்சை நம் அருகில், நம்மால் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும்
4. அந்த சிகிச்சை நம் அருகில், நம்மால் வாங்கக்கூடிய விலையில், தரத்துடன் இருக்கவேண்டும்
இதில் முதலில் தேவை – இருப்பது
அடுத்த முக்கியம் – அருகில் இருப்பது
அடுத்த முக்கியம் – வாங்கும் விலையில் இருப்பது
அடுத்த முக்கியம் – தரமாக இருப்பது
மிக அதிகமான தரமாக உள்ளது, ஆனால் வாங்கும் விலையில் இல்லை என்றால் பலனில்லை
மிக அதிகமான தரமாக உள்ளது, ஆனால் அருகில் இல்லை என்றால் பலனில்லை
எனவே எப்பொழுதும் Order of Priority முக்கியம்
-oOo-
ஊதியம் அவசியம்
அதை விட தொழிலாளர் நலன் அவசியம்
இவர் இரண்டும் எப்பொழுது அவசியம் ?
அந்த தொழிலாளி வேலையில் இருந்தால் தானே இவை இரண்டிற்கும் அர்த்தம் உண்டு
வேலையில் இல்லை என்றால் அதிக ஊதியம் என்ற கோரிக்கையால் ஏதாவது பலன் உண்டா ?
தொழிலாளி வேலையில் இருக்கவேண்டும் என்றால் எது அவசியம் ?
தொழிலாளி வேலையில் இருக்கவேண்டும் என்றால் அந்த தொழிற்சாலை, நிறுவனம் இயங்கவேண்டும்
எனவே
முதல் தேவை – தொழிற்சாலை இயங்கவேண்டும்
அடுத்த தேவை – நமக்கு (தொழிலாளிக்கு) வேலை வேண்டும்
அடுத்த தேவை – நமது அடிப்படை உரிமை + பாதுகாப்பு வேண்டும்
அடுத்த தேவை – ஊதிய உயர்வு வேண்டும்
-oOo-
காங்கிரஸ், திமுக தொழிற்சங்கங்கள் இந்த கருத்தில் தெளிவாக இருப்பார்கள்
ஊழியரின் உடல் நலத்திற்கோ, உயிருக்கு ஆபத்து என்ற நிலை எற்பட்டால் தவிர அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு படமாட்டார்கள்
மீதி பிரச்சனைகளை ”பேசியே தீர்த்துக்கொள்வார்கள்”
லாக் அவுட் போன்ற விஷயங்களினால் தொழிற்சாலைக்கு நஷ்டம் என்றால் அது ஊழியர்களை பாதிக்கும் என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்
-oOo-
கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களை பொருத்தவரை
அவர்களுக்கு போராட்டம் தேவை
அதனால் ஊழியருக்கு வேலை போனாலும் பரவாயில்லை (விடுங்க பாஸ், கோர்ட்டில் போய் வாங்கிக்கலாம்)
அதனால் தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டாலும் பரவாயில்லை (விடுங்க பாஸ், லேபர் டிபார்ட்மெண்டில் பேசி செட்டில்மெண்ட் வாங்கலாம்)
என்று தான் இவர்களின் செயல்பாடு இருக்குமே தவிர
அவர்கள் சங்கம் வளர்ப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கும் தவிர
ஊழியர் நலன் துளியும் இருக்காது
இது தான் என் அனுபவம்
-oOo-
ஆமை புகுந்த வீடும்
கம்யூனிஸ்ட் புகுந்த தொழிற்சாலையும்
உருப்பட்டதாக சரித்திரமே இல்லை
ஒருவருக்கு பைல்ஸ் பிரச்சனை அல்லது சிறுநீரக கோளாறு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
இப்பொழுது அவர் வைத்தியம் செய்து கொள்ள நிறைய இடங்கள் உள்ளன
1. அரசு மருத்துவமனையில் – இலவசமாக
2. தனியார் மருத்துவமனையில் – காசு கட்டி
3. தனியார் மருத்துவமனையில் – காப்பீடு மூலம் (அதாவது ஏற்கனவே காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தால்)
எந்த மருத்துவமனை செல்வது என்பதை தீர்மானிக்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நேரம் உள்ளது.
அவர் தனியார் மருத்துவமனையில் சேர்கிறார் என்றால், அவர் பணம் கட்டுவார் அல்லது அவரது காப்பீடு திட்டத்தை வைத்து அந்த மருத்துவமனை காப்பீடு நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பார்கள். அப்படி விண்ணப்பித்தவுடன், அந்த நிறுவனம் அதை அங்கீகரிக்கும். அதை வைத்து சிகிச்சை துவங்கும்
அவசரமில்லாத சிகிச்சைகளுக்கு இந்த பிரச்சனை இல்லை ஆனால் விபத்துக்களில் சிக்கல் உள்ளது
-oOo-
அடி சிறிது என்றால் – சிராய்ப்பு மட்டும் தான் என்றால்- முதலுதவி சிறிது தான், சிகிச்சையும் சிறிது தான்.
ஆனால் அடி பலம் என்றால் – தலைக்காயம் அல்லது விலா எலும்பு முறிவு, கை கால் எலும்பு முறிவு என்றால்- முதலுதவியும் அதிகம், சிகிச்சையும் அதிகம்.
உதாரணமாக,
சிராய்ப்பு என்றால் முதலுதவிக்கு 100 ரூபாய் ஆகும். மொத்த வைத்தியம் ரூ500 முதல் ரூ1000 வரை ஆகும்.
கை எலும்பு முறிவு என்றால் முதலுதவிக்கு 1000 ரூபாய் ஆகும். மொத்த வைத்தியம் ரூ10000-ரூ30000 வரை ஆகலாம்.
கால் எலும்பு முறிவு என்றால் முதலுதவிக்கு 10000 ரூபாய் ஆகும். மொத்த வைத்தியம் ரூ1 லட்சம் – ரூ2 லட்சம் வரை ஆகலாம்.
தலைக்காயம் / முதுகு எலும்பு முறிவு என்றால் முதலுதவிக்கே ரூ1 லட்சம் ஆகும். மொத்த கட்டணம் ரூ3 லட்சம் முதல் ரூ10 லட்சம் ஆகலாம்
இது புரிந்து கொள்ளத்தான். சரியான கட்டணம் என்பது நபருக்கு நபர் மாறுபடும்.
-oOo-
முதலுதவிக்கு 1 லட்சமா என்று கேள்வி எழுகிறதா ?
1980களில் முதலுதவி என்பது கட்டு போடுவது + வலிக்கு மாத்திரை அளிப்பது மட்டுமே. 1980களில் முதலுதவி என்பதை ஒரு சிறிய பெட்டிக்குள் அடக்கி விடலாம்
2021ல் முதலுதவி என்பதே பெரிதாகிவிட்டது
Philadelphia Collar / Spine Board / Pelvic Binders / Splints
Suction / OP Airway / NP Airway / Intubation / Tracheostomy
Ventilatory Suppor
Venflon / Central Line
Stat Lab
Volume Replacement Blood Transfusion
X Ray / eFast / CT / MRI
ICD / Pericardiocentesis
எனவே இன்றைய தேதிக்கு
உண்மையான முதலுதவி என்பது விபத்தின் தன்மையை பொருத்து 10 ரூபாயில் இருந்து (சிராய்ப்பு என்றால்) ரூ1 லட்சம் வரை (தலைக்காயம் + எலும்பு முறிவு + நுரையீரல் பாதிப்பு) ஆகும்.
-oOo-
சும்மா ஒரு கட்டு போட்டுவிட்டு, டிடி ஊசி போடுவது என்றால் 100 ரூபாய் செலவு. ஆனால் உண்மையில் உயிரை காக்க வேண்டும் என்றால் 1 லட்சம் செலவு.
சும்மா ஒரு கட்டு போட்டுவிட்டு, டிடி ஊசி போடுவது என்றால் 10 நிமிடம் தான் ஆகும். ஆனால் உண்மையில் உயிரை காக்க வேண்டும் என்றால் 6 மணி நேரம் வரை ஆகலாம்.
-oOo-
அந்த காலத்தில் எல்லாம் அடிபட்டால் 10 ரூபாய் தான் செலவு. இப்ப 1 லட்சமா, ஹாஸ்பிட்டல் எல்லாம் கொள்ளையடிக்கிறாங்க என்று புலம்புகிறீர்களா ?
சற்றுப் பொறுங்கள்.
விபத்தினால் நேரும் மரணங்களை கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
(1) முதல் வகை: மூளை, இதயம், மகாதமணி, முதுகுத்தண்டு ஆகியவை கிழிபடுவதால் ஏற்படும் உடனடி மரணம் – இது அடிபட்ட சில நொடிகளில் இருந்து 10 நிமிடங்களுக்குள் ஏற்படும். இதில் உயிரை காக்க வாய்ப்பு குறைவு. விபத்தை தடுப்பதன் மூலமே இதை தடுக்க முடியும்.
(2) இரண்டாம் வகை : மண்டக்குள் இரத்தக்கட்டு, நுரையீரலை சுற்றி இரத்தம் கட்டுவது, இதயத்தை சுற்றி இரத்தம் கட்டுவது, இரத்தப்போக்கு, மூச்சுத் திணறல் ஆகியவற்றால் ஏற்படும் மரணங்கள். இவை 10 நிமிடங்களில் இருந்து 2-3 நாட்களுக்குள் ஏற்படும். ஆனால் அடிபட்ட உடனே, அடிபட்ட 1 மணி நேரத்திற்குள் சிகிச்சையை அளிப்பதன் மூலம் இவர்களின் உயிரை காக்க முடியும்.
(3) மூன்றால் வகை : பிற அடிகள்.
-oOo-
1980களில் முதலுதவி என்பது கட்டு போடுவது + வலிக்கு மாத்திரை அளிப்பது மட்டுமே. 1980களில் முதலுதவி என்பதை ஒரு சிறிய பெட்டிக்குள் அடக்கி விடலாம். காரணம் அன்றைய காலக்கட்டத்தில் நாம் மூன்றாம் வகை அடிகளுக்கு மட்டும் தான் முதலுதவி செய்து வந்தோம்.
அன்றைய காலக்கட்டத்தில்
மண்டைக்குள் இரத்தக்கட்டு, நுரையீரலை சுற்றி இரத்தம் கட்டுவது, இதயத்தை சுற்றி இரத்தம் கட்டுவது, இரத்தப்போக்கு, மூச்சு திணறல் ஏற்பட்டால் மரணம் தான்.
அதாவது 1980களை பொருத்தவரை,
முதல் வகை + இரண்டாம் வகை இரண்டுமே ஸ்பாட் அவுட் தான்
ஆனால் 2021ல் நவீன அறிவியல் மருத்துவம் வளர்ந்த பிறகு இரண்டாம் வகைக்கு சிகிச்சை வந்துள்ளது. அதன் மூலம் உயிரை காக்க முடிகிறது. ஆனால் இதற்கு ரூ3 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஆகிறது. இந்த முதலுதவிக்கே ரூ1 லட்சம் ஆகிறது
அந்த காலத்தில் அடி பட்டு “ஸ்பாட் அவுட்” என்று கணக்கில் வந்தவர்களில் பாதி பேரை காக்க முதலுதவிக்கே 1 லட்சம் ஆகிறது.
அதாவது 10 ரூபாய் கட்டு போதுவது 1 லட்சம் ஆகவில்லை, புதிதாக 1 லட்சத்திற்கு சிகிச்சை வந்துள்ளது.
-oOo-
ஒருவர் சாலையில் செல்லும் போது விபத்துக்காகிறார் என்றால், அவர் கையில் 1 லட்சம் இருந்தால் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.
அவர் கையில் காசு இல்லை என்றால் அந்த தனியார் மருத்துவமனைக்கு யார் காசு கொடுப்பார்கள்?
அவர் கையில் காசு இல்லை, ஆனால் அவரிடம் காப்பீடு உள்ளது. அந்த காப்பீடு எண் கையில் இல்லை. அந்த தனியார் மருத்துவமனைக்கு யார் காசு கொடுப்பார்கள்?
இது தான் இன்று வரை இருந்த நடைமுறைச் சிக்கல்.
-oOo-
உதாரணமாக
ஒருவருக்கு விபத்தில் கை எலும்பு முறிந்துள்ளது, இது வரை 108 அம்புலன்ஸ்
அவரிடம் பணம் இருக்கிறதா?, காப்பீடு உள்ளதா?, உறவினர்களால் பணம் செலுத்த முடியுமா? என்ற எந்த கேள்வியும் கேட்காமல்
அவரை அரசு மருத்துவமனைக்குத்தான் அழைத்து செல்லும். அங்கு சென்று அவருக்கு முதலுதவி செய்யப்படும்.
பிறகு உறவினர்கள் எல்லாம் வந்த பிறகு
1. அவர்களிடம் காசு இல்லை என்றால் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம்.
2. அவர்களிடம் காசு அல்லது காப்பீடு இருந்தால் வேறு தனியார் மருத்துவமனை செல்லலாம்.
-oOo-
உதாரணமாக,
ஒருவருக்கு விபத்தில் கை எலும்பு முறிந்துள்ளது
அவரிடம் பணம் உள்ளது.
அவர் தனியார் மருத்துவமனை தான் செல்வேன் என்று சொன்னால் அம்புலன்ஸ் அவரை அங்கு அழைத்து செல்வார்கள்.
-oOo-
உதாரணமாக,
ஒருவருக்கு விபத்தில் தலையில் அடிபட்டு மயக்கமாகியுள்ளார். அவர் யார் என்றே தெரியாது. இது வரை 108 அம்புலன்ஸ்
அவரை அரசு மருத்துவமனைக்குத்தான் அழைத்து செல்லும். அங்கு சென்று அவருக்கு முதலுதவி செய்யப்படும்.
பிறகு உறவினர்கள் எல்லாம் வந்த பிறகு
1. அவர்களிடம் காசு இல்லை என்றால் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடரலாம்.
2. அவர்களிடம் காசு அல்லது காப்பீடு இருந்தால் வேறு தனியார் மருத்துவமனை செல்லலாம்.
-oOo-
இப்பொழுது தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டம் என்ன?
முழுசிகிச்சையில் முதலுதவி பகுதியை மட்டும் தனியாக பிரித்து அந்த முதலுதவிக்கு தமிழக அரசு பணம் கொடுக்கும் என்பது தான்.
இந்த திட்டத்தின் மூலம்
விபத்தில் அடிபட்டவரை அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.
அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லலாம். முதலுதவிக்கு அரசு பணம் கொடுக்கும் என்பதால்
மருத்துவமனையும் பணம் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையை துவங்குவார்கள். அவருக்கு முதலுதவி சீக்கிரம் கிடைக்கும்.
பிறகு அவரது உறவினர்கள் வந்த பிறகு அவர்கள் ஆற அமர முடிவு செய்து (இரண்டு நாட்களுக்குள்)
1. காசு அல்லது காப்பீடு இல்லை என்றால் அரசு மருத்துவமனைக்கு வரலாம்
2. காசு அல்லது காப்பீடு உள்ளது என்றால் அதே மருத்துவமனையில் தொடரலாம்
3. காசு அல்லது காப்பீடு உள்ளது என்றால் வேறு தனியார் மருத்துவமனை செல்லலாம்
-oOo-
இதனால் என்ன பலன்?
1. அடிபட்டவருக்கு : உதவி சீக்கிரம் கிடைக்கும். எனவே உயிரை காக்க வாய்ப்பு அதிகம். கை கால் ஆகியவற்றில் அடி பட்டிருந்தால் அந்த உறுப்புகளை காக்கவும் வாய்ப்பு அதிகம்.
2. உறவினர்களுக்கு : ஒருவர் விபத்தில் அடிபட்டார் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. அந்த நிலையில் அதே மருத்துவமனையில் தொடர்வதா, வேறு எங்கும் செல்வதா, எவ்வளவு காசு ஆகும், கையில் காசு உள்ளதா, கடன் வாங்குவதா, நகையை அடமானம் வைப்பதா என்ற முடிவு எடுக்கவேண்டாம்.
3. தனியார் மருத்துவமனைக்கு: அந்த நபர் அதே மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்ந்தால், அவர்களுக்கு வருமானம்.
4. அரசிற்கு : மக்களின் உயிரை காக்க முடியும்.
-oOo-
சும்மா இருப்பவர்களை கூட தனியார் மருத்துவமனைகள் பெரிய அடி இருப்பதாக காண்பித்து அதிக கட்டணம் வாங்க முடியுமா ?
முடியாது.
(1) 108 அம்புலன்ஸ்சில் ஒருவர் ஏறும் போதே அவரது உடல்நிலை என்ன என்பது குறித்து அவர்கள் பதிந்துவிடுவார்கள். அதை வைத்தே அவரின் முதலுதவிக்கு எவ்வளவு பணம் தேவை என்பதை சொல்லிவிடலாம்.
(2) விபத்து நடந்த பிறகு காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவார்கள். அதிலும் காயங்களின் தன்மை இருக்கும்.
எனவே இந்த இரண்டையும் வைத்து
இது 100 ரூபாய் முதலுதவியா, (சிராய்ப்பா) 1000 ரூபாய் முதலுதவியா, (கை எலும்பு முறிவா) 10000 ரூபாய் முதலுதவியா, (தொடை எலும்பு முறிவா) அல்லது 1 லட்சம் முதலுதவியா (தலைக்காயம், வயிறு கிழிந்துவிடுவது) என்பதை எளிதில் கண்டு கொள்ளலாம்.
-oOo-
“காவல்துறையும் மருத்துவமனையும் சேர்ந்து ஊழல் செய்வார்கள், எனவே இந்த திட்டத்தை எதிர்க்கிறேன்” என்று கூறுகிறீர்கள் என்றால் avada kedavra என்பதை தவிர சொல்ல எதுவும் இல்லை.
மேலும் அறிந்து கொள்ள இந்த காணொளியை பார்க்கலாம்
மருத்துவம் தொடர்பாக மூத்த எலும்பியல் மருத்துவர் லோகநாதன் சார் அவர்களின் பிற காணொளிகளை இங்கு காணலாம்
IKT – 48 மணி நேரம் நம்மைக்காக்கும் இன்னுயிர் காப்போம் திட்டம்
Creating Emergency Care Fund (IKT Fund)
50 Cr Assurance Mode
Fix ceiling of up to Rs. 1 lakh per individual
Empanelment of Government and Private Hospitals – 609
Integrate the 48 hour cashless scheme with the existing CMCHIS scheme after 48 hours
Selection of 81 Appropriate Packages
IKT Empanelled 609 Hospitals
Government Hospitals
Private Hospitals
Level 1 Hospitals
20
30
50
Level 2 Hospitals
74
157
231
Level 3 Hospitals
121
207
328
215
394
609
The Scope of coverage
If a patient needs admission and minor procedure (listed) which does not exceed 48 hours stay the same may be done at the hospital he/she is being admitted.
If the patient is not stable or requires procedures that may need Hospitalisation beyond 48 hours one of the following conditions may apply.
Stabilization of the patient and Discharge to any empanelled Hospital if the patient needs further treatment which is covered under Chief Minister’s Comprehensive Health Insurance Scheme and is eligible for Coverage.
Stabilization of the patient and Discharge to Government Hospital if the patient needs further treatment but the treatment is not covered under Chief Minister’s Comprehensive Health Insurance Scheme or eligible for Coverage.
Stabilization of the patient and continuation of treatment in same Hospital or any other hospital of his / her choosing if the patient is not willing for transfer to Government Hospital (or) has private Insurance (or) willing to continue treatment as a paid patient.
IKT – Categories of patients who will benefit under NK – 48
All accident victims on road within TN border including tourists from other states and foreigners
Accident victims brought by Good Samaritans
Accident victims brought by family
Accident victims who come by themselves
Unknown accident victim brought by police, or Good Samaritans
Mass casualty accident victims
IKT – NK 48 Exclusion criteria
Assault injuries
Domestic injuries
Fall from height
Injuries due to fall of heavy object
Train traffic accident injuries
Animal bites, Self harm
Occupational work place injuries
Thermal /Chemical/ Burn Injuries
Cracker Blast Injuries
5 Steps of Emergency Trauma Care
Prehospital Triage & Transportation by Ambulance along with in-transit care
Resuscitation & Stabilization in hospital Emergency Department
Damage Control Surgeries
Definitive Care
Rehabilitation
Step 1,2,3 – IKT
Steps 4,5 – KKT – CMCHIS
NK 48 Guideline
On receipt of information from the accident site, Life support ambulance with trained manpower will reach the spot, Triaging & basic resuscitation (cABC) will be done by EMT.
Patients maybe entitled for free treatment upto 48 hours in hospitals of IK – NK 48 Scheme empanelled private hospitals of neighbouring states if the accident occurs within Tamil Nadu but close to the state border.
NK 48 Guideline
5 Levels of triaging at the Accident Scene for guiding the EMT
Pre-hospital Triage & Acuity Scale
Description of the Acuity Scale
Equivalent Triage category
Level 1 – Resuscitation
Patient battling for life in need of resuscitation/Severe hemodynamic compromise/Shock/Traumatic amputation of an extremity
Red
Level 2 – Emergent
Seriously injured patient who requires rapid medical intervention/Penetrating head,chest or abdominal injury/Neurovascular compromise of an extremity
Red
Level 3 – Urgent
Patient with stable vitals, but the presenting problem suggests further evaluation
Minor contusions, abrasions, lacerations not requiring closure, Non urgent with minor complaint
Green
RTA – Patient comes to any Hospital
IK NK 48 Basic Trauma Package for any RTA Patient – Clinical examination ,Hb, Urea, Sugar,ECG,X –Ray Chest. Patient is stable. He will be discharge (Green Category)
Patient in Red / Yellow category
CMCHIS Card Holder(Upto 48 hours) IK – NK48 Empaneled Hospital
Treatment under IK – NK 48 Packages
CMCHIS Non Card Holder / other state / Foreign RTA victims (Upto 48 hours) IK – NK48 Empaneled Hospital
Treatment under IK – NK48 Packages
Packages applicable only Upto 48 Hours in the NK 48 empanelled 609 hospitals only. IFT Can be done within 48 hours based on the triage only among the NK 48 empanelled 609 hospitals
Treatment will be continued under CMCHIS as per existing packages
Non CMCHIS Card holder ( Govt / Pvt empanelled Hospitals under CMCHIS)
Treatment will be continued under free category in Govt Hospitals
Treatment will be continued under payment / pvt insurance by the patient in pvt hospitals
Other state / foreign RTA victims
Treatment will be continued under free category in Govt Hospitals
Treatment will be continued under payment / pvt insurance / PM-JAY by the patient in pvt hospitals
NK 48 Guideline
Critically ill (Red category) patient to be taken by 108 Ambulance service to the nearest empanelled Level 1 Hospital if located within 20-30km.
The Level 1 Hospital may be a Government Hospital or a private facility.
The patient should be transported in the shortest period to ensure advanced trauma life support.
If it is far, the patient should be stabilized in the nearest L2 or L3 hospital and through 108 ambulance should move the patient after stabilization to the L1 facility for definitive intervention.
2 hr mandatory resuscitation for a critically injured patient before any Inter-facility Transfer.
IFT with Pre-Arrival Intimation to the receiving hospital.
Time Norms in Emergency Care of RTA patients
NK 48 Guideline – Preauth & Claim
EI number should be obtained by the treating hospital, & the URN should be shared even with IFT(Inter facility transfer) Hospital till the treatment course is completed under IKT.
When treatment involves more than 1 hospital, the treatment time will be from the time of admission in the 1st hospital (upto 48 hours only).
NK 48 Guideline – Preauth
Pre-auth submission by Hospital
Within 4 hours of admission during 8 am to 6 pm.
Within 12 hours of admission during 6 pm to 8 am
PREAUTH CRITERIA
Any Identification Card.
If there is no Identity Card, a letter from Hospital to be submitted.
Patient’s Clinical Photo.
Preliminary Assessment Report duly certified by examining Doctor.
AR copy with treating Doctor’s sign.
If the patient needs additional treatment or procedure, Enhancement request may be applied with Secondary Survey report.
CLAIMS CRITERIA
Treatment Summary, Discharge Summary / Referral Letter/ Death Summary within 5 days from the date of admission.
Declaration that no money has been collected from the patient during the course of treatment
CMCHIS URN if available.
All investigations done, with Images.
Operative notes and Case sheet.
Hospital Bills (detailed).
IKT – NK 48 Claims
Claims settlement for NK 48 within 3 days from Claim submission.
CMCHIS call center will make telephonic enquiry on the patient status and keep a record.
Any Death within 1 month of major accident should be reported with PM report for record maintenance.
NK 48 Guideline
Strict follow-up and bench marking of hospitals as per TAEI standards.
Frequent Audits for quality of care
List of Packages
S.NO
Package Name
Rate (in Rs.)
1
TA001 : Central line
4000
2
TA002 : Intraosseous line
4000
3
TA003 : Cervical Collar (philadelphia)
1500
4
TA004 : Endotracheal Intubation
2000
5
TA005 : Tracheostomy
10000
6
TA006 : Oropharngeal Airway
2000
7
TA007 : Blood and Blood Component Transfusion
2000
TA007a : Blood and Blood Component Transfusion – additional uit
பெண்களுக்கு மாரடைப்பு வருவது மிக அரிது. இப்போதைய வாழ்வியல் முறை சகல விதிகளையும் உடைக்கிறது.
மரபியல் ரீதியாக
ஆரோக்யம் குறைவான பெண்கள்
அந்த காலத்தில்
பிறந்த வுடன் கக்குவான் இருமலினாலோ, போலியோவினாலோ
அல்லது காலராவினாமோ
பிரசவத்திலோ இறந்தவிடுவார்கள்
மிகவும் ஆரோக்கியமான மரபணுக்களை உடைய பெண்கள் மட்டுமே 30 வயது தாண்டினார்கள்
எனவே
30 வயதை தாண்டிய பெண் 100 வயது வரை வாழ்ந்தார்
இன்று
மருத்துவம் முன்னேறி விட்டதால்
ஆரோக்யம் குறைவான பெண்கள்
1 வயதில்
11 வயதில்
21 வயதில்
இறப்பது இல்லை
எனவே
அவர்களுக்கு மாரடைப்பு வருகிறது
இன்று 50 – 60 வயதில் மாரடைப்பு வந்து இறக்கும் பெண்கள் எல்லாம்
1980களுக்கு முன்னர்
50 வயது வரை வாழ்ந்திருக்கவே மாட்டார்க்ள்
பிரசவத்திலேயே
அல்லது
அதற்கு முன்னரோ இற்ந்திருப்பார்கள்
மாரடைப்பு வரும் மரபணுக்கள் உள்ள பெண்கள்
மாரடைப்பு வரும் வயது வரை வாழ்ந்து
பெண்களுக்கு மாரடைப்பு வருவது மிக அரிது.
இப்போதைய வாழ்வியல் முறை சகல விதிகளையும் உடைக்கிறது
அவர்களை அந்த வயது வரை வாழ வைக்கிறது
1. If a new consultant shows up ,showers “abuses”(literal) in OT,just because out of 90 patients, 89 RTPCR were sent in 2 hours timeline and one was missed.( One of the many examples)
2. Always shows that the students are absolutely poor in everything.
Yes,she/he teaches .
Asked by people around to accept the tantrums and abuses ,because the teacher is good.
But,
How long will this culture and attitude continue ?
Isn’t it a high time to stop passing down the same tantrums , which you were part of in your residency (in the other top institute of country and a good name worldwide) ?
I don’t agree with this, that – We learn under stress/upon listening “kind” words.
Opinions/ Suggestions please.
My Answer
There can Three possibilities
1
The consultant behave the same with every one – staff, OT Technician etc
2
The consultant behaves like this only with students, but nice with other cadres
3
The consultant behave the nice with all others (including other students) but is nasty only with you
-oOo-
1
If the consultant behave the same with every one –> then it is his nature. It requires a long term correction. Being a resident, it is not your job. Just follow the EIEO Policy (ear in ear out – means, don’t take words beyond your auditory nerve into your cortex)
2
If the consultant behaves like this only with students, but nice with other cadres, then it is a result of the misconception that “Abusers are best teachers and abused students are best students” . . . Sadly, there are many doctors who support this even today . . . You can’t do much except taking a pledge that you won’t abuse your students when you become a teacher
3.
If the consultant behave the nice with all others (including other students) but is nasty only with you, the fault may be with you or with him/her
If the fault is with you, correct yourself
If the fault is with him/her, change the Unit
333 BCE. Alexander’s army was passing through Cicilia (Modern day Turkey). Alexander the Great decided to take a bath in the icy water of the river Cidnus (Now called ‘Berdan’). The following day he developed fever, and gradually it led to febrile convulsions. The royal physicians accompanying the king were very scared and reluctant to treat him as they knew the consequence of any glitch in the treatment could cost their life. A physician named Philip from Acarnania was bold enough and came forward to treat Alexander. He prepared a medicinal draught for the seriously ill king. When Alexander was about to drink this potion, a letter arrived from Parmenio, one of his military generals. The letter accused that Persian king Darius III bribed Philip to poison Alexander. Alexander read the letter, and with the paper still in his hand, swallowed the cup of medicine. After finishing the medicine, he passed the letter to Philip. No, Alexander the Great did not die of poisoning; he recovered within a short time and led his army to conquer the world.
Many years later, in 1870, the Polish painter Henryk Siemiradzki described this incident in his painting. This story is so relevant for the present time. The story tells us about the importance of mutual trust between a doctor and a patient despite the harsh environment. If the trust is lost, no doctor will take the risk to treat a rare disease (how severe it is). And without a faith on his physician, no patient will progress towards recovery. Healing begins when both patients and physicians develop this trust.
கோவிட்19 தடுப்பு நடவடிக்கைக்கான பொது நடவடிக்கைகள் குறித்த கையேடு
பொதுவான அறிவுரைகள்
வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் / பிற நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பொது போக்குவரத்து உரிமையாளர்கள் / ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மளிகைக்கடை / பழக்கடை / காய்கறி கடை / மீன் கடை / மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அரசு அலுவலகங்கள் / தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தங்கும் விடுதிகள் / உணவகங்களின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
விடுகளில் வேலை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குடியிருப்புகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வீட்டினுள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குழந்தைகள் குறித்து கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பொதுவான அறிவுரைகள்
65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீரழிவு, அதிக உடற்பருமன், இதய நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இருக்கவும்
முறையான 2 அடுக்கு முகக்கவசம் பயன்படுத்தவும். கைகளை குறைந்தபட்சம் 40 முதல் 60 வினாடிகள் கழுவவும், உடல் நலன் இல்லை என்றால் வீட்டில் இருக்கவும்
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த வித வேதியல் பொருட்களையும் பயன்படுத்தவேண்டாம்
சந்தேகங்களை அலைபேசியில் / தொலைபேசியில் கேட்கவும். உடல் நலக்குறைவு என்றால் உடனே மருத்துவமனை செல்லவும்
வீட்டில் தனிமைப்படுத்த வேண்டி இருந்தால் அடுத்தவர்களுடன் பழகவேண்டாம்
ஏதாவது சந்தேகம் இருந்தால் 104 எண்ணிற்கு அழைக்கவும். அவசர சேவைக்கும் 108 எண்ணிற்கு அழைக்கவும்
வழக்கமாக சாப்பிடும் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடவும்
மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவவும்
வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் / பிற நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வங்கிகள் / காப்பீடு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்கள் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்கும் படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கட்டிடத்தினுள் இடம் இல்லை என்றால் வெளியில் இடம் ஏற்படுத்த வேண்டும்
கைகளை கழுவும் கிருமி நாசினி போதிய அளவில் இருக்கவேண்டும். வாடிக்கையாளர்கள் உள்ளே நுழையும் போது கைகளை கழுவ வேண்டும்
உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் கருவிகள் போதுமான அளவு இருக்கவேண்டும். 37 டிகிரி செல்சியல் அல்லது 98.6 டிகிரி பாரன்ஹைட் வெப்பத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளரை அனுமதிக்கவேண்டும்
காசோலை செலுத்தும் பெட்டியை வங்கிக்கு வெளியில் வைக்கவேண்டும். இதன் மூலம் வங்கிக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்
பணம் கையாளுபவர்கள் தங்களின் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்
தானியங்கி பணம் வழங்கியில் இருக்கும் காவலர்கள் தங்களின் கைகளை சுத்தப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் 1 மீட்டர் இடைவெளியில் நிற்பதை உறுதி செய்ய வேண்டும்
அலுவலகம் மற்றும் தானியங்கி பணம் வழங்கி இரண்டும் அடிக்கடி கிருமி நாசினி கொன்று சுத்தப்படுத்தப்படவேண்டும்
ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும்
கோவிட்19 குறித்த விபரங்களை அனைவரும் படிக்கும் படி வைக்கவும் வங்கியின் உள்ளேயும் வெளியேயும் வைக்கவும்
காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ரோந்து பணியில் இருக்கும் போது உங்களை நோய் தொற்றில் இருந்து காத்துக்கொள்ளவும்
பிறரிடம் இருந்து 1-1.5 மீட்டர் அல்லது 6 அடி தூரம் கடைபிடிக்கவும்
காய்ச்சல், இருமல், மூச்சு விட சிரமம் போன்றவை கோவிட்19 நோயின் அறிகுறிகள் என்று அறிந்து கொண்டு இவை இருந்தால் உடனே சிகிச்சை எடுக்கவும். நோய் தொற்று எற்பட்டதில் இருந்து 2 முதல் 14 நாட்கள் வரை இந்த அறிகுறிகள் ஏற்படலாம்
பணி முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகு துணிகளை துவைக்கவும்.
மருத்துவமனைகள், தனிமை படுத்தல் நிலையங்கள் போன்ற இடங்களில் அல்லது அவற்றின் அருகில் பணிபுரியும் போது கையுரை, முகக்கவசம் அணியவும்
அலுவலக கோப்புகள், தாள்கள் பயன்படுத்தும் போது கையுறை பயன்படுத்தவும்
பொது போக்குவரத்து உரிமையாளர்கள் / ஓட்டுனர்கள் / நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஒவ்வொரு பயணத்தின் முடிவிலும் வாகனத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தவும்
ஓட்டுனரும் நடத்துனரும் அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணியவேண்டும். வாகனத்தினுள் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும்
கைகளை சுத்தம் செய்ய போதிய அளவு கிருமி நாசினி வாகனத்தில் இருக்க வேண்டும்
இருக்கை அமைப்புகள் குறித்த அரசின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படவேண்டும்
வாடகை சீருந்தில் முன் இருக்கையில் பயணிகளை அமர அனுமதிக்கக்கூடாது
ஒட்டுனரோ, நடத்துனரோ கதவை திறந்தாலோ, அல்லது பயணிகளின் பொருட்களை கையாண்டாலோ, அவர்கள் தங்கள் கையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்
காவல் துறையினரின் ஆணைகளை கடைபிடிக்க வேண்டும்
சந்தை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்
பயணம் முடிந்த பிறகு ஓட்டுனர்கள், நடத்துனர்கள், உதவியாளர்கள் கையை கழுவி, குளித்து, உடைகளை துவைக்க வேண்டும்
வாகனத்தில் கோவிட்19 குறித்த விபரங்களை அனைவரும் படிக்கும் படி வைக்கவும்
மளிகைக்கடை / பழக்கடை / காய்கறி கடை / மீன் கடை / மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கவும்
கடையின் உள்ளேயும், வெளியேயும் சமூக இடைவேளையை கடைபிடிக்க போதிய வசதிகளை செய்து தரவும்
தினமும் கிருமி நாசினி கொண்டு பொருட்கள் அலமாரிகள் போன்றவற்றை துடைக்கவும்
பணிபுரிபவர்கள் முக கவசம் அணிய வேண்டும்
பணிபுரிபவர்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிய வேண்டும்
முடிந்தவரை வீட்டில் பொருட்களை கொண்டு கொடுக்கவும்
கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி போதிய அளவில் இருக்கட்டும்
அரசு அலுவலகங்கள் / தனியார் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அனைத்து பணியாளர்களுக்கும் கோவிட்19 குறித்து கூறவேண்டும்
தங்கும் விடுதிகள் / உணவகங்களின் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கல்வி நிலையங்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
சமூக இடைவேளையை பயன்படுத்தவும்
கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைத்திருக்கவும்
தொடாமல் வெப்பத்தை கண்டறியும் கருவி மூலம் உள்ளே வரும் அனைவரின் வெப்ப அளவை பார்த்து காய்ச்சல் உள்ளதா என்று சோதிக்கவும்
கோவிட்19 குறித்த தகவல்களை அனைவரும் வாசிக்கும்படி வைக்கவும்
கையால் தொடக்ககூடிய அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்யவும், துடைத்து வைக்கவும், கிருமி நாசினி பயன்படுத்தவும்
முக கவசம் அணிவது கட்டாயம்
ஆசிரியர்கள் தங்கள் உடல் நலன் மேல் அதிக கவனம் கொள்ள வேண்டும்
அரசிடம் இருந்து வரும் உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்
விடுகளில் வேலை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வீட்டு வேலை செய்பவர்களுக்கு முக கவசம் அளிக்கவும். அவர்கள் வீட்டினுள் வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும்
தேவைப்பட்டால் மட்டுமே வீட்டிற்கு வெளியில் செல்ல வேண்டும்
வெளியில் சென்று வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும்
போதுமான சமூக இடைவேளையை கடைபிடிக்கவும்
உணவு பரிமாறும் போது கையுறை பயன்படுத்தவும்
அவர்களுக்கு கோவிட்19 இருக்கும் என்று சந்தேகம் இருந்தால் அவர்களை சிகிச்சை எடுக்க சொல்லவும்
குடியிருப்புகள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மின் தூக்கி பயன்பாட்டை முடிந்த அளவு தவிர்க்கவும். தவிர்க்கமுடியவில்லை என்றால் கிருமி நாசினி பயன்படுத்தவும்
தூய்மை பணியாளர்களுக்கு போதிய உபகரணங்களை அளிக்கவும்
போதுமான அளவு முக கவசம் மற்றும் கிருமி நாசினி வைத்துக்கொள்ளவும்
மின் சாதனங்களை பழுது நீக்குவது, நீர் குழாய்களை பழுது நீக்குவது ஆகிய செயல்களை முடிந்த அளவு குறைவாக செய்யவும்
விருந்தினர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்
விருந்தினர்களின் அடையாள அட்டை ஆகியவற்றை கையுறை அணிந்தே தொடும்படி காவல்காரர்களுக்கு அறிவுறுத்தவும்
குடியிருப்பில் இருப்பவர்களுக்கு கோவிட்19 இருக்கும் என்று சந்தேகம் இருந்தால் அவர்களை சிகிச்சை எடுக்க சொல்லவும்
வீட்டினுள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வீட்டின் வெளியில் எதையும் தொடவேண்டாம்
மின் தூக்கிகளை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்கவும். அப்படியே பயன்படுத்த வேண்டி வந்தாலும் முழங்கையால் பொத்தான்களை தொடவும்
படிகள், கைப்பிடிகள் ஆகியவற்றை தொடவேண்டாம். தொடவேண்டிய நிர்பந்தம் இருந்தால் சானிடைசர் வைத்து கைகளை கழுவவும்
வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது முககவசம் அணியவும்
கடைத்தெரு செல்லும் போது அதற்குரிய காலணிகளை அணியவும்
வீட்டிற்கு வெளியில் இருக்கும் போது முகம், கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடவேண்டாம்.
கடைத்தெரு செல்வதை முடிந்த அளவு குறைக்கவும்
வெளியில் இருந்து வரும் போது கதவுகளை தொடுவதை தவிர்க்கவும். வீட்டில் இருப்பவர்கள் கதவை திறந்து விடுவது நல்லது.
விருந்துக்கு செல்ல வேண்டாம். விருந்தினர்களை அழைக்கவேண்டாம். விழாக்களை தள்ளி வைக்கவும்
தானியங்கி பணம் வழங்கி சென்ற பிறகும், ரூபாய் நோட்டுக்களை கையாளும் ஒவ்வொரு முறையும் கைகளை சோப்பு போட்டு கழுவவும்
முடிந்த அளவு இணைய வழியாக கட்டணங்களை செலுத்தவும்
வீட்டிற்கு வரும் மின்சாதன பழுது நீக்குபவர், மின்நுட்ப தொழிலாளி, நீர் குழாய் சீர் செய்பவர் ஆகியோர் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறுங்கள், அணிவதை உறுதி செய்யுங்கள்
வெளியில் இருந்து வாங்கி வந்த பழங்களை, காய்கறி பொருட்களை கழுவுங்கள். பிற பொருட்கள் மீது கிருமி நாசினி பயன்படுத்துங்கள்
வெளியில் செல்லும் போது கொண்டு செல்லும் பைகளை சூரிய வெளிச்சத்தில் வைக்கவும்
வெளியில் இருந்து வந்தவுடன் கை / கால்களை கழுவும் குளிப்பது சிறந்தது
வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைக்கவும்
தரை மற்றும் சுவர்களில் கிருமி நாசினி தெளிக்கவும். 1 சதம் சோடியம் ஹைப்போக்ளோரைட் கரைசல் பயன்படுத்தலாம்
குழந்தைகள் குறித்து கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பிற குழந்தைகளுடனும், பெரியவர்களுடனும் பழகும் போது சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்
கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடக்கூடாது என்றும், அடுத்தவர்களுடன் கை குலுக்குவதோ, கட்டிப்பிடிப்பதோ கூடாது என்றும் சொல்லிக்கொடுங்கள்
விளையாட்டுப்பொருட்கள், புத்தகங்கள், வீட்டினுள் விளையாடுவது, கணினியில் விளையாடுவது, இணையவழி வகுப்புகள் என்று அவர்களை எதாவது செயலில் ஈடுபடுத்திக்கொண்டிருங்கள்
பள்ளியில் இருந்து இணையவழியில் பாடம் எடுக்கும்போது அதில் ஈடுபாடுடன் கவனிக்கச்சொல்லுங்கள்
அடிக்கடி சோப்பு வைத்து கை கழுவ சொல்லுங்கள். அதே போல் அவர்கள் பயன்படுத்தும் துண்டு போன்றவற்றை தனியாக வைத்திருக்கச்சொல்லுங்கள்
வெளியில் சென்று விளையாடுவது, அல்லது குழுவாக இருப்பது ஆகியவற்றை தற்சமயம் ஊக்குவிக்க வேண்டாம்
சுவர்கள், கைப்பிடிகள் ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும்
Once upon a time, before the era of service tax for mobiles and income tax for salaried persons, Tax on Lands were the main source of revenue for the governments
That is the reason why the department that was concerned with collection of land taxes was called Revenue Department
Different rates of taxes were laid as per the nature of the land
The British adapted the Mughal Revenue Setup and used the same terms. That is why most terms (like jamabandi) in Revenue Department are in Persian
The main work of the Revenue department was COLLECTION OF TAXES – Hence the person heading the department got the name Collector.
Have you heard the term Circle Inspector? and wondered what it means. It means that those days, there was only one inspector for the who circle ie One Inspector for the entire Tahsil. That is only around 300 inspectors for the whole of TN
Even today, the main arm of the government in civilian services is revenue department.
-oOo-
அசல் أصل மூலம்
மாஜிماضي முந்தைய
அத்து حد வரம்பு
முகாம்مقام தங்குமிடம்
அத்தர் عطر மணப்பொருள்
முலாம்ملام மேற்பூச்சு
அமுல் عمل நடைமுறை
ரத்துرد விலக்கு/நீக்கம்
அனாமத்أنعمت கேட்பாரற்ற
ரசீதுرصيد ஒப்புப் படிவம்
அல்வாحلوه இனிப்பு
ராஜிراضي உடன்பாடு
ஆஜர்حاظر வருகை
ருஜுرجوع உறுதிப்பாடு
ஆபத்துآفت துன்பம்
ருமால்رمال கைக்குட்டை
இனாம்انعام நன்கொடை
லாயக்لائق தகுதி
இலாகாعلاقة துறை
வக்கீல்وكيل வழக்குரைஞர்
கஜானாخزانة கருவூலம்
வக்காலத்துوكالة பரிந்துரை
காலிخالي வெற்றிடம்
வகையறாوغيره முதலான
காய்தாقاعدة
தலைமை/வரம்பு
வசூல்وصول திரட்டு
காஜிقاضي நீதிபதி
வாய்தாوعده தவணை
கைதிقيد சிறையாளி
வாரிசுوارث உரியவர்
சவால்سوال
அறைகூவல்/கேள்வி
சர்பத்شربة குளிர்பானம்
ஜாமீன்ضمان பிணை
சரத்துشرط நிபந்தனை
ஜில்லாضلعة மாவட்டம்
தகராறு تكرار வம்பு
தாவா دعوة வழக்கு
திவான் ديوان அமைச்சர்
பதில் بدل மறுமொழி
பாக்கி باقي நிலுவை
மஹால் محل மாளிகை
ஜமாபந்தி ஒன்றுகூடல்
ஃபிர்கா அலகு
மகசூல்محصول அறுவடை
மாமூல்معمول வழக்கம்
இது அரபு அல்லது, உருது, அல்லது பாரசீக மூலம்
இந்தியாவின் வருவாய் நிர்வாகம் செர் ஷா சூரியால் ஆரம்பிக்கப்பட்டது. பிறகு அக்பர் அதை விரிவுபடுத்தினார். ஔரங்கசீப் ஒழுங்குபடுத்தினார்
ஆங்கிலேயர்கள் வந்த போது, அதை அப்படியே எடுத்துக்கொண்டார்கள். Don’t reinvent the wheel என்பதன் அடிப்படையில் அதை அவர்கல்
அதில் சில சிறப்பம்சங்கள் பின்னாட்களில் வந்தன. உதாரணமாக நம்மிடம் (இதுவரை) Title Deed கிடையாது. நீங்கள் ஒரு நிலம் வாங்கினால், அது தொடர்பாக மூன்று இடங்களில் பதிவுகள் இருக்கும்
பதிவு துறை – இது பத்திரம்
வருவாய் துறை – இது பட்டா
அளவை துறை – சர்வே எண்
காரணம்
ஷெர் ஷாவின் வருவாய் துறையும்
சார்லஸ் ப்ரிடேலின் பதிவுத்துறையும்
டாட்டன்ஹேனின் மாவட்ட அலுவலர் கையேடும்
இதனால் தான் எளிதாக நிலத்தை திருட முடியாது.
-oOo-
ஜில்லாضلعة மாவட்டம்
ஃபிர்கா அலகு
இரண்டிற்கும் இடையில் இரு சொல் உள்ளது
அது தாசில் – வட்டம்
மற்றொரு சொல்லும் உள்ளது, தலையாரி
ஜில்லா – மாவட்டம் – கலெக்டர் – மாவட்ட ஆட்சித்தலைவர்
தாசில் – வட்டம் – தாசில்தார் – வட்டாச்சியர்
பிர்கா – குறுவட்டம் – வருவாய் ஆய்வாளர் ரெவன்யூ இண்ஸ்பெக்டர்
வருவாய் கிராமம் – கிராம நிர்வாக அலுவலர்
கிராமம் – கிராம உதவியாளர் – தலையாரி
இதில் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், வருவாய் கிராமத்திற்கும் உருது சொல் இல்லை. காரணம் முதல் பதவி ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது, அடுத்த பதவி நம்மால் மாற்றப்பட்டது உருவாக்கப்பட்டது (கிராம மணியம் தான் – கிராம நிர்வாக அலுவலர் ஆனது. இது ஒரு சுவாரசியமான தனிக்கதை)
-oOo-
ஒரு காலத்தில் மாநிலத்திற்கே ஒரு ஐஜி தான் இருந்தார்
அப்பொழுது ஒரு வட்டத்திற்கு ஒரு காவல் நிலையம் தான் இருந்தது. அவர் தான் சர்க்கிள் இண்ஸ்பெக்டர்
வட்டம் – சர்க்கிள்
நம் மக்கள் சரியாகத்தான் பெயர் வைத்துள்ளார்கள்
An Introduction to Health Department
English
Persian
Tamil
English
Tamil
32
District
ஜில்லா
மாவட்டம்
District Collector
மாவட்ட ஆட்சித்தலைவர்
PUBLIC HEALTH DEPARTMENT
District
ஜில்லா
மாவட்டம்
40
Health Unit District (HUD)
சுகாதார மாவட்டம்
Deputy Director Health Services (DDHS)
துனை இயக்குனர் சுகாதார பணிகள்
365
Block Primary Health Centre (Block PHC)
முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம்
Block Medical Officer (BMO)
Block Health Supervisor (BHS)
Community Health Nurse (CHN)
வட்டார மருத்துவ அலுவலர்
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் (வ.சு.மே)
சமுக சுகாதார செவிலியர் (ச.சு.செ)
1619 (not sure of the present value)
Additional Primary Health Centre (Additional PHC or PHC)