I quit

I have been fighting against the anti vaccine anti social brigade in Social Media for a long time

For many years, I was the lone voice in Indian Cyber Space against terrorists with perverted mind like Jaganatha Chaterjee who went on spreading lies against vaccines.

The Tamil Cyber Space was equally bad with fake information regarding Blood Donations, Transplants, Pregnancy and I was fighting those too alone as recent as (or as far as – depending on how new you are to Social Media) 2013.

I would have given up in 2013, but for the Support I got from Doctors (Karthikeyan TheRebel Sir, Sidharth Parivallal Sen Balan as well as Non Medicos like Ravishankar Ayyakannu, Ravi Senthazal, Selvakumar Ramachandran, தோழர் அரக்கன், Ponnusamy Purushothaman . Ananthakrishnan Pakshirajan, Umamaheshvaran Panneerselvam, M.m. Abdulla Annan etc)

When the Rumours are floated in FB, G+ etc, we can atleast write a comment clariying it
But
When it comes to Whatsapp, there is no place to counter it and tell the truth and it spreads very rapidly

-oOo-

As told by Osai Chella, //..A 2011 report carried out by Haifa University concluded the opposition to vaccinations is “a trend rapidly gaining traction in the past years.” //

Why this is happening is easy to understand

-oOo-

AntiVaxxers, Vaccines, MMR, Polio
AntiVaxxers, Vaccines, MMR, Polio

There are two kinds of people in the world

  • One : Wise Men Men and Women
  • Two : Fools

Even when they are under the Shade, Wise Men Men and Women knew the importance of shade and the problem with being directly under Sun . .So they will always prefer to be under the shade

But
When a Fool is in shade for too long, he/she won’t know what it is to be directly under sun and hence won’t know the importance of shade and neglect it

-oOo-

Same Way
Wise Men and Women know the importance of Vaccines even without seeing a child die due to diphtheria

But
Fools, who don’t have intelligence may not know the importance of vaccines when the disease is not widespread
Once these people see their kids becoming lame, blind, deaf or dead, they will rush to hospitals demanding vaccines

Artificial Intelligence and Natural Stupidity - Organic Eugenics
Artificial Intelligence and Natural Stupidity – Organic Eugenics

It is a matter of time
But
Till then Lots of Kids would be affected . . And Needless to say, the blood of those kids will be on the hands of every one in media and social media who has shared anti vaccine posts.

-oOo-

As Some one who has worked for three years in Primary Health Centres, As Some one who has got up at 4 AM and went alone in a TVS 50 carrying vaccines in Freezer Box to the remotest of hamlets for Pulse Polio, As a Neurosurgeon who has seen fair bit of Residual Polio and SSPE, reading the anti vaxxer’s stupidity spoils my mood

ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics)
ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics)

Hence I have decided to quit this topic in Social Media and have written two books, one in English and One in Tamil (which you see in the side)

If you are Out of India, you can buy the English Book at Amazon.com
The English Book is also available in Google Books

-oOo-

Those who want to know the need for vaccines, can read my old posts
In case of doubts, Please ask in the comments

The blood of those who die will be on the hands of everyone in media and social media who had created anti vaccine mindset the under garb of “reporting”, “inviting discussion” and “awareness”

Places in Hell are Reserved for these perverts.

-oOo-

Those who can’t realize the need of vaccines without experiencing the need yourself (sic), best of Luck.

Let your Realisation Come Soon (sic)

Posted in FB : https://www.facebook.com/photo.php?fbid=10155073201024828&set=a.497812629827.278402.722399827&type=3&permPage=1

* 04. கிராமப்புற மருத்துவக்கதைகள் – குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையும் ஆண்மைக்குறைவும் !!

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க

நான் : நீங்க ஏன் குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல
க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம் தாங்காது. (குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிக மிக சிறிய அறுவை சிகிச்சை)

நான் : அப்படில்லாம் இல்ல. அது சின்ன ஆபரேசன் தான். இங்கேயே பண்ணிக்கலாம். சாயங்காலமே விட்டிற்கு போயிரலாம்.

க.நா.2 : என் சம்சாரம் வேணாம்னு சொல்றா
நான் : சரி நீங்க பண்ணிக்கிட்டா என்ன ??
வ.வி.க : நான் கூட சார்கிட்ட கேட்கனும்னு நினைச்சேன், சார் பண்ணிக்கிட்டா இந்த சுத்துப்பட்டில எல்லாரும் பண்ணிக்குவாங்க. இப்ப நிறைய ஆம்பிளைக குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறது இல்லை.

க.நா.2 : ஆம்பிளங்க எப்படி சார் ஆப்பரேசன் பண்ண முடியும். அது பொம்பளங்க பண்ணுரது தானே
நான் : இல்ல சார். ஆம்பிளங்களும் பண்ணலாம். பொம்பளங்களும் பண்ணலாம். பொம்பளங்க உடம்பு வீக்காயிருந்தா ஆம்பளங்கதான் பண்ணனும்.

க.நா.2 : ??
நான் : நீங்க எவ்வளவு தெம்பானவரு. நீங்க பண்ணுனா தான் நல்லது. வர 20ஆம் தேதி (பல வருடங்கள் ஆகி விட்டதால் என்ன தேதி கூறினேன் என்று ஞாபகம் இல்லை) ஏரல்ல (ஏரல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்) முகாம் இருக்கு. அன்னைக்கு வந்துருங்க

க.நா.2 : சார் என் உடம்பு அதுக்கெல்லாம் சரி வருமா.
நான் : என்ன சார் நீங்க. இந்த ஏரியாவிலேயே உங்கள மாதிரி தெம்பானவங்க யாரு சரி வாங்க பாத்துரலாம்

என்று கூறியபடியே
இரத்த அழுத்தம், இதய துடிப்பு எல்லாம் பார்த்து விட்டு , அப்படியே மருந்தகம் அழைத்து சென்று உடல் எடை பார்த்து அவரை கையோடு பின்னால் ஆய்வுக்கூடம் அழைத்து சென்று இரத்த சோதனையும் பார்த்தாகி விட்டது.

நமது க.நா.2 திருட்டு முழி முழித்து கொண்டேயிருக்கிறார்.
அதன் பிறகு

வ.வி.க.: சார் 20ஆம் தேதி வந்துருங்க. காலைல 8 மணிக்கு வந்துருங்க. இங்கெருந்து சீப்புல (ஜீப்பில்) போகலாம்

க.நா.2 : சரி சார்

அதன் பிறகு க.நா.2 ஆரம்ப சுகாதார நிலையம் பக்கம் வரவேயில்லை. (அது தானே நமக்கு வேண்டும்). எந்த பிரச்சனையும் செய்யவில்லை. சில வாரங்கள் கழிந்த நிலையில் ஒரு நாள் பள்ளிசிறார் ஆய்வு திட்டத்திற்கு சென்று விட்டு வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தேன்.  ஊரின் பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள தேநீர்கடையில் (அனைத்து ஊர்களிலும் ஆலமரம் இருக்காது. பல இடங்களில் பேரூந்து நிறுத்தமும் அதன் அருகில் உள்ள தேநீர்கடையும் தான் வேலையற்ற வீணர்களின் மூளையற்ற அரட்டைக்கு ஆட்படும் இடங்கள்) ஒரு பத்து பேரிடம் தன் வீர பிரதாபங்களை கூறிக்கொண்டிருந்தார். என் நல்ல நேரம் (நம் க.நா.2 வின் கெட்ட நேரம்), என்னுடன் வட்டார விரிவாக்க கல்வியாளரும் இருந்தார்.

வாகன ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்த கூறிவிட்டு, அனைவரும் இறங்கி விட்டோம்.

நான் : சார் நல்லாயிருக்கீங்களா
க.நா.2 : நல்லாயிருக்கேன். வீட்ல கொஞ்சம் அவசர வேல இருக்கு. நாம அப்புறம் பாக்கலாம. (அது நாள் வரை இந்த கும்பலை கண்டு பொது சுகாதார துறை ஊழியர்கள் தான் ஓடுவது வழக்கம். இப்பொழுதோ எங்களை பார்த்து இவர் ஓடுகிறார்)

நான் : எங்களுக்கும் வேலை இருக்கு. அது சரி. நீங்க இந்த மாசம் ஏரல்ல குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செஞ்சுக்கிறதா சொன்னீங்கல.
க.நா.2 : ….. (கூடியிருப்பவர்கள் அவரை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்)

வ.வி.க : (கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல்) அவர் மட்டும் கிடையாது. இங்க யார் யார் வீட்ல எல்லாம் பொம்பளங்க “வீக்கா” இருக்காங்களோ அவங்க விட்ட எல்லாம் ஆம்பளங்க ஆபரேசன் பண்ணுரதா தலவர் சொன்னாருல. அதான் நாங்கலே சீப்புல கூட்டிக்கிட்டு போகலாமுன்னு நினைச்சோம். அன்னிக்கு சாங்காலமே வந்துவுட்டுருவோம்

க.நா.2 உடன் இருந்தவர்களில் ஒருவர் : ஊருல எல்லாருமா சார்.
நான் : எல்லாருமுன்னு இல்ல. ஆனா நீங்களாம் ஆஸ்பத்திரி மேல ரொம்ப அக்கர உள்ளவங்க. ஆஸ்பத்திரில இருக்கிறவங்க. நாங்க உங்களுக்கு ஏதாது பண்ணனும்ல. அதான் ஏரல்ல நடக்கிற முகாமுக்கு நாங்கே உங்கள எல்லாம் சீப்புல கூட்டிகிட்டு போகலாமுன்னு

கூடியிருந்தவர்களின் பார்வை சந்தேகத்திலிருந்து கேள்வியாகிறது.

நான் : எல்லாரும் இல்ல. இரண்டு பிள்ள பெத்தவங்களல்ல வீட்டுக்காரம்மா ஆபரேஷன் பண்ணாதவங்க மட்டும் தான்
அதே நேரம் சிலரின் முகத்தில் தெளிவு (அனேகமாக இவர்களின் மனைவி ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தவராக இருக்க வேண்டும். அல்லது அவருக்கு இரண்டிற்கு குறைவான குழந்தைகள் இருக்க வேண்டும்)
நான் : சரி சார். நாங்க கிளம்புறோம். நீங்கலாம் எப்ப வேணும்னாலும் ஆஸ்பத்திரிக்கு வாங்க. நல்ல படியா ஆபரேசன் பண்ணிடலாம்
அதன் பிறகு நான் அங்கிருந்து மாற்றலாகி வரும் வரை அந்த இரு குழுக்களையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கவில்லை.
-oOo-
இது நகைச்சுவை கதை போல் தோன்றினாலும், இதன் பின் ஒரு அறியாமை ஒளிந்து கொண்டிருக்கிறது. 
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய்விடும் என்ற தவறான எண்ணம் படித்தவர் படிக்காதவர் என்று அனைவரிடமும் பரவியுள்ளது
இது முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும்
எனவே இது குறித்து நான் ஏற்கனவே எழுதியதை மறுபடியும் தருகிறேன்.

 

  1. ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility) ஒன்றா ???
  2. இல்லை என்றால் என்ன வித்தியாசம் ??
  3. கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய் விடுமா ??

போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கம்

ஆண்மை என்று குறிக்கப்படுவது ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிவதை வைத்து. இதை ஆங்கிலத்தில் பொட்டன்சி (Potency) என்று கூறுவார்கள்

எனவே ஒருவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா இல்லையா என்பதை வைத்து, அவர்

  • ஆண்மை உள்ளவரா – பொட்டண்ட் Potent
  • ஆண்மையற்றவரா – இம்பொட்டண்ட் Impotent

என்று கூறலாம்

அதே போல் ஒருவரால் தந்தையாக முடியுமா இல்லையா என்பதை வைத்து

  • பெர்டிலிட்டி – Fertilily
  • மலட்டுத்தன்மை ஸ்டெரிலிட்டி – Sterilily

என்று பிரிக்கலாம்

இது இரண்டும் தனி தனி அம்சங்கள்

உதாரணமாக
கருப்பு, வெள்ளை என்று இரு நிறங்களையும்
பேனா, பென்சில் என்று இரு பொருட்களையும் வைத்துக்கொண்டால்

  1. கருப்பு பேனா
  2. வெள்ளை பேனா
  3. கருப்பு பென்சில்
  4. வெள்ளை பென்சில்

என்று நான்கு சாத்தியக்கூறுகள் உள்ளதை போல்

ஆண்மை, ஆண்மையின்மை, மலடு, மலடில்லை என்று பார்த்தால்

  1. ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம். Potent and Fertile
  2. ஆண்மை குறைவு, தந்தையாகலாம். Impotent and Fertile
  3. ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது. Potent, but sterile
  4. ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது. Impotent, Sterile

என்று நான்கு பிரிவுகள் வரும்

ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம்

  • இதில் தான் பெரும்பாண்மையானவர்கள் உள்ளார்கள் என்பதால் இது குறித்து பெரிதாக விளக்கம் தேவை யில்லை என்று நினைக்கிறேன்

ஆண்மை குறைவு, தந்தையாகலாம்

  • இதிலும் பலர் உள்ளனர். இந்த ஆண்மைக்குறைவு என்பது பெரிய தலைப்பு என்பதால் (வாசகர்களின் ஆதரவு இருந்தால்) சில இடுகைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
  • இந்த பகுப்பில் இருப்பவர்களாம் தாம்பத்திய உறவில் ஈட்பட முடியாமை, சிரமம் ஆகியவை இருக்கும்
  • இதற்கு தகுந்த சிகிச்சை எடுத்தால் போதும்
  • வயகரா, சிட்டு குருவி லேகியம், அல்வா !!! ஆகியவை இங்கு உதவும்
  • இதில் பெரும்பாண்மையான நோய்களுக்கு பூரண குணமடையும் சிகிச்சை உள்ளது.

ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது

  • இது தான் மிக முக்கியமான் விஷயம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்ற விபரமே நாட்டில் பலருக்கும் தெரியாது.
  • இவர்கள் தங்களிடம் குறை உள்ளது என்று தெரியாமல் இரண்டு, மூன்று என்று திருமணம் செய்து கொண்டே போவர்கள்
  • இந்த நிலைக்கு பல காரணங்கள்
  • இதில் சில நோய்களுக்கு சிகிச்சை உண்டு. சில நோயக்ளுக்கு கிடையாது
  • முக்கிய குறிப்பு : கர்ப்பத்தடை செய்து கொள்பவர்கள் இந்த வகையில் சேருவார்கள். கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை குறையாது

ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது

  • இது பல காரணங்களினால் வரும் .
  • அனைத்தும் மருத்துவ பெயர்கள் என்பதால் உங்களை குழப்ப விரும்பவில்லை

ஆண்மை, பெண்மை குறித்து நான் எழுதியவை

  • ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்…… பகுதி 1
  • ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண்
  • ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்…… பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ்

அடுத்து சில இடுகைகள் சினிமா பக்கம் சென்று விட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மீண்டும் பின்னொரு சமயம் வரலாம் என்று நினைக்கிறேன்

* 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் – நீங்க தான் சார் முன்னூதாரனம்

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க

முதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.

பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை நாம் கதாநாயகன் 2 (க.நா.2) என்று அழைப்போம்

க.நா.2 : வணக்கம் சார். நான் தான் ___________
நான் : (அவர் பெயரை சொல்லி முடிக்கவும்) வாங்க வாங்க. நானே உங்கள வந்து பாக்கனும்னு நிசச்சேன். நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு எல்லாமே நீங்க தான் சொன்னாங்க. அப்படித்தானே

க.நா.2 : (முகம் பிராகசமாகிறது) பிரெசிடென் எங்க சித்தப்பாதான். ஆனா அவரு வியாபாரத்த பாத்துக்கிறார். யூனியன் ஆபிஸ் (ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலைகள்) எல்லாம் நாந்தான் பாத்துக்கிறன்

நான் : சொன்னாங்க. நீங்க நினைச்சா இங்க நடக்காதது ஒன்னுமில்லன்னு சொன்னாங்க
க.நா.2 : நாஞ்சொன்னா யாரும் தட்டமாட்டாங்க

நான் : (அலுவலக உதவியாளரிடம்) பி.ஈ.ஈ. சார் ஆபிஸ்ல இருக்கார். அவரை கூப்பிடுங்க. அப்படியே பார்மஸில (மருந்தகம்) இருந்து இரண்டு சேர் எடுத்து போடுங்க

க.நா.2 : ????
நான் : சார் நீங்க உட்காருங்க. உங்க கிட்ட நிறய பேசனும்

அவர் வரவும். “வாங்க பி.ஈ.ஈ சார். உட்காருங்க” என்று அவரையும் அமர வைத்தாகிட்டது

பொது சுகாதார துறையில் ட்டார விரிவாக்க ல்வியாளர் என்று ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒருவர் இருப்பார். இவரை வ.வி.க என்று அழைப்போம். இந்த பதவியை ஆங்கிலத்தில் Block Extension Educator என்று அழைப்பார்கள். பல மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமர்ந்து டேரா போடும் நமது க.நா.2ஐ எப்படி கையாள்வது பல திட்டங்கள் ஆலோசிக்கப்பட்ட போது, இவர் அளித்த திட்டம் சிறந்தது என்று தோன்றவே அதை செயல்படுத்தினோம். அதைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

-oOo-

(தற்சமயம் இப்பதிவை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணி புரியும் புது மருத்துவர்களும் படிப்பதால்) கதைக்கு நடுவில் சிறு மேலாண்மை வகுப்பு

எனக்கு கீழ் பணிபுரிபவர்கள் யார் என்றாலும், அவர்கள் என்ன பதவி என்றாலும் அவர்களின் பதவியுடன் சார் / மேடம் / சிஸ்டர் (செவிலியர்களை) சேர்த்தே அழைப்பது என் வழக்கம். ”எச்.ஐ சார்”, ”சி.எச்.என் சிஸ்டர்” , ”டிரைவர் சார்” என்று தான் அழைப்பேனே தவிர பெயர் சொல்லி அல்ல. (அலுவலக ரீதியாக நான் பெயரை மட்டும் சொல்லி அழைப்பது நன்கு பழக்கமான கல்லூரியில் உடன் பயின்ற மருத்துவர்களை மட்டும் தான்)

பல அரசு / தனியார் துறைகளில் / நிறுவனங்களில் வயதில் மூத்தவர் பெரிய பதவிக்கு

  • படிப்பு காரணமாக, அல்லது
  • திறமை காரணமாக, அல்லது
  • அது அவரின் தந்தை / மாமனாரின் நிறுவனம் என்பதால் !!

வருவது நடைமுறையில் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சி தான்.

ஆனால் இதில் சிக்கலகளும் அன்றாடம் நிகழ்கிறது. இதில் பெரும்பாண்மையான சிக்கல்களுக்கு காரணம், வயதில் மூத்தவர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்காதது தான்.

  • முக்கியமாக தனக்கு கீழ் பணிபுரியும் வயதில் மூத்தவர்களை பெயர் சொல்லி கூப்பிடுவது.
  • அடுத்ததாக தான் உட்கார்ந்து கொண்டு நிற்க வைத்து பேசுவது

நான் இந்த இரு விஷயங்களையும் தவிர்த்தால் தான் இன்று வரை என் பழைய பணியிடங்களில் (3 வருடம் முன் பணிபுரிந்த இடங்கள் உட்பட) நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு (உதாரணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புது கட்டிடம் திறப்பு, அல்லது பணியாளர் வீட்டு திருமணம் / பிற விசேஷங்கள்) அழைப்பு வருகிறது என்று நினைக்கிறேன்.

அலுவலில் தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் வேலை வாங்க / ஆதிக்கம் செலுத்த Reward Power, Coercive power, legitimate power, informational power, referent power, expert power என்ற பல இருக்கின்றன. அனால் இதை எல்லாம் விட்டு விட்டு கிழ் பணிபுரிபவர்களை நிற்க வைத்து பேசுவது, மரியாதை இல்லாத தோனியில் பெயர் சொல்லி அழைப்பது, விரலை நீட்டி பேசுவது என்று தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல்பவர்களை பார்த்தால் எனக்கு சில நேரங்களில் எரிச்சல் வந்தாலும் பல நேரங்களில் (இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்களே, என்று திருந்த போகிறார்களோ என்று) பரிதாபம் தான் வரும்.

அதில் சிலர் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் இது போன்ற சேட்டைகளை (அதனால் அதில் மிகப்பெரிய நஷ்டம் காத்திருக்கிறது என்பதை அறியாமல்) எல்லாம் செய்வார்கள். அதாவது வாடிக்கையாளர் இவரை பெரிய ஆளாக நினைக்க வேண்டும் என்று. அதன் பிறகு அடுத்த முறை அந்த பணியாளர் மூலம் வாடிக்கையாளருக்கு செல்லும் செய்தியின் மதிப்பு குறைவுதான் என்பதை பலர் அறியவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பொது மக்கள் முன்னிலையில் அவர் கீழுள்ள பணியாளரை மரியாதையாக நடத்தவில்லை என்றால், அந்த பணியாளர் அடுத்த முறை களப்பணிக்கு ஊருக்குள் செல்லும் போது அவருக்கு என்ன மரியாதை கிடைக்கும். ?? அதனால் பாதிக்கப்படுவது துறைப்பணி தானே ?? கடைசியில் யார் தலையில் அது வந்து விழும் என்று ஊகிப்பது சிரமமா ??

இது அனைத்து அலுவலகங்கள் / துறைகளுக்கும் பொருந்தும்

-oOo-

நான் : சார் இவர் நம்ம ஊர் பஞ்சாயத் பிரசிடென்ட். (அவர் தலைவர் இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும்)
வ.வி.க : ஆமாம் சார். சாருக்கு நம்ம ஊருல மட்டுமல்ல. இங்க எல்லா ஊருலயும் நல்ல செல்வாக்கு
க.நா.2 : (பெருமை வழிகிறது)

நான் : நான் கூட கேள்விப்பட்டிருக்கேன். ஆஸ்பத்திரி விசயம்னா இவர்தான் முதல்ல நிப்பாருன்னு.
வ.வி.க : ஆமாம் சார். பாதி நேரம் இங்கதான் இருப்பார்.
க.நா.2 : இது முக்கியமான விசயம்ல சார். அதான் நான் இதுல அதிகம் அக்கரையாஇருக்கேன்.

நான் : அதான் நாங்களே உங்கள பாக்க வரனும்னு நினச்சோம். ஆமாம் பசங்களாம் என்ன படிக்கிறாங்க
க.நா.2 : மூத்தவன் நான்காப்பு. (நான்காவது வகுப்பு) அடுத்த பொன்னு ஒன்னாப்பு (முதல் வகுப்பு) இப்ப மூனாவதும் பொன்னுதான். 4 மாசம் ஆகுது

நான் : நீங்க ஏன் உங்க வீட்ல குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல
க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம் தாங்காது.

நான் : அப்படில்லாம் இல்ல. அது சின்ன ஆபரேசன் தான். இங்கேயே பண்ணிக்கலாம். சாயங்காலமே விட்டிற்கு போயிரலாம்.(குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிக மிக சிறிய அறுவை சிகிச்சை)
க.நா.2 : என் சம்சாரம் வேணாம்னு சொல்றா

நான் : சரி நீங்க பண்ணிக்கிட்டா என்ன ??

தொடர்ந்து வாசிக்க…

பின் குறிப்பு : தற்சமயம் இதை விட சுவாரசிமான சரித்திர தொடர்களை நர்சிம், இளையபல்லவன், ஆகியோர் எழுதி வருகிறார்கள். அதே போன்ற சுவாரசியமான ஆய்வு தொடர்களை வாசிக்க ரத்னேஷ் (பகவத் கீதை), முரளி கண்ணன் (சினிமா), வக்கில் ராஜதுரை (சட்டம்) ஆகியோரின் பதிவுகளுக்கு செல்லுங்கள்.

* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் – மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் – ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் செல்லவும்

ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது. உடன் எனக்கு பல அறிவுரைகள் “மருத்துவ விடுப்பு எடுத்து விடு”, “வேறு மாவட்டதிற்கு மாற்றல் வாங்கி விடு” என்ற பலரும் அறிவுறுத்தினார்கள்.

நானும் அந்த மாவட்டத்தில் சேர்ந்ததிலிருந்து அங்கு நடப்பதை கவனித்து வந்தேன். மேலும் கல்லூரி காலங்களில், வினாடிவினா, இசை, போன்ற பல போட்டிகளுக்கு சென்று வந்ததால் கொஞ்சம் தைரியம் அதிகம்.
சரி, என்னதான் நடக்கும், பார்த்துவிடுவோம் என்ற தைரியத்துடன் சென்று பணியேற்றுவிட்டேன்.

செல்லும் போதே அரசு பணியில் இருந்த மூத்தமருத்துவர்களில் (சீனியர்களிடம்) அவர்களின் அனுபவத்தை கேட்டு தெரிந்துகொண்டேன். அவர்கள் இது போன்ற சூழ்நிலைகளில் கடைபிடித்த நடைமுறைகளை பகிர்ந்து கொண்டனர். என்ன பிரச்சனைகள் அங்கு உள்ளன, தொல்லை தருபவர்கள் யார் போன்ற விபரங்களை விசாரித்து, அதை எல்லாம் எனக்கு முன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்த மருத்துவர்களிடம் கூறி அவர்கள் ஆலோசனையுடனே சென்றேன்.

ஆரம்ப சுகாதாரத்தில் பணியேற்று ஒரு வாரம் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் சென்று கொண்டு இருந்தது. அதன் பின் ஒரு நாள் காலையில் நம்ம கதாநாயகன் (இவரை க.நா.1 என்று அழைப்போம்) வந்தார். நான் புறநோயாளி பகுதியில் அமர்ந்து பிணியாளர்களை பரிசோதித்து கொண்டிருந்தேன். (இந்த குறிகளுக்கு உள் இருப்பது பேசப்பட்டது அல்ல)

க.நா.1 : வணக்கம் சார். நான் தான் ___________ நம்ம ஊரில் உள்ள _______ நற்பணி மன்றத்தின் செக்ரட்டரியா இருக்கேன்

நான் : வணக்கம். சொல்லுங்க

க.நா.1 : நீங்க புதுசா வந்துருக்கீங்கன்னு சொன்னாங்க. பாக்க வரனும்முன்னு நினைச்சேன். கலெக்டராபீசில வேலை. (வேற என்ன. மனு கொடுப்பது தான்) அதான் வர முடியல. நேத்து கூட கலெக்டர்ட பேசிட்டுத்தான் வரேன் (திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு நீதி நாள் நடக்கும். யார் வேண்டுமென்றாலும் மாவட்ட ஆட்சித்தலைவரை சென்று பார்க்கலாம். நேரில் மனு அளிக்கலாம். குறைந்தது 250 முதல் 300 பேர்கள் வரை அளிக்கும் மனுக்களை வாங்கி அனைவரிடமும் புன்னகைப்பது என்பது இ.ஆ.ப வேலையின் ஒரு பகுதி)

நான் : சொல்லுங்க. என்ன விஷயம். நானும் உங்களை பாக்கனும்னு நினைச்சிட்டிருந்தேன்
க.நா.1 : நம்ம பின்னாடி ஒரு 400 பசங்க இருக்காங்க. உங்களுக்கு என்ன ஹெல்பு வேணும்னாலும் கேளுங்க. கண்டிப்பா பண்ணலாம். நம்மாள முடியாததுன்னு ஒன்னுமே கிடையாது

நான் : நான் சொல்ல வந்ததும் இதுதான். இந்த ஆஸ்பத்திரி (ஆரம்ப சுகாதார நிலையங்களையும் ஆஸ்பத்திரி என்று தான் கிராமப்புறங்களில் அழைப்பது வழக்கம்) கட்டி 30 வருஷத்திற்கு மேல ஆச்சு
க.நா.1 : ம்ம்ம்

நான் : ஆனா பாருங்க ஒரு காம்பவுண்ட் கூட கிடையாது.
க.நா.1 : ஆமா சார். யாருக்குமே அக்கரை கிடையாது

நான் : அதான். நீங்க ஒரு காம்பவுண்ட் கட்டி தரலாம்ல
க.நா.1 : ……. (திருட்டு முழி முழிக்கிறார்) (வாயா வா.. இப்படி உன்னை முழிக்க வைக்கத்தானே 2 வாரம யோசித்து ஒரு திட்டத்துடன் வந்தேன்)

நான் : நீங்க வராட்டா கூட நானே உங்கள வந்து பாக்கலாமுன்னு இருந்தேன். சாயாங்காலம் சர்வேயர வரச்சொல்லி இருக்கேன். அவர் வந்து அளந்து ”பொழி” (நில அளவு குறித்த வட்டார வழக்கு) பாத்து குச்சி அடிச்சிட்டாருன்னா (நிலம் அளந்த பின், அந்த எல்லை தெரிய சிறு மரக்குச்சிகளை நிலத்தில் நட்டி வைப்பது) நீங்க வேலை ஆரம்பிச்சிரலாம்

க.நா.1 : அது சரி சார், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு நாங்க எப்படி காம்பவுண்ட் கட்ட முடியும். அது கவர்மெண்ட தானே கட்டனும். நான் வேனும்னா நம்ம கலக்டர் சார்ட பேசட்டா (வேறு ஒன்றும் இல்லை. அடுத்த திங்கள் மனு அளிப்பது தான்)

நான் : பேசுங்க. ஆனா அது பெரிய விஷயம். கலெக்டர் சார் அதை சென்னைக்கு அனுப்பி, அது பல இடங்களுக்கு போகும். உடனே வேலை நடக்காது

க.நா.1 : இல்லை . நாங்க கட்டி தந்தா அத கவர்மெண்ட ஒத்துக்காதே (புத்திசாலி என்று நினைப்பு !!!)

நான் : அதெல்லாம் இல்லை. யார் வேண்டும்னாலும், நிலம், கட்டிடம், உபகரணங்கள், வாகனங்கள் நன்கொடை தரலாம். நீங்க காம்பவுண்ட் சுவர் கட்டித்தாரீங்க அவ்வளவுதான்

க.நா.1 : சரி சார். நான் யோசித்து விட்டு சொல்றேன்

நான் : என்ன சார் யோசிக்க இருக்கு. உங்க ஊர். உங்க ஆஸ்பத்திரி. நீங்க தான் ஊரில பெரிய மனுஷன் (அப்படி போடு அருவாள) நீங்க கட்டாம யார் கட்டுவா காம்பவுண்ட. அதுவும் உங்க பின்னாடி 400 பேர் வேற இருக்காங்க

க.நா.1 : …..(மீண்டும் திருட்டு முழி)
நான் : என்ன யோசனை.
க.நா.1 : நான் நம்ம பசங்க கிட்ட கேட்டுகிட்டு சொல்றேன் சார்

நான் : சரி. கேட்டுக்கோங்க. சாயங்காலம் 4 மணிக்கு வாங்க. சர்வேயர் வரார்
க.நா.1 : இல்ல இல்ல…. அவர பெரகு வரச்சொல்லுங்க. நான் மத்தவங்கிட்ட கேட்டுகிறேன்

நான் : சரி கேட்டுக்கோங்க

அதன் பிறகு ஒரு வாரம் நிம்மதியாக கழிந்தது.

ஒரு வாரம் கழித்து நம் கதாநாயகன் வந்தார். கூடவே நாலைந்து பேர். (தனியா வந்து பேசத்தெரியாம மாட்டிய அனுபவம் போலிருக்கிறது)

க.நா.1 :சார், நம்ம பசங்க கிட்ட எல்லாம் பேசுனோம். அவங்க காம்பவுண்ட் கட்ட பணம் நிறைய ஆகுமுன்னு சொல்றாங்க

நான் :கண்டிப்பா ஆகும். ஆனா உங்களால முடியாததா. நீங்க தான் இந்த ஊர்ல பெரிய மனுசன்னு சொன்னாங்க. எப்பவும் ஆஸ்பத்திரிலேயே இருக்கீங்க. நீங்க தானே பண்ணனும், நீங்க தனியாவா பண்ணுறீங்க. இவங்கல்லாம் இருக்காங்கல தனியா பண்ணிணாதான் கஷ்டம். இவங்களும் உங்க கூட தானே இருக்காங்க (கூட வந்தவர்கள் பார்த்த பார்வையிலிருந்து அடுத்த முறை அவர்கள் துனைக்கு வரமாட்டார்கள் என்று தெரிகிறது)

க.நா.1 :அது வந்த வெள்ளாம சரியில்ல. (வயல் விளைச்சல் சரியில்லை) அதான் பணம் புரட்டுறது கொஞ்சம் கஸ்டம். நாம வேணும்முன்னா அடுத்த வருசம் பாக்கலாமே

நான் :என்னங்க நீங்க. நீங்க தானே முக்கியமான ஆளு. நீங்க பண்னாம யாரு பண்ணுவா. இப்படி சொன்னா எப்படி

இதற்குள் அவர்களுக்குள் சைகை காட்டி வெளியில் சென்று விட்டனர். நான் மேலும் சில நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு 15 நிமிடம் கழித்து மீண்டும் அறைக்குள் வந்தனர்

க.நா.1 :சார், நம்ம பசங்க என்ன சொல்றாங்கனா, காசு கொடுக்கிறது கஷ்டம். ஆனா ஆஸ்பத்திரிக்காக வேலை எவ்வளவு வேணும்மினாலும் பாக்கலாம். என்னயா, நான் சொல்றது கரெக்டா

அனைவரும் வேக வேகமாக தலையாட்டுகிறார்கள்

நான் :உங்களாக தினமும் எவ்வளவு நேரம் இங்க இருக்க முடியும்

அனைவரின் முகத்திலும் “பல்பு” எரிகிறது. பிறகு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பிரச்சனை பண்ணுவது தானே அவர்களின் முக்கிய வேலை

க.நா.1 : மத்தியானம் பூரா இங்கதான் சார் இருப்போ்ம்
நான் :சரி அப்ப நீங்க காசு தர வேண்டான். ஒரு வேள பாத்தா போதும்

க.நா.1 :சொல்லுங்க சார் என்ன வேலை
நான் : வானம் தோண்டுறது தான் (கட்டிடங்களின் அஸ்திவாரத்திற்காக நிலத்தில் குழி தோண்டுவது)

மெதுவாக திகைத்து பராக்கு பார்த்தவர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறார்கள்

க.நா.1 :??
நான் :சர்வேயர கூப்பிடு பொழி பாத்து குச்சி அடிச்சிரலாம். நீங்க எப்ப இங்க வர்றீங்களோ அப்ப கொஞ்ச கொஞ்சமா தோண்டுனா போதும்

க.நா.1 :கல், சிமெண்ட் எல்லாம்
நான் :வானம் தோண்டி அத போட்டோ எடுதது அனுப்புனா , ஸ்டெர்லைடுல அல்லாட்டி ஸ்பிக்ல கல் வாங்க காசு தருவாங்களாம். அத் வச்சு கட்டிறலாம் (ஸ்டெர்லைட், ஸ்பிக் ஆகியவை அங்குள்ள தனியார் நிறுவனங்கள்)

க.நா.1 கூட வந்தவர்களில் ஒருவர் : அப்ப நாங்க தான் தோண்டனுமா
நான் : (எலி பொறியில் மாட்டியது என்று தெரிந்தவுடன்) இத பாருங்க. நீங்க உங்க வேலய போட்டுகிட்டு ஆஸ்பத்திரிக்கு வேல பாக்க வேணாம். மத்தியாணம், வேல் இல்லாட்ட ஆடு புலி ஆடுற நேரத்துல கொஞ்சம் மம்மட்டி, கடப்பாற புடிச்சா ஒரு 3 வாரத்துல முடிச்சிரலாம். . கொஞ்ச எல்லாரும் வாங்க காட்றேன்

என்று கூறி அப்படியே சுகாதார நிலைய கட்டிடத்தின் வெளிப்புறம் அழைத்து சென்று “அங்கிருந்து இது வரை” “இதிலிருந்து அது வரை” என்று காட்டினேன்.  அந்த வளாகத்தின் மொத்த அளவு 10 ஏக்கர். அப்படி என்றால் சுற்று சுவர் கட்ட வேண்டிய நீளம் எவ்வளவு பெரிது என்று எண்ணிக்கொள்ளுங்கள். சுட்டியை சுட்டினால் உங்களுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலைத்தையும் அதன் அருகிலுள்ள பிற இடங்களையும் வானிலிருந்து உங்களுக்கு பிடித்தமான உயரத்தில் இருந்து காணலாம்

அப்படியே அவர்களை பின்னால் அழைத்து சென்று சமையல் மற்றும் நீர் தொழிலாளியிடம் சென்று (cook cum washer woman) ”இவங்களாம் நம்ம ஆஸ்பத்திரிக்கு காம்ப” என்று வார்த்தையை முடிக்கும் முன்னர்….ஒருவர் குறுக்கிட்டு “இல்லை இல்லை. வானம் தான் தோண்டுறோம்” என்று அவசரமாக கூறி்னார்

நான் :அதான் இவங்க எப்ப வந்தாலும் அந்த கடப்பாரயும் மம்மட்டியும் கொடுத்துருங்க (கடப்பாரை, மண்வெட்டி)
சமையல் மற்றும் நீர் தொழிலாளி :(அரண்டுபோய்) சரி சார்

க.நா 1 : சரி சார், எனக்கு மணியாச்சில ஒரு சோலி இருக்கு. போயிட்டு வந்துட்றேன் (நீங்கள் திருநெல்வேலி, நாகர்கோயிலுக்கு தொடர்வண்டியில் செல்லும்போது வருமே அதே வாஞ்சி மணியாச்சிதான்)
நான் : சரிங்க. எப்ப வேணும்னாலும் வாங்க. என்ன பாக்க வேண்டாம். நீங்களே வேலைய ஆரம்பிக்கலாம்

அதன் பிறகு அந்த கூட்டத்தை நெடுநாள் கழித்தே பார்த்தேன் என்றும் அதுவும் அவர்களுக்கு எதாவது உடல் நலக்குறைவு என்றால் மட்டுமே வந்தனர் என்றும் சொல்லவும் வேண்டுமா.

ஆரம்ப சுகாதார நிலையமும் எந்த பிரச்சனையும் இல்லாம்ல் சென்று கொண்டிருந்தது. இப்படியாக ஒரு கும்பலை விரட்டிய செய்தி மெதுவாக பரவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

இதற்கும் நண்பர்களுடன் கூடி பேசி (அடுத்த கும்பலை பற்றிய விபரங்களை சேகரித்து) அவர்களுக்கு ஏற்ற மேலும் சில திட்டங்களை த்யாரித்து வைத்திருந்தோம்

முதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.

பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை நாம் கதாநாயகன் 2 (க.நா.2) என்று அழைப்போம்

தொடர்ந்து வாசிக்க…

* 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் – ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும்

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

கப்பலோட்டிய தமிழனின் வட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த மருத்துவரும் நிம்மதியாக பணிபுரிய முடியாது.

காரணம் ஊரில் இரு குழுக்கள். இரு குழுவிலும் வேலை வெட்டியில்லாத சுமார் 10 நபர்கள். இவர்களின் வேலை என்னவென்றால் ஒரு மருத்துவர் அங்கு வேலைக்கு சேர்ந்த உடன், ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே வந்து பழகுவுது போல் பழகுவது. அதன் பின் அங்கேயே உட்கார்ந்து கொண்டு “அவருக்கு ஊசி போடுங்கள்”, “நம்ம அண்ணனுக்கு க்ளுகோஸ் ஏற்றுங்கள்” என்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் செட்டிலாகி விடுவது. மதியம் அங்குள்ள பணியாளர் விடுதியில் ஆடுபுலிஆட்டம் ஆடுவது (ஏனோ சீட்டு, ரம்மி அந்த குழுவில் அவ்வளவு பிரபலம் இல்லை) என்று கச்சேரியை ஆரம்பித்து விடுவார்கள்

அதன் பின் அடுத்த கோஷ்டி ஆரம்ப சுகாதார நிலையம் பற்றியும் மருத்துவ அலுவலர் பற்றியும் புகார் மேல் புகார் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். சுகாதார பணிகள் துனை இயக்குனரில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் வரை அனுப்பபடும் புகார்களின் நகல்கள், சுகாதார செயலர், சுகாதார அமைச்சர், தலைமைச்செயலர், முதலமைச்சர், குடியரசுத்தலைவர் வரை செல்லும். (அவருக்கு தமிழ் புரியும். அனுப்புடா !!) அப்பொது அப்துல் கலாம் குடியரசுத்தலைவர்.. ஒரு தமிழர் குடியரசுத்தலைவரானால் என்னென்ன புகார் மனு எல்லாம் பெற வேண்டியுள்ளது பாருங்கள்.

உடன் அந்த மருத்துவர் மீது விசாரணை வைக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பெறும்பாலும் மருத்துவ இளங்கலை (MBBS) படித்து முடித்த உடன் பணியில் சேர்ந்திருப்பவர்கள். புகாரை பார்த்தவுடன் வீட்டில் புலம்பி அடுத்த நிலையத்திற்கு மாற்றலாகி சென்று விடுவார்கள். அந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 1500 இடங்கள் காலியாக இருந்தன. (இன்று 100 இடங்கள் கூட காலியில்லை) மருத்துவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யாமல் அங்கிருந்து ஓடுவதற்கு முக்கிய காரணம் அங்குள்ள நிர்வாக பணி, கடைநிலைய ஊழியர்களின் பிரச்சனை, மற்றும் இது போல் சில இடங்களில் ஊரில் உள்ள வெட்டிபயல்கள் கிளப்பும் பிரச்சனைதான்.



அந்த மருத்துவர் மாற்றலாகி சென்ற உடன் அடுத்த மருத்துவர் வருவார். அவர் முதல் குழு மேல் எச்சரிக்கையுடன் வருவதால் அந்த குழுவை தள்ளி வைப்பார். இது தான் நேரம் என்று அடுத்த குழு உள்ளே புகுந்து விடும். பிறகென்ன, ”பழைய குருடி கதவை திறடி” கதைதான். இந்த குழு அதே போல் இம்சை அளிக்கும். இந்த முறை முதல் குழு புகார் அளிக்கும். (இந்த புகாரும் குடியரசு தலைவர் மாளிகை வரை செல்லும்) அந்த மருத்துவரும் ஓடி விடுவார்.

அது சரி, மருத்துவர் ஏன் இப்படி வெட்டி பயல்களுடன் பேச வேண்டும். மருத்துவமனையில் அமர்ந்து வருபவர்களை சோதித்து ஊசி, மாத்திரை எழுதினால் போதாதா என்ற கேள்வி உங்களுக்கு வருவது நியாயம் தான்.
அரசு மருத்துவமனைகள் (மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை), போன்ற மருத்துவமனைகளுக்கு இரு பணிகள் தான் – புறநோயாளி சிகிச்சை, உள்நோயாளி சிகிச்சை (இதில் அறுவை சிகிச்சை அடக்கம்). மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வேலை பார்ப்பவர்கள் கூடுதல் பணியாக மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டும். மற்றும் நீதிமன்றப்பணி, முகாம்கள், சிறப்பு பணிகள் என்று இருந்தாலும் அவை எல்லாம் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் பணிகள் தான்

ஆனால் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணிகள் பல. அதில் உள்ள பிற பணிகளுடன் ஒப்பிடுகையில் புறநோயாளி சிகிச்சை என்பது முக்கியத்துவம் குறைந்த பணிதான். (அதாவது பிற பணிகள் மிக மிக முக்கியம் என்ற அர்த்தத்தில்) குடும்ப நலம், தடுப்பூசி, சுகாதாரம், காச நோய் தடுப்பு, தொழுநோய் தடுப்பு, ஏய்ட்ஸ் தடுப்பு, பல்ஸ் போலியோ, பள்ளி சிறார் நலம், ஆய்வுப்பணி, திருவிழா நேரங்களில் தொற்று நோய் பரவாமல் தடுப்பது என்று பல பணிகள் உண்டு – இதை செய்வதற்கு பல பயிற்சிகள் தேவை. இதனால் தான், எந்த பயிற்சியும் பெறாத மருத்துவர்களை வெறும் நான்கு மாதம் வரை 8000 ஊதியத்தில் நியமிக்கும் திட்டத்தை கிராமங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் உட்பட அனைவரும் கடுமையாக எதிர்த்தார்கள்.

எனவே இப்படி பலதரப்பட்ட பணிகளுக்காக ஊர் மக்களுடன் நெருங்கி பணிபுரிய வேண்டும். களத்தில் மருத்துவர் இல்லையென்றால் (புறநோயாளிகளுக்கு ஊசி போடுவதை தவிர) ஒரு வேலையும் நடக்காது. ஆனால் அப்படி மருத்துவர் ஊர் மக்களுடன் பழகுவது கவனமாக செய்ய வேண்டும். அவர் ஒரு சாரார் உடன் பழகுகிறார் என்று அடுத்த சாரார் நினைத்தால் பிரச்சனை தான்.

அதுவும் ஏற்கனவே குழுமனப்பாண்மையால் இரண்டு பட்டிருக்கும் ஊரில் இது போல் பிரச்சனை எளிதில் பெரிதாகி விடும். உதாரணமாக காச நோய்க்கு மருந்து சாப்பிடும் நோயாளி மருந்து ஒழுங்காக சாப்பிடுகிறாரா என்று சோதிக்க மருத்துவர் கள ஆய்வு சென்றால் அங்குள்ள ஏதேனும் இரண்டு நோயாளிகளை பார்த்தால் போதும் என்று காச நோய்திட்ட குறிப்புகள்/ வழிமுறைகள் சொன்னாலும், ஒரே குழுவை சேர்ந்த இரு நோயாளிகளை பார்த்து விட்டு அடுத்த குழுவை சேர்ந்தவர்களை பார்க்காவிட்டால் பிரச்சனைதான். மருத்துவரை ஒரு குழுவிற்கு ஆதரவளிப்பவராக கருதி அடுத்த குழு அவரை தொந்தரவு படுத்த ஆரம்பிக்கும்.

சரி ஒவ்வொரு குழுவில் ஒருவரை பார்த்து விட்டு வரலாம் என்றால், முதல் வீட்டின் ‘கலர்’ குடித்திருந்தால், அடுத்த வீட்டிலும் கண்டிப்பாக குடிக்க வேண்டும். ஏற்கனவே சாப்பிட்டுவிட்டேன் என்று நாகரிகமாக மறுத்தால் பிரச்சனை 🙂 🙂

இப்படியாக எப்படியோ ஒரு மருத்துவர் ஒரு குழுவிற்கு நெருக்கமானவர் என்று பெயர் வந்து விட்டால் (இப்படி பெயர் வருவது என்பது அவர்களின் திட்டமிட்ட செயலாக இருக்காது – இதில் பெரிய கொடுமை என்னவென்றால் பல இடங்களில் இரண்டு குழுவுமே ஒரே ஜாதியாகத்தான் இருக்கும் – பல மருத்துவர்களுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியாது) அதன் பிறகு தலைவலி தான்.

சில இடங்களில் இந்த பிரச்சனை குறைவு. நான் சொன்ன ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்த பிரச்சனை அதிகம்.இப்படி தொடர்ந்து மருத்துவர்கள் தொல்லைக்கு உள்ளாவதால், அங்கு யாரும் பணி புரிவதில்லை. தமிழகத்தில் கடந்த வருடங்களில் சுமார் 4000 மருத்துவர் பணியிடங்கள் வரை காலியாக இருந்ததால், (ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே 1500 காலியிடங்கள் இருந்தன) மாற்றல் பெறுவது சிரமமே இல்லை. (இன்று – 18/10/2008 நிலவரப்படி – ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 100 காலியிடங்களும், அரசு மருத்துவமனைகளில் சுமார் 30 காலியிடங்களும், மருத்துவக்கல்லூரிகளில் சுமார் 2000 காலியிடங்களும் உள்ளன. அதில் அடுத்த மாதம் 200 + 100 காலியிடங்கள் அரசு தேர்வாணைய காத்திருப்பு பட்டியலிலிருந்து நிரப்பப்பட உள்ளன.)

எனவே 3 மருத்துவர் பணி புரிய வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருவருமே கிடையாது. அந்த மாவட்டத்தின் பிற சுகாதார நிலையங்களிலிருந்து மாற்றுப்பணி மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு் பணி நடந்து கொண்டிருந்தது.மாற்றுப்பணி மருத்துவர்களும் இப்படி இரண்டு குழுவில் ஏதோ ஒரு குழுவை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நுழைய விட்டு விட்டால் (அடுத்த குழுவால்) தலைவலி ஆரம்பித்து விடும்.
இப்படி யான ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது

தொடர்ந்து வாசிக்க…