Various Types of Diets Given Free of Cost to Patients in Government Hospitals in Tamil Nadu

What are the various diets that are given to Patients free of Cost in Tamil Nadu Government Hospitals ? This article explains about them

Various Types of Diets Given Free of Cost to Patients in Government Hospitals in Tamil Nadu
Various Types of Diets Given Free of Cost to Patients in Government Hospitals in Tamil Nadu
STD : Standard Diet
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Morning 90
2 Par boiled rice Lunch 125
3 Raw Rice 75
4 rava 75
5 Wheat Flour 75
6 Toor dhal Morning 25
7 Toor dhal Lunch 25
8 Black gram dhal Morning 30
9 Black gram dhal Seasoning 1
10 Greengram dhal Morning 25
11 Greengram dhal Night 10
12 Sundal 30
13 Salt 15
14 Tamarind 7
15 red chillies 5
16 Curry powder 7
17 Cumin seeds 1
18 Pepper 1
19 Mustard 1
20 Fenugreek Seasoning 0.5
21 Fenugreek seeds Morning 0.75
22 Asafoetida 0.1
23 Turmeric 1
24 Garlic 1
25 Groundnut Oil 20
26 Milk Morning 250
27 Curd ml 200
28 Fruit nos 1
29 Vegetable Lunch 100
30 Potato Lunch 100
31 Vegetable Night 100
32 Greens 100
33 Onion 50
34 Tomato 50
35 Carrot 25
36 Beans 25
37 Ginger pongal 1
38 Ginger kitchedi 1
39 Curry & corriander leaves 2
40 Green chillies 2



PPD : Post Partum Diet : After Delivery
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Morning 90
2 Par boiled rice Lunch 125
3 Raw Rice 75
4 rava 75
5 Wheat Flour 75
6 Toor dhal Morning 25
7 Toor dhal Lunch 25
8 Black gram dhal Morning 30
9 Black gram dhal Seasoning 1
10 Greengram dhal Morning 25
11 Greengram dhal Night 10
12 Sundal 30
13 Salt 15
14 Tamarind 7
15 red chillies 5
16 Curry powder 5
17 Cumin seeds 1
18 Pepper 1
19 Mustard 1
20 Fenugreek Seasoning 0.5
21 Fenugreek seeds Morning 0.75
22 Asafoetida 0.1
23 Turmeric 1
24 Garlic 1
25 Groundnut Oil 20
26 Jaggary 25
27 Milk Morning 250
28 Milk Evening 250
29 Curd ml 200
30 Potato Lunch 100
31 Egg nos 1
32 Fruit nos 1
33 Vegetable/Potato Lunch 100
34 Vegetable Night 100
35 Greens 200
36 Onion 60
37 Tomato 60
38 Carrot 25
39 Beans 25
40 Ginger pongal 1
41 Ginger kitchedi 1
42 Curry & corriander leaves 2
43 Green chillies 2

 



NCD : Non Communicable Disease Diet
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Morning 90
2 Par boiled rice Lunch 75
3 Wheat/Samba Rava Morning 75
4 Wheat/Samba Rava Night 75
5 Wheat Flour Lunch 75
6 wheat flour Night 75
7 Toor dhal Morning 25
8 Black gram dhal Morning 30
9 Black gram dhal Seasoning 1
10 Roasted bengal gram 30
11 Sundal 30
12 Salt 5
13 Tamarind 7
14 red chillies 5
15 Curry powder 7
16 Garam masala powder
17 Cumin seeds 2
18 Pepper 2
19 Mustard 1
20 Fenugreek Seasoning 0.5
21 Fenugreek seeds Morning 0.75
22 Asafoetida 0.1
23 Turmeric 1
24 Garlic 1
25 Groundnut Oil 15
26 Milk Morning 150
27 Milk Evening 100
28 Curd ml 200
29 Egg nos 2
30 Potato Lunch 100
31 Vegetable Soup 50
32 Vegetable Lunch 100
33 Vegetable Night 150
34 Greens 200
35 Onion 75
36 Tomato 75
37 Cucumber 100
38 Ginger – kitchedi 1
39 Curry & corriander leaves 2
40 Green chillies 2



New case : For Patients who are admitted recently
S.No Ingredient Sub-clause Quantity
1 Bread 200
2 Milk 200

 

HPD : High Protein Diet
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Morning 90
2 Par boiled rice Lunch 150
3 Raw Rice 75
4 rava 100
5 Wheat Flour 100
6 Toor dhal Morning 25
7 Toor dhal Lunch 25
8 Black gram dhal Morning 30
9 Black gram dhal Seasoning 1
10 Greengram dhal Morning 25
11 Greengram dhal Night 10
12 Roasted bengal gram 50
13 Sundal 50
14 Salt 15
15 Tamarind 7
16 red chillies 5
17 Curry powder 7
18 Cumin seeds 1
19 Pepper 1
20 Mustard 1
21 Fenugreek Seasoning 0.5
22 Fenugreek seeds Morning 0.75
23 Asafoetida 0.1
24 Turmeric 1
25 Garlic 1
26 Goundnut Oil 20
27 Jaggary 10
28 Nutrimix Kanji powder 15
29 Milk Morning 250
30 Milk Evening 250
31 Curd ml 200
32 Egg nos 2
33 Fruit nos 1
34 Vegetable Lunch 100
35 Vegetable Night 100
36 Greens 100
37 Onion 50
38 Tomato 50
39 Carrot 25
40 Beans 25
41 Coconut 20
42 Ginger – pongal 1
43 Ginger – kitchedi 1
44 Curry & corriander leaves 2
45 Green chillies 2
46 Lime 0.25

 

HIV :
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Morning 90
2 Par boiled rice Lunch 150
3 Raw Rice 75
4 rava 100
5 Wheat Flour 100
6 Sago 25
7 Processed soya flour 15
8 Toor dhal Morning 25
9 Toor dhal Lunch 25
10 Black gram dhal Morning 30
11 Black gram dhal Seasoning 1
12 Greengram dhal Morning 25
13 Greengram dhal Night 10
14 Roasted bengal gram 50
15 Sundal 50
16 Salt 15
17 Tamarind 7
18 red chillies 5
19 Curry powder 7
20 Cumin seeds 1
21 Pepper 1
22 Mustard 1
23 Fenugreek Seasoning 0.5
24 Fenugreek seeds Morning 0.75
25 Asafoetida 0.1
26 Turmeric 1
27 Garlic 1
28 Goundnut Oil 20
29 Jaggary 10
30 Nutrimix Kanji powder 15
31 Milk Morning 250
32 Curd ml 200
33 Egg nos 2
34 Fruit nos 1
35 Vegetable Lunch 100
36 Vegetable Night 100
37 Greens 100
38 Onion 50
39 Tomato 50
40 Carrot 250
41 Beans 25
42 Ginger – pongal 1
43 Ginger – kitchedi 1
44 Curry & corriander leaves 2
45 Green chillies 2
46 Lime 0.25

 

RENAL
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Night 60
2 Par boiled rice Lunch 75
3 Rice Rava 75
4 Vermicelli 75
5 Sago 30
6 Sago – evening 30
7 Sweet Biscuit 3
8 Black gram dhal 20
9 Fenugreek – Seasoning 0.5
10 Goundnut Oil 15
11 Sugar 25
12 Sugar – night 25
13 Curd ml 200
14 Egg nos 1
15 Bread Morning 100
16 Bread evening 50
17 Renal Vegetable Lunch 200
18 Renal Vegetable Night 200
19 Mint 15
20 Onion 25
21 Cucumber 200
22 Guava 100

 

 

RENAL DIABETIC
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Night 60
2 Par boiled rice Lunch 75
3 Rice Rava 75
4 Vermicelli 75
5 Sago 30
6 Sago – evening 30
7 Biscuit 3
8 Black gram dhal 20
9 Fenugreek – Seasoning 0.5
10 Goundnut Oil 15
11 Curd ml 200
12 Egg nos 1
13 Bread Morning 100
14 Bread evening 50
15 Renal Vegetable Lunch 200
16 Renal Vegetable Night 200
17 Mint 15
18 Onion chutney 100
19 Onion 25
20 Cucumber 200
21 Guava 100

 

 

AC SPL : For those with Ryles Tube Feeding
S.No Ingredient Sub-clause Quantity
1 Rice flour 70
2 Sago flour 30
3 Green gram dhal 40
4 Salt 3
5 Goundnut Oil 20
6 Sugar 50
7 Milk 500
8 Curd ml 200
9 Egg nos 2
10 Oranges/Sweet lime 4
11 Vegetable Soup 50
12 Greens 50
13 Enteral supplement 50

 

 

AC SPL RENAL : For those with Ryles Tube Feeding
S.No Ingredient Sub-clause Quantity
1 Rice flour 70
2 Sago flour 60
3 Salt 1
4 Goundnut Oil 20
5 Sugar 50
6 Milk 500
7 Curd ml 200
8 Egg nos 2
9 Vegetable Soup 50
10 Enteral supplement 50

 

 

AC SPL BURNS : For those with Ryles Tube Feeding
S.No Ingredient Sub-clause Quantity
1 Rice flour 70
2 Sago flour 30
3 Green gram dhal 40
4 Salt 3
5 Goundnut Oil 20
6 Sugar 75
7 Milk 750
8 Egg nos 3
9 Vegetable Soup 100
10 Greens 100
11 Enteral supplement 100
12 Oranges/Sweet lime 4

 

RCD : Radiotheraphy Chemotherapy Diet
S.No Ingredient Sub-clause Quantity
1 Sago/Rice flour 50
2 Sugar 40
3 Milk – Morning 250
4 Milk – Evening 250
5 Curd ml 200
6 Egg nos 2
7 Oranges/Sweet lime 8

 

RCD DIABETIC : Radiotherapy Chemotherapy
S.No Ingredient Sub-clause Quantity
1 Sago/Rice flour 50
2 Milk – Morning 250
3 Milk – Evening 250
4 Curd ml 200
5 Egg nos 2
6 Oranges/Sweet lime 8

 

M&B : Milk and Bread
S.No Ingredient Sub-clause Quantity
1 Milk – Morning 500
2 Milk – Evening 250
3 Curd ml 0
4 Egg nos 1
5 Fruit nos 2
6 Bread 400

 

INF : 0 to 6 months
S.No Ingredient Sub-clause Quantity
1 Greengram dhal 10
2 Salt 2
3 Coconut oil 25
4 Jaggary 20
5 Nutrimix Kanji powder 12.5
6 Milk morning 250
7 Milk evening 250
8 Egg nos 1
9 Plantain 1
10 Potato 50

 

 

INF – SPL : 6 to 12 months
S.No Ingredient Sub-clause Quantity
1 Rice flour 25
2 Sago flour 20
3 Roasted bengal gram flour 25
4 Coconut oil 25
5 Curd ml 200

 

 

C-STD 1-8yrs
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Morning 30
2 Par boiled rice lunch 50
3 Par boiled rice Night 60
4 Raw Rice Night 75
5 Toor dhal Morning 12.5
6 Toor dhal Lunch 12.5
7 Black gram dhal Morning 10
8 Black gram dhal Night 20
9 Black gram dhal Seasoning 1
10 Greengram dhal Night 25
11 Salt 6
12 Tamarind 5
13 red chillies 5
14 Curry powder 5
15 Garam masala powder 0.5
16 Cumin seeds 1
17 Pepper 1
18 Mustard 1
19 Fenugreek seeds Seasoning 0.5
20 Fenugreek seeds Morning 0.25
21 Fenugreek seeds Night 0.5
22 Asafoetida 0.1
23 Diet Scale 1
24 Garlic 0.5
25 Goundnut Oil 15
26 Jaggary 8
27 Nutrimix Kanji powder 5
28 Milk 250
29 Curd ml 100
30 Egg nos 1
31 Fruit nos 1
32 Vegetable/Potato lunch 100
33 Potato lunch 100
34 Vegetable Night 50
35 Greens 100
36 Onion 25
37 Tomato 25
38 Coconut 20
39 Ginger – pongal 1
40 Curry and corriander leaves 2

 

 

C-STD 8-12yrs
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Morning 60
2 Par boiled rice lunch 75
3 Par boiled rice Night 90
4 Raw Rice Night 100
5 Toor dhal Morning 12.5
6 Toor dhal Lunch 25
7 Black gram dhal Morning 20
8 Black gram dhal Night 30
9 Black gram dhal Seasoning 1
10 Greengram dhal Night 30
11 Salt 6
12 Tamarind 5
13 red chillies 5
14 Curry powder 5
15 Garam masala powder 0.5
16 Cumin seeds 1
17 Pepper 1
18 Mustard 1
19 Fenugreek seeds Seasoning 0.5
20 Fenugreek seeds Morning 0.5
21 Fenugreek seeds Night 0.75
22 Asafoetida 0.1
23 Turmeric 1
24 Garlic 0.5
25 Goundnut Oil 15
26 Jaggary 10
27 Nutrimix Kanji powder 6
28 Milk 250
29 Curd ml 100
30 Egg nos 1
31 Fruit nos 1
32 Vegetable lunch 100
33 Potato lunch 100
34 Vegetable Night 50
35 Greens 100
36 Onion 30
37 Tomato 30
38 Coconut 20
39 Ginger – pongal 1
40 Curry and corriander leaves 2

 

C-HIV-STD 1-8yrs
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Morning 30
2 Par boiled rice lunch 50
3 Par boiled rice Night 60
4 Raw Rice Night 75
5 Sago 20
6 Toor dhal Morning 12.5
7 Toor dhal Lunch 12.5
8 Black gram dhal Morning 10
9 Black gram dhal Night 20
10 Black gram dhal Seasoning 1
11 Greengram dhal Night 25
12 Salt 6
13 Tamarind 5
14 red chillies 5
15 Curry powder 5
16 Garam masala powder 0.5
17 Cumin seeds 1
18 Pepper 1
19 Mustard 1
20 Fenugreek seeds Seasoning 0.5
21 Fenugreek seeds Morning 0.25
22 Fenugreek seeds Night 0.5
23 Asafoetida 0.1
24 Turmeric 1
25 Garlic 0.5
26 Goundnut Oil 15
27 Jaggary 12
28 Nutrimix/Ragi Kanji powder 7.5
29 Milk 250
30 Curd ml 100
31 Egg nos 2
32 Fruit nos 2
33 Vegetable lunch 100
34 Potato lunch 100
35 Vegetable Night 50
36 Greens 100
37 Onion 25
38 Tomato 25
39 Coconut 20
40 Ginger – pongal 1
41 Curry and corriander leaves 2



C-HIV-STD 8-12yrs
S.No Ingredient Sub-clause Quantity
1 Par boiled rice Morning 60
2 Par boiled rice lunch 75
3 Par boiled rice Night 90
4 Raw Rice Night 100
5 Sago 20
6 Toor dhal Morning 12.5
7 Toor dhal Lunch 25
8 Black gram dhal Morning 20
9 Black gram dhal Night 30
10 Black gram dhal Seasoning 1
11 Greengram dhal Night 30
12 Salt 6
13 Tamarind 5
14 red chillies 5
15 Curry powder 5
16 Garam masala powder 0.5
17 Cumin seeds 1
18 Pepper 1
19 Mustard 1
20 Fenugreek seeds Seasoning 0.5
21 Fenugreek seeds Morning 0.5
22 Fenugreek seeds Night 0.75
23 Asafoetida 0.1
24 Turmeric 1
25 Garlic 0.5
26 Goundnut Oil 15
27 Jaggary 12
28 Nutrimix/Ragi Kanji powder 7.5
29 Milk 250
30 Curd ml 100
31 Egg nos 2
32 Fruit nos 2
33 Vegetable lunch 100
34 Potato lunch 100
35 Vegetable Night 50
36 Greens 100
37 Onion 30
38 Tomato 30
39 Coconut 20
40 Ginger – pongal 1
41 Curry and corriander leaves 2




 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Anti Rabies Vaccine for Dog Bite. Availability in Primary Health Centre and Medical College

Some Times Truth is Stranger than Fiction
So
Let me share a real fact.

-oOo-

I joined Tamil Nadu Medical Services in 2004 and worked for three years in Primary Health Centres. In Primary Health Centres, Run by Department of Health, Government of Tamil Nadu, we used to give ARV (Anti Rabies Vaccine) any time the patient walks in.

And then
I came to Madras Medical College, a tertiary care institution and was shocked to find that Vaccines are given only from 8 AM to 11 AM and that too only on Working Days. . . I could not comprehend the rationale. I am sure that Dogs in areas round the medical college hospital do not follow Calendar and Watch when biting on unsuspecting individuals

-oOo-



So, you have two hospitals run by the Same Government, Same Ministry, Same Minister, Same Health Secretary

  1. A 24x7x365 Tertiary Care Hospital, with nearly 1000 doctors working and around 5000 beds, where Vaccines for dog bite are given only 3 hours for 6 days a week
  2. A Primary Health Centre, with just two doctors, where vaccines for dog bite are given any time the patient walks in

Logic says that you will expect better service in a Tertiary Care Hospital
But
In Reality, Primary Health Centres Provide Better Service

So, the administrative fact that is really fiction is that Tertiary Health Care gives better service 🙂

I did try to analyse why this happened and found the reason too

It was because

Anti Rabies Vaccine Multi Dose Vial
Anti Rabies Vaccine Multi Dose Vial

Earlier, Vaccines came in Multi Dose Vial. That is in a single bottle (or ampoule) there were many doses. So, they took the bottle out of the fridge and wanted to finish it off quickly. So they made people come within a narrow time window
But
Now, vaccines come in single dose vial. Only one dose in a bottle (or ampoule). So they can open the vial, give the injection and need not worry about keep it safe again

Anti Rabies Vaccines started in Medical Colleges a long time ago, So they followed the narrow time window. They did not think to change it when multi dose vials got replaced by single dose vials. They did not apply their mind. They did not take the new scientific advancement to their advantage. It is like a person who started using bicycle, continuing in bicycle even after two wheelers were invented

Anti Rabies Vaccine Single Dose Vial
Anti Rabies Vaccine Single Dose Vial

But
Primary Health Centres, where they recently started Anti Rabies Vaccines and at that time, they had single dose vials. So they did not have any time window

This also underlies lessons in Management :

  1. All Protocols need to be reviewed at regular intervals and see whether a new and better protocol be introduced taking into account a recent invention or scientific advancement
  2. Smaller institutions may have better protocols. So learning should be two way and the bigger institutions need not always push their ideas



பிடிக்காத துக்க செய்தியை மனிதர்கள் எதிர்கொள்ளும் ஏழு நிலைகள் – The Kübler-Ross Grief Cycle

சுவிட்சர்லாந்து நாட்டு மனநல மருத்துவரான எலிஸ்பத் கூபர்-ராஸ் (எலிசபத்து கூபரு ராசு) துக்க நிகழ்வை ஒருவர் எதிர்கொள்ளும் முறையை விளக்கியுள்ளார். முதலில் புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இந்த நிலைகள் மருத்துவர் எலிசபத் ராசினால் கூறப்பட்டாலும், எந்த வித துக்க நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும் என்று சில காலங்களிலேயே கண்டறியப்பட்டது.

எலிசபத் ராஸ் முதலில் கூறியது ஐந்து நிலைகள் தான். (மறுப்பு, கோபம், பேரம், மனச்சோர்வு, ஏற்றுக்கொள்ளுதல்). சோதித்தல் என்பது பின்னர் சேர்க்கப்பட்டது. அதே போல் அதிர்ச்சி என்ற நிலையும் பின்னர் சேர்க்கப்பட்டது தான்

ஆக, ஒரு துக்க நிகழ்வை எதிர்க்கொள்ளும் மனித மனம் கீழ்க்கண்ட எழு நிலைகளை கடந்து வருகிறது

  1. அதிர்ச்சி
  2. மறுப்பு
  3. கோபம்
  4. பேரம்
  5. மனச்சோர்வு
  6. சோதித்து பார்த்தல்
  7. ஏற்றுக்கொள்ளுதல்




இதை சில உதாரணங்களுடன் பார்ப்போம்

உதாரணம் 1 : தேர்வில் தேர்ச்சியடையாத மாணவனின் மனநிலை

(பின்குறிப்பு : ஒரு 3 மணி நேரத்தில் 15 கேள்விகளுக்கு அளிக்கப்படும் விடையை வைத்து “தோல்வி” என்ற அடைமொழியை பயன்படுத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது)
தேர்வு முடிவு வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். நண்பர்களுடன் அரட்டை, கிரிக்கெட், தொலைகாட்சி, என்ற அவனது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்

The Kübler-Ross Grief Cycle in Tamil (படம் உதவி : குசும்பன் )
The Kübler-Ross Grief Cycle in Tamil (படம் உதவி : குசும்பன் )

இப்பொழுது தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

  1. அதிர்ச்சி : முடிவை பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் அவன் அதிர்ச்சி அடைகிறான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு.
  2. மறுப்பு : “இல்லை. நான் கட்டாயம் தேர்ச்சி பெற்று இருப்பேன்”. “இதில் ஏதோ தவறு”. “இந்த நாளிதழ் தவறாக அச்சிட்டுள்ளது. அடுத்த நாளிதழை வாங்கி பார்ப்போம்”
  3. கோபம் : அனைவர் மேலும் கோபம். விடைத்தாளை திருத்தியவர் மேல் கோபம். அதிகம் 10 நிமிடம் தராத தேர்வரங்க ஆசிரியர் மேல் கோபம். கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
  4. பேரம் : எத்தனை தாள்களில் தேர்வாக வில்லை. ஒரே ஒரு தாள் தானா, பல தாள்களா
  5. மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”
  6. சோதித்தல் : மதிப்பெண் பட்டியலை சென்று பார்த்தல்
  7. ஏற்றுக்கொள்ளுதல் : அடுத்த தேர்விற்கு தயாராகுதல்



உதாரணம் 2 : தொழிற்சாலையில் விபத்து என்று கேள்விப்படும் தொழிலதிபர்

விபத்து என்று செய்தி வரும் வரை, அவனது இயல்பான நடவடிக்கைகள் இருந்து கொண்டிருக்கும். அலுவலகம் செல்வது, தொழிற்சாலை செல்வது, கூட்டங்கள், கேளிக்கை, கிளப்புக்கு சென்று சீட்டு விளையாடுவது என்ற அவரது இயல்பு வாழ்க்கையை நாம் “நிலையான நிலை” என்று அழைப்போம்

Kubler Ross Grief Cycle 7 Stages
Kubler Ross Grief Cycle 7 Stages

இப்பொழுது தொழிற்சாலையில் விபத்து என்றவுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

  1. அதிர்ச்சி : செய்தியை கேட்டவுடன் முதலில் நடப்பது அதிர்ச்சி தான். தலையை ஆட்டி சம்மதம் என்றாலும் உள்ளுக்குள் அந்த செய்தியின் தாக்கம் செல்ல சிறிது நேரம் ஆகிறது. சிலருக்கு நாக்கு உலர்ந்து விடும். தொண்டை அடைப்பது போன்ற நிகழ்வுகள் நடப்பதும் உண்டு. நெஞ்சு வலி வரலாம். முச்சடைக்கலாம். ஏற்கனவே இதய நோயாளி என்றால் மாரடைப்பு கூட வரலாம்.
  2. மறுப்பு : “இல்லை, என் தொழிற்சாலையில் இருக்காது. அங்கு விபத்து நடப்பதற்கு வழியே இல்லையே. வேறு ஏதாவது இடத்தில் இருக்கலாம்”
  3. கோபம் : கத்துவது, எதையாவது தூக்கி எறிவது, அடுத்தவர்களிடம் எரிந்து விழுவது என்று சம்பந்தப்பட்ட நபர் அதிகம் “செயல்படுவதால்” இது “செயல்படும் நிலை”
  4. பேரம் : “எவ்வளவு சேதம்”, “அதில் எவ்வளவு விபத்து காப்பீடு உள்ளது”, “கொஞ்சமாவது தேறுமா”
  5. மனச்சோர்வு : அறைக்குள் அடைந்து கிடப்பது. ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பது. யாரிடமும் பேசாமல் இருப்பது என்று வழக்கமான அளவை விட குறைந்த அளவே வேலை செய்வதால் “செயல்படா நிலை”
  6. சோதித்தல் : “விபத்து எப்படி நடந்தது” “யார் தவறு” “இனி இப்படி நடக்காமல் தடுப்பது எப்படி”
  7. ஏற்றுக்கொள்ளுதல் : “எப்படியும் அந்த டிவிசனை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என்று நினைத்தேன்” “இனி செய்துவிட வேண்டியது தான்”

மூன்றாவது உதாரணம் எழுதவில்லை. நீங்களே பொருத்தி பாருங்கள்.

  • பொருந்தி வருவது தெளிவாக தெரிந்தால் நீங்கள் மூன்றாவது நிலையை தாண்டி நான்காவது, ஐந்தாவது, ஆறாவது அல்லது ஏழாவது நிலையில் உள்ளீர்கள்
  • கோபப்பட்டால் மூன்றாவது நிலை
  • அந்த உதாரணம் பொருந்தாது என்று கூறினால் இரண்டாவது நிலை
  • முதல் நிலையில் இருப்பவர் இந்த இடுகையை வாசிக்கும் வாய்ப்பு குறைவு



வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ? : வலிப்பு நோயா ? : பாகம் 3

வலிப்பு நோயா ? : பாகம் 3 : வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ?
++++++++++++++++++++++++++++++++

வீட்டில்
********

1. மாத்திரைகளை தொடர்ந்து ஒழுங்காக சாப்பிட வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகளை மாற்றுவதோ, அல்லது குறைப்பதோ கூடாது. போதுமான அளவு மாத்திரைகளை கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். மாத்திரை தீரும் வரை காத்திருக்காமல், 4 நாட்களுக்கு முன்னரே வாங்கிவிட வேண்டும்.

2. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்றவை இருந்தால், அந்த நோய்களுக்கான சிகிச்சையை முறையாக எடுக்க வேண்டும். சிறிது கூட தாமதிக்கக்கூடாது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றிற்கு சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தால், உணவுக்கட்டுப்பாடு தேவை. தங்களின் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், குடும்ப மருத்துவர் ஆகியோரின் ஆலோசனைகளை கடைபிடிக்கவும்

3. வேறு எந்த நோயும் இல்லாதவர்கள் கூட அதிக அளவு சர்க்கரை, மாவுச்சத்து ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்

4. ஒரு சிறு காகிதத்தில் தங்களின் பெயர், வலிப்பு நோயின் சரியான பெயர், எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண், குடும்ப மருத்துவரின் பெயர் மற்றும் எண் ஆகியவற்றை எழுதி (அல்லது தட்டச்சு செய்து) அதை ஒரு கண்ணாடிஉறைக்குள் (அல்லது லேமினேட் செய்து) சட்டைப்பையில் வைத்துக்கொள்ளவும்

வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ?
வலிப்பு நோய் உள்ளவர்கள் கடைபிடிக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை ?

5. தினமும் குளிக்கவும். தலைக்கு குளிக்கலாம்.
ஷவரில் குளிக்கலாம். அல்லது வாளியில் நீர் பிடித்து குளிக்கலாம்
குளியல் தொட்டியில் குளிப்பதை தவிர்க்க வேண்டும்.
குளியலறை/ கழிப்பறை கதவினை சாத்தவும், ஆனால் உள்ளிருந்து தாழ்ப்பாள் போடக்கூடாது.

6. குளியலறைக்குள் (அல்லது நீருக்கு அருகில்) மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம். வலிப்பு ஏற்பட்டால் இவை நீருக்குள் விழுந்தால் மின் அதிர்ச்சி ஏற்பட (ஷாக் அடிக்க) வாய்ப்பு உள்ளது

7. அறைக்குள் தனியாக இருக்கும் போது உட்புறம் தாழ்ப்பாள் போடக்கூடாது. இரு பக்கமும் திறக்கும் பூட்டுகளையே வீட்டில் பயன்படுத்தவும்

8. கண் கண்ணாடி அணிபவராக இருந்தால் உங்கள் லென்ஸ்களை உடையாத லென்ஸ்களாக மாற்றுங்கள்

9. வீட்டினுள் முடிந்த அளவு கண்ணாடிகளை தவிர்த்து விட்டு, ப்ளாஸ்டிக் போன்ற உடையாத பொருட்களை பயன்படுத்த வேண்டும்
உதாரனமாக : கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தக்கூடாது. வலிப்பின் போது இவை உடைந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

10. சமையல் செய்யும் போது, பாத்திரங்களில் கைப்பிடி, சுவற்றை நோக்கி இருக்கும்படி வைத்துக்கொள்ளவும். ஒருவேலை வலிப்பு ஏற்பட்டால் கூட, உங்கள் கை அந்த கைப்பிடியில் பட்டு, கொதிக்கும் குழம்பு உங்கள் மேல் விழும் வாய்ப்பை அளிக்கக்கூடாது




அலுவலகத்தில்
*****************

11. உங்கள் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகள் ஆகியோருக்கு இதை தெரியப்படுத்துங்கள். 4ஆம் கருத்தில் கூறிய காகிதத்தின் ஒரு நகலை அவர்களுக்கு அளிப்பது சிறந்தது

12. கூர்மையான கருவிகள் பயன்படுத்தக்கூடாது

வெளியில் செல்லும் போது
*****************************

13. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது

14. ஏரி, குளம், கிணறு, அருவி ஆகியவற்றினுள் தனியாக செல்லக்கூடாது. நீச்சல் தெரிந்த நபர்கள் அருகில் இருந்தால் மட்டுமே நீர் நிலைகளுக்குள் செல்ல வேண்டும்



பொதுவாக
************

15. ஒரு நாட்குறிப்பேட்டில் (அல்லது கூகிள் காலெண்டரில்) வலிப்பு ஏற்படும் தேதி, நேரம் ஆகியவற்றை குறித்து வைத்துக்கொள்ளவும்

16. ஒழுங்கான தூக்கம் வேண்டும். முறையான நேரத்தில் தூங்க செல்வது நலம்.

17. வலிப்பு அறிகுறியை தோற்றுவிக்கும் காரணிகளை முடிந்தவரை தவிர்க்கவேண்டும். சிலருக்கு தூங்காவிட்டால் வலிப்பு வரும். அவர்கள் முறையாக தூங்க வேண்டும். சிலருக்கு விளக்கும் பளிச்சிட்டால் வலிப்பு வரும். அவர்கள் அது போல் பளிச்சிடும் விளக்குகளை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

18. வலிப்பு ஏற்பட்டாலோ அல்லது தலைவலி, பார்வை இரண்டாக தெரிவது, வாந்தி ஆகியவை ஏற்பட்டாலோ உடனடியாக 108 அழைத்து மருத்துவமனைக்கு வரவும்

-oOo-

இந்த கட்டுரை பலருக்கும் பயன்பட இதை உங்கள் பக்கத்தில் மற்றும் குழுக்களில் பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் சந்தேகங்களை மறுமொழியில் கேளுங்கள்

-oOo-

முதுகுவலி, எடை குறைப்பு, தலைவலி, கைகால்வலிப்பு (காக்காவலிப்பு) குறித்த தகவல்களை தொடர்ந்து வாசிக்க, இந்த பக்கத்தை விரும்பவும் (லைக் செய்யவும்)



ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ? : வலிப்பு நோயா ? : பாகம் 2

வலிப்பு நோயா ? : பாகம் 2
*****************************
ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ? கை கால் வலிப்பு (காக்காவலிப்பு) ஏற்பட்டால் மட்டும் தான் அது வலிப்பு நோயா ?

-oOo-

வலிப்பு நோய் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்கு முன்னர்,
1. நோய் (Disease) அல்லது பிணி
2. நோய்குறி (Symptom / Sign)
3. நோய்குழு (Group of Diseases)
4. நோய்வீச்சு (Spectrum of Symptoms of a Disease)

ஆகிய பதங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்

-oOo-



நோய் என்றால் என்ன ? மனித உடல் தனது இயல்பான செயல்பாட்டினை இழப்பதே நோய் அல்லது பிணி ஆகும்

இப்படி இயல்பான செயல்பாட்டினை இழக்கும் போது உடலில் பல மாற்றங்கள் தோன்றுகின்றன. இவையே நோய்குறி

ஒரு நோய்க்கு பல நோய்க்குறிகள் இருக்கும்.
அதே போல் ஒரு நோய்க்குறி பல நோய்களுக்கு இருக்கும்

நோய்வீச்சு (Spectrum of Symptoms of a Disease) என்றால் என்ன ? ஒரு நோயில் சில நோய்குறிகள் பிரதானமாக இருக்கும். ஆனால் அது தவிர பல நோய்குறிகளும் இருக்கும். இவை அனைத்து சேர்ந்தது ஒரு நோய்வீச்சு

அப்படி என்றால் நோய்குழு (Group of diseases) என்றால் என்ன ?
ஒரு நோய்குறி உள்ள பல நோய்கள் நோய்குழு என்று அழைக்கப்படுகின்றன

-oOo-

உதாரணமாக

ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ?
ஒரு முறை வலிப்பு வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ?

மலேரியா (Malaria) என்பது நோய் (Disease)
இதன் முக்கிய நோய்குறி (Sign) காய்ச்சல் (Fever)
மலேரியா நோய் வீச்சு (Spectrum of Malaria) என்றா; காய்ச்சல் தவிர இரத்தத்தில் அணுக்கள் உடைவது, ஈரல், மண்ணீரல் பெரிதாவது என்று பலவும் இருக்கும்
காய்ச்சல் நோய்குழுவில் (Fever Group of Diseases) காய்ச்சல் பிரதானமாக உள்ள பிற நோய்களும் இருக்கும். உதாரணமாக – டைப்பாயிடு

-oOo-

கைகால் வலிப்பு (fits) என்பது ஒரு நோய் (disease) அல்ல.
அது ஒரு நோய்க்குறி (sign). மூளைக்குள் மின் இணைப்புகள் அல்லது வேதிபொருட்களில் ஏற்பட்ட பிரச்சனையினால் கைகால் தசைகள் முறையாக சுருங்கி விரியாமல் தாறுமாறாக சுருங்கி விரியும். இதுவே கை கால் வலிப்பு எனப்படுகிறது

இந்த கை கால் வலிப்பு ஏற்படக்காரணமான பிரச்சனை ஒன்று இருக்கும் அல்லவா. அது தான் நோய் (disease)

பல நோய்களில் கைகால் வலிப்பு அறிகுறி வரலாம் அல்லவா, அவை எல்லாம் சேர்ந்து தான் வலிப்பு நோய் (Epilepsy)

Epilepsy is a group of neurological diseases characterized by epileptic seizures. அதாவது வலிப்பு அறிகுறி ஏற்படும் அனைத்து நோய்களும் சேர்ந்த நோய்குழுதான் வலிப்பு நோய்கள்

-oOo-



இதில் முக்கியமான விஷயம்

வலிப்பு அறிகுறி என்பது வேறு (அது நோய்குறி) Fits or Seizures is a Sign
வலிப்பு நோய் என்பது வேறு (அது நோய்)
வலிப்பு நோய்கள் என்பது வேறு (அது நோய்க்குழு) Epilepsy is a disease group

வலிப்பு அறிகுறி என்பது பல காரணங்களினால் ஏற்படலாம்.
அந்த காரணங்களில் சில காரணங்கள் வலிப்பு நோய்கள்
Fits can occur due to various reasons. Epilepsy is one of them

வலிப்பு நோயில் பல நோய்குறிகள் அல்லது பாதிப்புகள் ஏற்படலாம்.
அந்த பல பாதிப்புகள் அல்லது நோய்குறிகளில் ஒன்று வலிப்பு அறிகுறி
Epilepsy can have various signs and Symptoms. Fits is one of them

அதே போல்

வலிப்பு அறிகுறி ஏற்படாத வலிப்பு நோய்களும் உள்ளன
Many diseases in epilepsy may not present with Fits

வலிப்பு நோய்கள் தவிர பல நோய்களிலும் வலிப்பு அறிகுறி ஏற்படலாம்
Fits can occur is conditions other than epilepsy

-oOo-



இதை திரும்ப திரும்ப கூறுவதன் நோக்கம் என்னவென்றால்

நமது மக்களில் பெரும்பாண்மையானவர்களுக்கு

நோய்க்கும்
நோய்குறிக்கும் வித்தியாசம் தெரியாது

எந்த காரணத்தினால் வலிப்பு அறிகுறி ஏற்பட்டாலும் அவை அனைத்தும் ஒரே மருந்தினால் சரியாகிவிடும் என்ற தவறான எண்ணம் பலருக்கும் உள்ளது

-oOo-

இப்பொழுது நாம் முதலில் பார்த்த மூன்றூ கேள்விகளுக்கும் விடை காணலாம்

1
ஒரு முறை வலிப்பு அறிகுறி வந்தால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா ?

இல்லை !
அப்படி அவசியம் இல்லை

வலிப்பு அறிகுறி எந்த காரணத்தினால், எந்த நோயினால் வந்தது என்பதை கண்டு பிடித்து அது வலிப்பு நோயினால் வந்ததா, அல்லது பிற காரணங்களினால் வந்ததா என்று பார்க்க வேண்டும்

பிற காரணங்களினால் வந்தது என்றால்
அதாவது
வேறு நோய்களினால் வந்தது என்றால்
அந்த நோய்க்குரிய சிகிச்சை எடுத்தாலே போதும். வலிப்பு அறிகுறி அதன் பிறகு வராது

2
கை கால் வலிப்பு (காக்காவலிப்பு) ஏற்பட்டால் மட்டும் தான் அது வலிப்பு நோயா ?
இல்லை !
கை கால் வலிப்பு ஏற்படாமல் கூட வலிப்பு நோயின் பிற பாதிப்புகள் இருக்கலாம்

-oOo-

வலிப்பு நோயின் பிற நோய்குறிகள் யாவை ?

தொடர்ந்து பார்ப்போம்

கால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது ? வலிப்பு நோயா ? : பாகம் 1

வலிப்பு நோயா ? : பாகம் 1
*****************************
கால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் இந்த கட்டுரை விளக்குகிறது.

++++++++++++++++++++++

இந்த கட்டுரையை நீங்கள் வாசிக்கிறீர்கள்; உங்கள் திரையில் எழுத்துக்களும் படங்களும் தெரிகின்றன என்றால் என்ன அர்த்தம் –> உங்கள் அலைபேசி (அல்லது மடிக்கணினி அல்லது மேசைக்கணினி) ஒழுங்காக வேலை செய்கிறது என்று அர்த்தம்

ஒருவேளை

கால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் இந்த கட்டுரை விளக்குகிறது.
கால் கை வலிப்பு (காக்காவலிப்பு) எப்படி ஏற்படுகிறது என்பதை ஒரு உதாரணத்துடன் இந்த கட்டுரை விளக்குகிறது.

உங்கள் அலைபேசி (அல்லது மடிக்கணினி அல்லது மேசைக்கணினி) ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்
ஒன்று கணினியின் மையச் செயற்பகுதியில் (CPU) ஏதோ பிரச்சனை அல்லது மையச்செயற்பகுதியில் இருந்து வரும் கம்பியில் கோளாறு அல்லது மின் இணைப்புகலில் தகராறு அல்லது திரையில் பிழை இருந்தால் என்ன நடக்கும்
எழுத்துக்களும் படங்களும் தெளிவில்லாமல் இருக்கும் . . .
சிறு பிழை என்றால் சிறிது தெளிவில்லாமல் இருக்கும். அதேநேரம்
பிரச்சனை, கோளாறு, தகராறு, பிழை அதிகம் இருந்தால், திரையில் தெரிவதை வைத்து ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாது

-oOo-



கணினியில் விசைப்பலகை, எலி போன்ற கருவிகளின் மூலம் செய்தி உள்ளே செல்கிறது

அதே போல் நமது உடம்பில் புலன்களின் மூலம் (கண், காது, மூக்கு, நாக்கு, தோல்) செய்தி உள்ளே செல்கிறது

கணினியின் மையச் செயற்பகுதியில் இந்த செய்திகள் உள்வாங்கப்பட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது
அதே போல் நமது மூளையில் இந்த செய்திகள் உள்வாங்கப்பட்டு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது
கணினியில் இருந்து வரும் கட்டளைகள் திரையில் தெரிகின்றன, அல்லது அச்சுபொறியின் மூலம் அச்சடிக்கப்படுகின்றன
மூளையில் இருந்து வரும் கட்டளைகள் மூலம் தசைகள் இயக்கப்படுகின்றன, அல்லது பிற செயல்கள் நடக்கின்றன

-oOo-

அலைபேசி அல்லது கணினி ஒழுங்காக வேலை செய்தால் திரையில் படம் முறையாக தெரியும்

மூளை ஒழுங்காக வேலை செய்தால் கை கால் தசைகள் செய்ய வேண்டிய வேலைக்கு ஏற்றாற்போல் சுருங்கி விரியும்

-oOo-

அலைபேசி அல்லது கணினியின் மின்னினைப்புகளில் பிரச்சனை என்றால் திரையில் படம் முறையற்று தெரியும்

மூளையின் மின் இணைப்புகளில் அல்லது வேதிபொருட்களில் பிரச்சனை என்றால் கைகால் தசைகள் முறையாக சுருங்கி விரியாமல் தாறுமாறாக சுருங்கி விரியும். இதுவே கை கால் வலிப்பு எனப்படுகிறது
கால் கை வலிப்பு என்பது மருவி, காக்காய் வலிப்பு என்று மாறி விட்டது

-oOo-

மூளையின் மின் இணைப்புகளில் ஏன் பிரச்சனை வருகிறது ?
மூளையின் வேதிபொருட்களில் ஏன் பிரச்சனை வருகிறது ?
இந்த பிரச்சனைகளால் கை கால் வலிப்பு தவிர வேறு என்ன பாதிப்புகள் ஏற்படலாம் ?
இவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் ?
தொடர்ந்து பார்க்கலாம்

-oOo-



இந்த கட்டுரை பலருக்கும் பயன்பட இதை உங்கள் பக்கத்தில் மற்றும் குழுக்களில் பகிரும் படி கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் சந்தேகங்களை மறுமொழியில் கேளுங்கள்

I quit

I have been fighting against the anti vaccine anti social brigade in Social Media for a long time

For many years, I was the lone voice in Indian Cyber Space against terrorists with perverted mind like Jaganatha Chaterjee who went on spreading lies against vaccines.

The Tamil Cyber Space was equally bad with fake information regarding Blood Donations, Transplants, Pregnancy and I was fighting those too alone as recent as (or as far as – depending on how new you are to Social Media) 2013.

I would have given up in 2013, but for the Support I got from Doctors (Karthikeyan TheRebel Sir, Sidharth Parivallal Sen Balan as well as Non Medicos like Ravishankar Ayyakannu, Ravi Senthazal, Selvakumar Ramachandran, தோழர் அரக்கன், Ponnusamy Purushothaman . Ananthakrishnan Pakshirajan, Umamaheshvaran Panneerselvam, M.m. Abdulla Annan etc)

When the Rumours are floated in FB, G+ etc, we can atleast write a comment clariying it
But
When it comes to Whatsapp, there is no place to counter it and tell the truth and it spreads very rapidly

-oOo-

As told by Osai Chella, //..A 2011 report carried out by Haifa University concluded the opposition to vaccinations is “a trend rapidly gaining traction in the past years.” //

Why this is happening is easy to understand

-oOo-

AntiVaxxers, Vaccines, MMR, Polio
AntiVaxxers, Vaccines, MMR, Polio

There are two kinds of people in the world

  • One : Wise Men Men and Women
  • Two : Fools

Even when they are under the Shade, Wise Men Men and Women knew the importance of shade and the problem with being directly under Sun . .So they will always prefer to be under the shade

But
When a Fool is in shade for too long, he/she won’t know what it is to be directly under sun and hence won’t know the importance of shade and neglect it

-oOo-

Same Way
Wise Men and Women know the importance of Vaccines even without seeing a child die due to diphtheria

But
Fools, who don’t have intelligence may not know the importance of vaccines when the disease is not widespread
Once these people see their kids becoming lame, blind, deaf or dead, they will rush to hospitals demanding vaccines

Artificial Intelligence and Natural Stupidity - Organic Eugenics
Artificial Intelligence and Natural Stupidity – Organic Eugenics

It is a matter of time
But
Till then Lots of Kids would be affected . . And Needless to say, the blood of those kids will be on the hands of every one in media and social media who has shared anti vaccine posts.

-oOo-

As Some one who has worked for three years in Primary Health Centres, As Some one who has got up at 4 AM and went alone in a TVS 50 carrying vaccines in Freezer Box to the remotest of hamlets for Pulse Polio, As a Neurosurgeon who has seen fair bit of Residual Polio and SSPE, reading the anti vaxxer’s stupidity spoils my mood

ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics)
ஆர்கானிக் யூஜெனிக்ஸ்: செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (Artificial Intelligence and Natural Stupidity : Organic Eugenics)

Hence I have decided to quit this topic in Social Media and have written two books, one in English and One in Tamil (which you see in the side)

If you are Out of India, you can buy the English Book at Amazon.com
The English Book is also available in Google Books

-oOo-

Those who want to know the need for vaccines, can read my old posts
In case of doubts, Please ask in the comments

The blood of those who die will be on the hands of everyone in media and social media who had created anti vaccine mindset the under garb of “reporting”, “inviting discussion” and “awareness”

Places in Hell are Reserved for these perverts.

-oOo-

Those who can’t realize the need of vaccines without experiencing the need yourself (sic), best of Luck.

Let your Realisation Come Soon (sic)

Posted in FB : https://www.facebook.com/photo.php?fbid=10155073201024828&set=a.497812629827.278402.722399827&type=3&permPage=1

* 04. கிராமப்புற மருத்துவக்கதைகள் – குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையும் ஆண்மைக்குறைவும் !!

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க

நான் : நீங்க ஏன் குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல
க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம் தாங்காது. (குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிக மிக சிறிய அறுவை சிகிச்சை)

நான் : அப்படில்லாம் இல்ல. அது சின்ன ஆபரேசன் தான். இங்கேயே பண்ணிக்கலாம். சாயங்காலமே விட்டிற்கு போயிரலாம்.

க.நா.2 : என் சம்சாரம் வேணாம்னு சொல்றா
நான் : சரி நீங்க பண்ணிக்கிட்டா என்ன ??
வ.வி.க : நான் கூட சார்கிட்ட கேட்கனும்னு நினைச்சேன், சார் பண்ணிக்கிட்டா இந்த சுத்துப்பட்டில எல்லாரும் பண்ணிக்குவாங்க. இப்ப நிறைய ஆம்பிளைக குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறது இல்லை.

க.நா.2 : ஆம்பிளங்க எப்படி சார் ஆப்பரேசன் பண்ண முடியும். அது பொம்பளங்க பண்ணுரது தானே
நான் : இல்ல சார். ஆம்பிளங்களும் பண்ணலாம். பொம்பளங்களும் பண்ணலாம். பொம்பளங்க உடம்பு வீக்காயிருந்தா ஆம்பளங்கதான் பண்ணனும்.

க.நா.2 : ??
நான் : நீங்க எவ்வளவு தெம்பானவரு. நீங்க பண்ணுனா தான் நல்லது. வர 20ஆம் தேதி (பல வருடங்கள் ஆகி விட்டதால் என்ன தேதி கூறினேன் என்று ஞாபகம் இல்லை) ஏரல்ல (ஏரல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர்) முகாம் இருக்கு. அன்னைக்கு வந்துருங்க

க.நா.2 : சார் என் உடம்பு அதுக்கெல்லாம் சரி வருமா.
நான் : என்ன சார் நீங்க. இந்த ஏரியாவிலேயே உங்கள மாதிரி தெம்பானவங்க யாரு சரி வாங்க பாத்துரலாம்

என்று கூறியபடியே
இரத்த அழுத்தம், இதய துடிப்பு எல்லாம் பார்த்து விட்டு , அப்படியே மருந்தகம் அழைத்து சென்று உடல் எடை பார்த்து அவரை கையோடு பின்னால் ஆய்வுக்கூடம் அழைத்து சென்று இரத்த சோதனையும் பார்த்தாகி விட்டது.

நமது க.நா.2 திருட்டு முழி முழித்து கொண்டேயிருக்கிறார்.
அதன் பிறகு

வ.வி.க.: சார் 20ஆம் தேதி வந்துருங்க. காலைல 8 மணிக்கு வந்துருங்க. இங்கெருந்து சீப்புல (ஜீப்பில்) போகலாம்

க.நா.2 : சரி சார்

அதன் பிறகு க.நா.2 ஆரம்ப சுகாதார நிலையம் பக்கம் வரவேயில்லை. (அது தானே நமக்கு வேண்டும்). எந்த பிரச்சனையும் செய்யவில்லை. சில வாரங்கள் கழிந்த நிலையில் ஒரு நாள் பள்ளிசிறார் ஆய்வு திட்டத்திற்கு சென்று விட்டு வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தேன்.  ஊரின் பேரூந்து நிறுத்தம் அருகில் உள்ள தேநீர்கடையில் (அனைத்து ஊர்களிலும் ஆலமரம் இருக்காது. பல இடங்களில் பேரூந்து நிறுத்தமும் அதன் அருகில் உள்ள தேநீர்கடையும் தான் வேலையற்ற வீணர்களின் மூளையற்ற அரட்டைக்கு ஆட்படும் இடங்கள்) ஒரு பத்து பேரிடம் தன் வீர பிரதாபங்களை கூறிக்கொண்டிருந்தார். என் நல்ல நேரம் (நம் க.நா.2 வின் கெட்ட நேரம்), என்னுடன் வட்டார விரிவாக்க கல்வியாளரும் இருந்தார்.

வாகன ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்த கூறிவிட்டு, அனைவரும் இறங்கி விட்டோம்.

நான் : சார் நல்லாயிருக்கீங்களா
க.நா.2 : நல்லாயிருக்கேன். வீட்ல கொஞ்சம் அவசர வேல இருக்கு. நாம அப்புறம் பாக்கலாம. (அது நாள் வரை இந்த கும்பலை கண்டு பொது சுகாதார துறை ஊழியர்கள் தான் ஓடுவது வழக்கம். இப்பொழுதோ எங்களை பார்த்து இவர் ஓடுகிறார்)

நான் : எங்களுக்கும் வேலை இருக்கு. அது சரி. நீங்க இந்த மாசம் ஏரல்ல குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செஞ்சுக்கிறதா சொன்னீங்கல.
க.நா.2 : ….. (கூடியிருப்பவர்கள் அவரை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்)

வ.வி.க : (கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல்) அவர் மட்டும் கிடையாது. இங்க யார் யார் வீட்ல எல்லாம் பொம்பளங்க “வீக்கா” இருக்காங்களோ அவங்க விட்ட எல்லாம் ஆம்பளங்க ஆபரேசன் பண்ணுரதா தலவர் சொன்னாருல. அதான் நாங்கலே சீப்புல கூட்டிக்கிட்டு போகலாமுன்னு நினைச்சோம். அன்னிக்கு சாங்காலமே வந்துவுட்டுருவோம்

க.நா.2 உடன் இருந்தவர்களில் ஒருவர் : ஊருல எல்லாருமா சார்.
நான் : எல்லாருமுன்னு இல்ல. ஆனா நீங்களாம் ஆஸ்பத்திரி மேல ரொம்ப அக்கர உள்ளவங்க. ஆஸ்பத்திரில இருக்கிறவங்க. நாங்க உங்களுக்கு ஏதாது பண்ணனும்ல. அதான் ஏரல்ல நடக்கிற முகாமுக்கு நாங்கே உங்கள எல்லாம் சீப்புல கூட்டிகிட்டு போகலாமுன்னு

கூடியிருந்தவர்களின் பார்வை சந்தேகத்திலிருந்து கேள்வியாகிறது.

நான் : எல்லாரும் இல்ல. இரண்டு பிள்ள பெத்தவங்களல்ல வீட்டுக்காரம்மா ஆபரேஷன் பண்ணாதவங்க மட்டும் தான்
அதே நேரம் சிலரின் முகத்தில் தெளிவு (அனேகமாக இவர்களின் மனைவி ஏற்கனவே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தவராக இருக்க வேண்டும். அல்லது அவருக்கு இரண்டிற்கு குறைவான குழந்தைகள் இருக்க வேண்டும்)
நான் : சரி சார். நாங்க கிளம்புறோம். நீங்கலாம் எப்ப வேணும்னாலும் ஆஸ்பத்திரிக்கு வாங்க. நல்ல படியா ஆபரேசன் பண்ணிடலாம்
அதன் பிறகு நான் அங்கிருந்து மாற்றலாகி வரும் வரை அந்த இரு குழுக்களையும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்க்கவில்லை.
-oOo-
இது நகைச்சுவை கதை போல் தோன்றினாலும், இதன் பின் ஒரு அறியாமை ஒளிந்து கொண்டிருக்கிறது. 
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய்விடும் என்ற தவறான எண்ணம் படித்தவர் படிக்காதவர் என்று அனைவரிடமும் பரவியுள்ளது
இது முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும்
எனவே இது குறித்து நான் ஏற்கனவே எழுதியதை மறுபடியும் தருகிறேன்.

 

  1. ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility) ஒன்றா ???
  2. இல்லை என்றால் என்ன வித்தியாசம் ??
  3. கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய் விடுமா ??

போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கம்

ஆண்மை என்று குறிக்கப்படுவது ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிவதை வைத்து. இதை ஆங்கிலத்தில் பொட்டன்சி (Potency) என்று கூறுவார்கள்

எனவே ஒருவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா இல்லையா என்பதை வைத்து, அவர்

  • ஆண்மை உள்ளவரா – பொட்டண்ட் Potent
  • ஆண்மையற்றவரா – இம்பொட்டண்ட் Impotent

என்று கூறலாம்

அதே போல் ஒருவரால் தந்தையாக முடியுமா இல்லையா என்பதை வைத்து

  • பெர்டிலிட்டி – Fertilily
  • மலட்டுத்தன்மை ஸ்டெரிலிட்டி – Sterilily

என்று பிரிக்கலாம்

இது இரண்டும் தனி தனி அம்சங்கள்

உதாரணமாக
கருப்பு, வெள்ளை என்று இரு நிறங்களையும்
பேனா, பென்சில் என்று இரு பொருட்களையும் வைத்துக்கொண்டால்

  1. கருப்பு பேனா
  2. வெள்ளை பேனா
  3. கருப்பு பென்சில்
  4. வெள்ளை பென்சில்

என்று நான்கு சாத்தியக்கூறுகள் உள்ளதை போல்

ஆண்மை, ஆண்மையின்மை, மலடு, மலடில்லை என்று பார்த்தால்

  1. ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம். Potent and Fertile
  2. ஆண்மை குறைவு, தந்தையாகலாம். Impotent and Fertile
  3. ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது. Potent, but sterile
  4. ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது. Impotent, Sterile

என்று நான்கு பிரிவுகள் வரும்

ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம்

  • இதில் தான் பெரும்பாண்மையானவர்கள் உள்ளார்கள் என்பதால் இது குறித்து பெரிதாக விளக்கம் தேவை யில்லை என்று நினைக்கிறேன்

ஆண்மை குறைவு, தந்தையாகலாம்

  • இதிலும் பலர் உள்ளனர். இந்த ஆண்மைக்குறைவு என்பது பெரிய தலைப்பு என்பதால் (வாசகர்களின் ஆதரவு இருந்தால்) சில இடுகைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
  • இந்த பகுப்பில் இருப்பவர்களாம் தாம்பத்திய உறவில் ஈட்பட முடியாமை, சிரமம் ஆகியவை இருக்கும்
  • இதற்கு தகுந்த சிகிச்சை எடுத்தால் போதும்
  • வயகரா, சிட்டு குருவி லேகியம், அல்வா !!! ஆகியவை இங்கு உதவும்
  • இதில் பெரும்பாண்மையான நோய்களுக்கு பூரண குணமடையும் சிகிச்சை உள்ளது.

ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது

  • இது தான் மிக முக்கியமான் விஷயம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்ற விபரமே நாட்டில் பலருக்கும் தெரியாது.
  • இவர்கள் தங்களிடம் குறை உள்ளது என்று தெரியாமல் இரண்டு, மூன்று என்று திருமணம் செய்து கொண்டே போவர்கள்
  • இந்த நிலைக்கு பல காரணங்கள்
  • இதில் சில நோய்களுக்கு சிகிச்சை உண்டு. சில நோயக்ளுக்கு கிடையாது
  • முக்கிய குறிப்பு : கர்ப்பத்தடை செய்து கொள்பவர்கள் இந்த வகையில் சேருவார்கள். கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை குறையாது

ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது

  • இது பல காரணங்களினால் வரும் .
  • அனைத்தும் மருத்துவ பெயர்கள் என்பதால் உங்களை குழப்ப விரும்பவில்லை

ஆண்மை, பெண்மை குறித்து நான் எழுதியவை

  • ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்…… பகுதி 1
  • ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில் : பகுதி 2 : யார் ஆண். யார் பெண்
  • ஆண்மைக்கும் பெண்மைக்கும் இடையில்…… பகுதி 3 : ஹைபோஸ்பேடியாசிஸ்

அடுத்து சில இடுகைகள் சினிமா பக்கம் சென்று விட்டு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மீண்டும் பின்னொரு சமயம் வரலாம் என்று நினைக்கிறேன்

* 03. கிராமப்புற மருத்துவக்கதைகள் – நீங்க தான் சார் முன்னூதாரனம்

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க

முதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.

பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை நாம் கதாநாயகன் 2 (க.நா.2) என்று அழைப்போம்

க.நா.2 : வணக்கம் சார். நான் தான் ___________
நான் : (அவர் பெயரை சொல்லி முடிக்கவும்) வாங்க வாங்க. நானே உங்கள வந்து பாக்கனும்னு நிசச்சேன். நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு எல்லாமே நீங்க தான் சொன்னாங்க. அப்படித்தானே

க.நா.2 : (முகம் பிராகசமாகிறது) பிரெசிடென் எங்க சித்தப்பாதான். ஆனா அவரு வியாபாரத்த பாத்துக்கிறார். யூனியன் ஆபிஸ் (ஊராட்சி ஒன்றிய அலுவலக வேலைகள்) எல்லாம் நாந்தான் பாத்துக்கிறன்

நான் : சொன்னாங்க. நீங்க நினைச்சா இங்க நடக்காதது ஒன்னுமில்லன்னு சொன்னாங்க
க.நா.2 : நாஞ்சொன்னா யாரும் தட்டமாட்டாங்க

நான் : (அலுவலக உதவியாளரிடம்) பி.ஈ.ஈ. சார் ஆபிஸ்ல இருக்கார். அவரை கூப்பிடுங்க. அப்படியே பார்மஸில (மருந்தகம்) இருந்து இரண்டு சேர் எடுத்து போடுங்க

க.நா.2 : ????
நான் : சார் நீங்க உட்காருங்க. உங்க கிட்ட நிறய பேசனும்

அவர் வரவும். “வாங்க பி.ஈ.ஈ சார். உட்காருங்க” என்று அவரையும் அமர வைத்தாகிட்டது

பொது சுகாதார துறையில் ட்டார விரிவாக்க ல்வியாளர் என்று ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒருவர் இருப்பார். இவரை வ.வி.க என்று அழைப்போம். இந்த பதவியை ஆங்கிலத்தில் Block Extension Educator என்று அழைப்பார்கள். பல மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமர்ந்து டேரா போடும் நமது க.நா.2ஐ எப்படி கையாள்வது பல திட்டங்கள் ஆலோசிக்கப்பட்ட போது, இவர் அளித்த திட்டம் சிறந்தது என்று தோன்றவே அதை செயல்படுத்தினோம். அதைத்தான் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

-oOo-

(தற்சமயம் இப்பதிவை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணி புரியும் புது மருத்துவர்களும் படிப்பதால்) கதைக்கு நடுவில் சிறு மேலாண்மை வகுப்பு

எனக்கு கீழ் பணிபுரிபவர்கள் யார் என்றாலும், அவர்கள் என்ன பதவி என்றாலும் அவர்களின் பதவியுடன் சார் / மேடம் / சிஸ்டர் (செவிலியர்களை) சேர்த்தே அழைப்பது என் வழக்கம். ”எச்.ஐ சார்”, ”சி.எச்.என் சிஸ்டர்” , ”டிரைவர் சார்” என்று தான் அழைப்பேனே தவிர பெயர் சொல்லி அல்ல. (அலுவலக ரீதியாக நான் பெயரை மட்டும் சொல்லி அழைப்பது நன்கு பழக்கமான கல்லூரியில் உடன் பயின்ற மருத்துவர்களை மட்டும் தான்)

பல அரசு / தனியார் துறைகளில் / நிறுவனங்களில் வயதில் மூத்தவர் பெரிய பதவிக்கு

  • படிப்பு காரணமாக, அல்லது
  • திறமை காரணமாக, அல்லது
  • அது அவரின் தந்தை / மாமனாரின் நிறுவனம் என்பதால் !!

வருவது நடைமுறையில் அன்றாடம் நிகழும் நிகழ்ச்சி தான்.

ஆனால் இதில் சிக்கலகளும் அன்றாடம் நிகழ்கிறது. இதில் பெரும்பாண்மையான சிக்கல்களுக்கு காரணம், வயதில் மூத்தவர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்காதது தான்.

  • முக்கியமாக தனக்கு கீழ் பணிபுரியும் வயதில் மூத்தவர்களை பெயர் சொல்லி கூப்பிடுவது.
  • அடுத்ததாக தான் உட்கார்ந்து கொண்டு நிற்க வைத்து பேசுவது

நான் இந்த இரு விஷயங்களையும் தவிர்த்தால் தான் இன்று வரை என் பழைய பணியிடங்களில் (3 வருடம் முன் பணிபுரிந்த இடங்கள் உட்பட) நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு (உதாரணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புது கட்டிடம் திறப்பு, அல்லது பணியாளர் வீட்டு திருமணம் / பிற விசேஷங்கள்) அழைப்பு வருகிறது என்று நினைக்கிறேன்.

அலுவலில் தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் வேலை வாங்க / ஆதிக்கம் செலுத்த Reward Power, Coercive power, legitimate power, informational power, referent power, expert power என்ற பல இருக்கின்றன. அனால் இதை எல்லாம் விட்டு விட்டு கிழ் பணிபுரிபவர்களை நிற்க வைத்து பேசுவது, மரியாதை இல்லாத தோனியில் பெயர் சொல்லி அழைப்பது, விரலை நீட்டி பேசுவது என்று தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட முயல்பவர்களை பார்த்தால் எனக்கு சில நேரங்களில் எரிச்சல் வந்தாலும் பல நேரங்களில் (இவ்வளவு முட்டாளாக இருக்கிறார்களே, என்று திருந்த போகிறார்களோ என்று) பரிதாபம் தான் வரும்.

அதில் சிலர் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் இது போன்ற சேட்டைகளை (அதனால் அதில் மிகப்பெரிய நஷ்டம் காத்திருக்கிறது என்பதை அறியாமல்) எல்லாம் செய்வார்கள். அதாவது வாடிக்கையாளர் இவரை பெரிய ஆளாக நினைக்க வேண்டும் என்று. அதன் பிறகு அடுத்த முறை அந்த பணியாளர் மூலம் வாடிக்கையாளருக்கு செல்லும் செய்தியின் மதிப்பு குறைவுதான் என்பதை பலர் அறியவில்லை.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பொது மக்கள் முன்னிலையில் அவர் கீழுள்ள பணியாளரை மரியாதையாக நடத்தவில்லை என்றால், அந்த பணியாளர் அடுத்த முறை களப்பணிக்கு ஊருக்குள் செல்லும் போது அவருக்கு என்ன மரியாதை கிடைக்கும். ?? அதனால் பாதிக்கப்படுவது துறைப்பணி தானே ?? கடைசியில் யார் தலையில் அது வந்து விழும் என்று ஊகிப்பது சிரமமா ??

இது அனைத்து அலுவலகங்கள் / துறைகளுக்கும் பொருந்தும்

-oOo-

நான் : சார் இவர் நம்ம ஊர் பஞ்சாயத் பிரசிடென்ட். (அவர் தலைவர் இல்லை என்று எனக்கு நன்றாகவே தெரியும்)
வ.வி.க : ஆமாம் சார். சாருக்கு நம்ம ஊருல மட்டுமல்ல. இங்க எல்லா ஊருலயும் நல்ல செல்வாக்கு
க.நா.2 : (பெருமை வழிகிறது)

நான் : நான் கூட கேள்விப்பட்டிருக்கேன். ஆஸ்பத்திரி விசயம்னா இவர்தான் முதல்ல நிப்பாருன்னு.
வ.வி.க : ஆமாம் சார். பாதி நேரம் இங்கதான் இருப்பார்.
க.நா.2 : இது முக்கியமான விசயம்ல சார். அதான் நான் இதுல அதிகம் அக்கரையாஇருக்கேன்.

நான் : அதான் நாங்களே உங்கள பாக்க வரனும்னு நினச்சோம். ஆமாம் பசங்களாம் என்ன படிக்கிறாங்க
க.நா.2 : மூத்தவன் நான்காப்பு. (நான்காவது வகுப்பு) அடுத்த பொன்னு ஒன்னாப்பு (முதல் வகுப்பு) இப்ப மூனாவதும் பொன்னுதான். 4 மாசம் ஆகுது

நான் : நீங்க ஏன் உங்க வீட்ல குடும்ப கட்டுபாடு பண்ணிக்கல
க.நா.2 : போன தடவ பண்ணும்னு நினச்சேன். ஆனா பாருங்க என் சம்சாரத்துக்கு உடம்புல தெம்பு இல்ல. ஆபரேசனெல்லாம் தாங்காது.

நான் : அப்படில்லாம் இல்ல. அது சின்ன ஆபரேசன் தான். இங்கேயே பண்ணிக்கலாம். சாயங்காலமே விட்டிற்கு போயிரலாம்.(குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்பது மிக மிக சிறிய அறுவை சிகிச்சை)
க.நா.2 : என் சம்சாரம் வேணாம்னு சொல்றா

நான் : சரி நீங்க பண்ணிக்கிட்டா என்ன ??

தொடர்ந்து வாசிக்க…

பின் குறிப்பு : தற்சமயம் இதை விட சுவாரசிமான சரித்திர தொடர்களை நர்சிம், இளையபல்லவன், ஆகியோர் எழுதி வருகிறார்கள். அதே போன்ற சுவாரசியமான ஆய்வு தொடர்களை வாசிக்க ரத்னேஷ் (பகவத் கீதை), முரளி கண்ணன் (சினிமா), வக்கில் ராஜதுரை (சட்டம்) ஆகியோரின் பதிவுகளுக்கு செல்லுங்கள்.

* 02. கிராமப்புற மருத்துவக்கதைகள் – மருத்துவமனைக்கு சுற்று சுவர் கட்டலாம் வாங்க

இந்த இடுகைத்தொடர் சிறந்த இடுகையாக பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள் பிரிவில் 2008ஆம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டது
இடம் : முதலிடம்

-oOo-

முன்கதை வாசிக்க * 01. கிராமப்புற மருத்துவக்கதைகள் – ஆரம்ப சுகாதார நிலையமும் பணிகளும் செல்லவும்

ஒரு சுபயோக சுபதினத்தில் அங்கு பணிபுரிய எனக்கு மாற்றுப்பணி உத்தரவு வந்தது. உடன் எனக்கு பல அறிவுரைகள் “மருத்துவ விடுப்பு எடுத்து விடு”, “வேறு மாவட்டதிற்கு மாற்றல் வாங்கி விடு” என்ற பலரும் அறிவுறுத்தினார்கள்.

நானும் அந்த மாவட்டத்தில் சேர்ந்ததிலிருந்து அங்கு நடப்பதை கவனித்து வந்தேன். மேலும் கல்லூரி காலங்களில், வினாடிவினா, இசை, போன்ற பல போட்டிகளுக்கு சென்று வந்ததால் கொஞ்சம் தைரியம் அதிகம்.
சரி, என்னதான் நடக்கும், பார்த்துவிடுவோம் என்ற தைரியத்துடன் சென்று பணியேற்றுவிட்டேன்.

செல்லும் போதே அரசு பணியில் இருந்த மூத்தமருத்துவர்களில் (சீனியர்களிடம்) அவர்களின் அனுபவத்தை கேட்டு தெரிந்துகொண்டேன். அவர்கள் இது போன்ற சூழ்நிலைகளில் கடைபிடித்த நடைமுறைகளை பகிர்ந்து கொண்டனர். என்ன பிரச்சனைகள் அங்கு உள்ளன, தொல்லை தருபவர்கள் யார் போன்ற விபரங்களை விசாரித்து, அதை எல்லாம் எனக்கு முன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி புரிந்த மருத்துவர்களிடம் கூறி அவர்கள் ஆலோசனையுடனே சென்றேன்.

ஆரம்ப சுகாதாரத்தில் பணியேற்று ஒரு வாரம் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் சென்று கொண்டு இருந்தது. அதன் பின் ஒரு நாள் காலையில் நம்ம கதாநாயகன் (இவரை க.நா.1 என்று அழைப்போம்) வந்தார். நான் புறநோயாளி பகுதியில் அமர்ந்து பிணியாளர்களை பரிசோதித்து கொண்டிருந்தேன். (இந்த குறிகளுக்கு உள் இருப்பது பேசப்பட்டது அல்ல)

க.நா.1 : வணக்கம் சார். நான் தான் ___________ நம்ம ஊரில் உள்ள _______ நற்பணி மன்றத்தின் செக்ரட்டரியா இருக்கேன்

நான் : வணக்கம். சொல்லுங்க

க.நா.1 : நீங்க புதுசா வந்துருக்கீங்கன்னு சொன்னாங்க. பாக்க வரனும்முன்னு நினைச்சேன். கலெக்டராபீசில வேலை. (வேற என்ன. மனு கொடுப்பது தான்) அதான் வர முடியல. நேத்து கூட கலெக்டர்ட பேசிட்டுத்தான் வரேன் (திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு நீதி நாள் நடக்கும். யார் வேண்டுமென்றாலும் மாவட்ட ஆட்சித்தலைவரை சென்று பார்க்கலாம். நேரில் மனு அளிக்கலாம். குறைந்தது 250 முதல் 300 பேர்கள் வரை அளிக்கும் மனுக்களை வாங்கி அனைவரிடமும் புன்னகைப்பது என்பது இ.ஆ.ப வேலையின் ஒரு பகுதி)

நான் : சொல்லுங்க. என்ன விஷயம். நானும் உங்களை பாக்கனும்னு நினைச்சிட்டிருந்தேன்
க.நா.1 : நம்ம பின்னாடி ஒரு 400 பசங்க இருக்காங்க. உங்களுக்கு என்ன ஹெல்பு வேணும்னாலும் கேளுங்க. கண்டிப்பா பண்ணலாம். நம்மாள முடியாததுன்னு ஒன்னுமே கிடையாது

நான் : நான் சொல்ல வந்ததும் இதுதான். இந்த ஆஸ்பத்திரி (ஆரம்ப சுகாதார நிலையங்களையும் ஆஸ்பத்திரி என்று தான் கிராமப்புறங்களில் அழைப்பது வழக்கம்) கட்டி 30 வருஷத்திற்கு மேல ஆச்சு
க.நா.1 : ம்ம்ம்

நான் : ஆனா பாருங்க ஒரு காம்பவுண்ட் கூட கிடையாது.
க.நா.1 : ஆமா சார். யாருக்குமே அக்கரை கிடையாது

நான் : அதான். நீங்க ஒரு காம்பவுண்ட் கட்டி தரலாம்ல
க.நா.1 : ……. (திருட்டு முழி முழிக்கிறார்) (வாயா வா.. இப்படி உன்னை முழிக்க வைக்கத்தானே 2 வாரம யோசித்து ஒரு திட்டத்துடன் வந்தேன்)

நான் : நீங்க வராட்டா கூட நானே உங்கள வந்து பாக்கலாமுன்னு இருந்தேன். சாயாங்காலம் சர்வேயர வரச்சொல்லி இருக்கேன். அவர் வந்து அளந்து ”பொழி” (நில அளவு குறித்த வட்டார வழக்கு) பாத்து குச்சி அடிச்சிட்டாருன்னா (நிலம் அளந்த பின், அந்த எல்லை தெரிய சிறு மரக்குச்சிகளை நிலத்தில் நட்டி வைப்பது) நீங்க வேலை ஆரம்பிச்சிரலாம்

க.நா.1 : அது சரி சார், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு நாங்க எப்படி காம்பவுண்ட் கட்ட முடியும். அது கவர்மெண்ட தானே கட்டனும். நான் வேனும்னா நம்ம கலக்டர் சார்ட பேசட்டா (வேறு ஒன்றும் இல்லை. அடுத்த திங்கள் மனு அளிப்பது தான்)

நான் : பேசுங்க. ஆனா அது பெரிய விஷயம். கலெக்டர் சார் அதை சென்னைக்கு அனுப்பி, அது பல இடங்களுக்கு போகும். உடனே வேலை நடக்காது

க.நா.1 : இல்லை . நாங்க கட்டி தந்தா அத கவர்மெண்ட ஒத்துக்காதே (புத்திசாலி என்று நினைப்பு !!!)

நான் : அதெல்லாம் இல்லை. யார் வேண்டும்னாலும், நிலம், கட்டிடம், உபகரணங்கள், வாகனங்கள் நன்கொடை தரலாம். நீங்க காம்பவுண்ட் சுவர் கட்டித்தாரீங்க அவ்வளவுதான்

க.நா.1 : சரி சார். நான் யோசித்து விட்டு சொல்றேன்

நான் : என்ன சார் யோசிக்க இருக்கு. உங்க ஊர். உங்க ஆஸ்பத்திரி. நீங்க தான் ஊரில பெரிய மனுஷன் (அப்படி போடு அருவாள) நீங்க கட்டாம யார் கட்டுவா காம்பவுண்ட. அதுவும் உங்க பின்னாடி 400 பேர் வேற இருக்காங்க

க.நா.1 : …..(மீண்டும் திருட்டு முழி)
நான் : என்ன யோசனை.
க.நா.1 : நான் நம்ம பசங்க கிட்ட கேட்டுகிட்டு சொல்றேன் சார்

நான் : சரி. கேட்டுக்கோங்க. சாயங்காலம் 4 மணிக்கு வாங்க. சர்வேயர் வரார்
க.நா.1 : இல்ல இல்ல…. அவர பெரகு வரச்சொல்லுங்க. நான் மத்தவங்கிட்ட கேட்டுகிறேன்

நான் : சரி கேட்டுக்கோங்க

அதன் பிறகு ஒரு வாரம் நிம்மதியாக கழிந்தது.

ஒரு வாரம் கழித்து நம் கதாநாயகன் வந்தார். கூடவே நாலைந்து பேர். (தனியா வந்து பேசத்தெரியாம மாட்டிய அனுபவம் போலிருக்கிறது)

க.நா.1 :சார், நம்ம பசங்க கிட்ட எல்லாம் பேசுனோம். அவங்க காம்பவுண்ட் கட்ட பணம் நிறைய ஆகுமுன்னு சொல்றாங்க

நான் :கண்டிப்பா ஆகும். ஆனா உங்களால முடியாததா. நீங்க தான் இந்த ஊர்ல பெரிய மனுசன்னு சொன்னாங்க. எப்பவும் ஆஸ்பத்திரிலேயே இருக்கீங்க. நீங்க தானே பண்ணனும், நீங்க தனியாவா பண்ணுறீங்க. இவங்கல்லாம் இருக்காங்கல தனியா பண்ணிணாதான் கஷ்டம். இவங்களும் உங்க கூட தானே இருக்காங்க (கூட வந்தவர்கள் பார்த்த பார்வையிலிருந்து அடுத்த முறை அவர்கள் துனைக்கு வரமாட்டார்கள் என்று தெரிகிறது)

க.நா.1 :அது வந்த வெள்ளாம சரியில்ல. (வயல் விளைச்சல் சரியில்லை) அதான் பணம் புரட்டுறது கொஞ்சம் கஸ்டம். நாம வேணும்முன்னா அடுத்த வருசம் பாக்கலாமே

நான் :என்னங்க நீங்க. நீங்க தானே முக்கியமான ஆளு. நீங்க பண்னாம யாரு பண்ணுவா. இப்படி சொன்னா எப்படி

இதற்குள் அவர்களுக்குள் சைகை காட்டி வெளியில் சென்று விட்டனர். நான் மேலும் சில நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு 15 நிமிடம் கழித்து மீண்டும் அறைக்குள் வந்தனர்

க.நா.1 :சார், நம்ம பசங்க என்ன சொல்றாங்கனா, காசு கொடுக்கிறது கஷ்டம். ஆனா ஆஸ்பத்திரிக்காக வேலை எவ்வளவு வேணும்மினாலும் பாக்கலாம். என்னயா, நான் சொல்றது கரெக்டா

அனைவரும் வேக வேகமாக தலையாட்டுகிறார்கள்

நான் :உங்களாக தினமும் எவ்வளவு நேரம் இங்க இருக்க முடியும்

அனைவரின் முகத்திலும் “பல்பு” எரிகிறது. பிறகு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பிரச்சனை பண்ணுவது தானே அவர்களின் முக்கிய வேலை

க.நா.1 : மத்தியானம் பூரா இங்கதான் சார் இருப்போ்ம்
நான் :சரி அப்ப நீங்க காசு தர வேண்டான். ஒரு வேள பாத்தா போதும்

க.நா.1 :சொல்லுங்க சார் என்ன வேலை
நான் : வானம் தோண்டுறது தான் (கட்டிடங்களின் அஸ்திவாரத்திற்காக நிலத்தில் குழி தோண்டுவது)

மெதுவாக திகைத்து பராக்கு பார்த்தவர்கள் அனைவரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கிறார்கள்

க.நா.1 :??
நான் :சர்வேயர கூப்பிடு பொழி பாத்து குச்சி அடிச்சிரலாம். நீங்க எப்ப இங்க வர்றீங்களோ அப்ப கொஞ்ச கொஞ்சமா தோண்டுனா போதும்

க.நா.1 :கல், சிமெண்ட் எல்லாம்
நான் :வானம் தோண்டி அத போட்டோ எடுதது அனுப்புனா , ஸ்டெர்லைடுல அல்லாட்டி ஸ்பிக்ல கல் வாங்க காசு தருவாங்களாம். அத் வச்சு கட்டிறலாம் (ஸ்டெர்லைட், ஸ்பிக் ஆகியவை அங்குள்ள தனியார் நிறுவனங்கள்)

க.நா.1 கூட வந்தவர்களில் ஒருவர் : அப்ப நாங்க தான் தோண்டனுமா
நான் : (எலி பொறியில் மாட்டியது என்று தெரிந்தவுடன்) இத பாருங்க. நீங்க உங்க வேலய போட்டுகிட்டு ஆஸ்பத்திரிக்கு வேல பாக்க வேணாம். மத்தியாணம், வேல் இல்லாட்ட ஆடு புலி ஆடுற நேரத்துல கொஞ்சம் மம்மட்டி, கடப்பாற புடிச்சா ஒரு 3 வாரத்துல முடிச்சிரலாம். . கொஞ்ச எல்லாரும் வாங்க காட்றேன்

என்று கூறி அப்படியே சுகாதார நிலைய கட்டிடத்தின் வெளிப்புறம் அழைத்து சென்று “அங்கிருந்து இது வரை” “இதிலிருந்து அது வரை” என்று காட்டினேன்.  அந்த வளாகத்தின் மொத்த அளவு 10 ஏக்கர். அப்படி என்றால் சுற்று சுவர் கட்ட வேண்டிய நீளம் எவ்வளவு பெரிது என்று எண்ணிக்கொள்ளுங்கள். சுட்டியை சுட்டினால் உங்களுக்கு அந்த ஆரம்ப சுகாதார நிலைத்தையும் அதன் அருகிலுள்ள பிற இடங்களையும் வானிலிருந்து உங்களுக்கு பிடித்தமான உயரத்தில் இருந்து காணலாம்

அப்படியே அவர்களை பின்னால் அழைத்து சென்று சமையல் மற்றும் நீர் தொழிலாளியிடம் சென்று (cook cum washer woman) ”இவங்களாம் நம்ம ஆஸ்பத்திரிக்கு காம்ப” என்று வார்த்தையை முடிக்கும் முன்னர்….ஒருவர் குறுக்கிட்டு “இல்லை இல்லை. வானம் தான் தோண்டுறோம்” என்று அவசரமாக கூறி்னார்

நான் :அதான் இவங்க எப்ப வந்தாலும் அந்த கடப்பாரயும் மம்மட்டியும் கொடுத்துருங்க (கடப்பாரை, மண்வெட்டி)
சமையல் மற்றும் நீர் தொழிலாளி :(அரண்டுபோய்) சரி சார்

க.நா 1 : சரி சார், எனக்கு மணியாச்சில ஒரு சோலி இருக்கு. போயிட்டு வந்துட்றேன் (நீங்கள் திருநெல்வேலி, நாகர்கோயிலுக்கு தொடர்வண்டியில் செல்லும்போது வருமே அதே வாஞ்சி மணியாச்சிதான்)
நான் : சரிங்க. எப்ப வேணும்னாலும் வாங்க. என்ன பாக்க வேண்டாம். நீங்களே வேலைய ஆரம்பிக்கலாம்

அதன் பிறகு அந்த கூட்டத்தை நெடுநாள் கழித்தே பார்த்தேன் என்றும் அதுவும் அவர்களுக்கு எதாவது உடல் நலக்குறைவு என்றால் மட்டுமே வந்தனர் என்றும் சொல்லவும் வேண்டுமா.

ஆரம்ப சுகாதார நிலையமும் எந்த பிரச்சனையும் இல்லாம்ல் சென்று கொண்டிருந்தது. இப்படியாக ஒரு கும்பலை விரட்டிய செய்தி மெதுவாக பரவியிருக்கும் என்று நினைக்கிறேன்.

இதற்கும் நண்பர்களுடன் கூடி பேசி (அடுத்த கும்பலை பற்றிய விபரங்களை சேகரித்து) அவர்களுக்கு ஏற்ற மேலும் சில திட்டங்களை த்யாரித்து வைத்திருந்தோம்

முதல் கும்பல் சுகாதார நிலையம் பக்கம் தலை வைப்பதில்லை என்று தெரிந்த சில வாரங்களில் அடுத்த கும்பலிலிருந்து சிலர் வர ஆரம்பித்தனர். ஆனால் அலம்பல் செய்ய வில்லை.

பிறகு ஒரு நாள் அந்த அடுத்த கோஷ்டி தலைவர் வந்தார். அவரை நாம் கதாநாயகன் 2 (க.நா.2) என்று அழைப்போம்

தொடர்ந்து வாசிக்க…